India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மார்ச் இரண்டாவது வாரத்தில் நெல்லையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சையில் இன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அடுத்த நிகழ்ச்சியை மார்ச் இரண்டாவது வாரத்தில் நெல்லையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தவெக வினர் தெரிவித்துள்ளனர்.

நாங்குநேரியில் சாலையில் செல்பவர்களை அரிவாளால் வெட்டி கொடூர தாண்டவம் ஆடிய கும்பல் பைக்குகளில் மஞ்சங்குளத்திற்கு சென்றனர். அங்கு ஒருவரின் பெயரை(அவரது சமூகத்துடன்) சத்தமாக கூறி வாழ்க கோசமிட்டனர். அப்போது பைக்கில் இருந்து ஒருவர் கீழே விழுந்தார். அவரை தூக்கி விட முயன்ற அப்பகுதி மக்களை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் உதவிக்கு வந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.

நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த 5 பேர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கணேசன் என்பவர் உயிருக்கு போராடி வருகிறார். இவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். நெல்சனின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவருக்கு நேற்று 5 மணி நேரத்திற்கு மேல் ஆபரேஷன் நடந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று திருச்செந்தூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் கோட்டுரை சேர்ந்த நம்பி அம்மாள் என்ற மூதாட்டி ஏறினார். பஸ் சற்று தொலைவில் உள்ள கோர்ட்டை கடந்து சென்றபோது மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் நகை திருட்டு போனதாக சத்தம் போட்டார். டிரைவர் பேருந்தை பாளை ஸ்டேஷனிற்கு ஓட்டி வந்தார். குற்றப்பிரிவு போலீசார் 60 பயணிகளிடம் சோதனை நடத்தினர். நகைகள் சிக்கவில்லை.

இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணியைத் தாண்டி சந்திர கிரகணம் நீடித்தது. இதை பார்வையிட நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 6.30 மணி முதல் பொதுமக்கள் அறிவியல் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு கருவி மூலம் சந்திரன் தோற்றத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

நாங்குநேரியில் நேற்று இரவு இரண்டு பேர் கொலை செய்யபட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதில் 2023ம் ஆண்டு மாணவர் சின்ன துரையை தாக்கிய வழக்கில் கைதான சுபாஷ், கல்யாணி ஆகிய இருவர் தற்போது நாங்குநேரியில் இரட்டை கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னதுரையை தாக்கிய வழக்கில் கைதான 2 பேர் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்னும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது

நெல்லை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

நாங்குநேரியில் நேற்று இரவு சாமானிய மக்கள் மீது சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும், சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என இயக்குனர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கடம்போடுவாழ்வு மற்றும் பெரும்பத்து பகுதிகளில் நேற்று இரவு போதை கும்பல் நடத்திய அரிவாள் வீச்சில் இருவர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை, நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்திற்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை வெட்டிச் சாய்த்த கொடூரம். பெரும்பத்து கிராம மக்கள் ஒன்று கூடி, நீதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட முயன்றபோது போலீசார் பேரிகார்டுகளை வைத்து தடுத்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
Sorry, no posts matched your criteria.