Tirunelveli

News December 19, 2024

முன்னீர்பள்ளத்தில் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு 

image

நெல்லையில் மதுவிலக்கு மற்றும் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட  24 வாகனங்கள் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் நாளை(டிச.20) காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இன்று மாலை 5 மணி வரை வாகனங்களை நேரில் பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும் என மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 19, 2024

நெல்லை மருத்துவக் கழிவில் 2 பேர் கைது

image

நெல்லையில் புறநகர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் தலைமை ஏஜெண்டாக செயல்பட்ட சுத்தமல்லியை சேர்ந்த மனோகர், மாயாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News December 19, 2024

முன்னீர்பள்ளத்தில் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு 

image

நெல்லையில் மதுவிலக்கு மற்றும் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட  24 வாகனங்கள் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் நாளை(டிச.20) காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இன்று மாலை 5 மணி வரை வாகனங்களை நேரில் பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும் என மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 19, 2024

மாவட்டத்தில் 0.20 மழை அளவு பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12, 13 ஆகிய இரு தினங்களில் இடைவிடாது தொடர் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இன்று(டிச.19) காலை மழை அளவு குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் மணிமுத்தாறில் 0.20 அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News December 19, 2024

நெல்லை சம்பவத்தை தொடர்ந்து இபிஎஸ் கண்டனம்

image

கேரளா மாநிலம் மருத்துவ கழிவுகளை நெல்லை மாநகர நடுக்கல்லூர் பகுதியில் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அண்டை மாநிலத்தின் மருத்துவ கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்க கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார் என மு.க ஸ்டாலினை குற்றம் சாட்டியுள்ளார்.

News December 19, 2024

கேரள கழிவுகளை பார்ப்பதற்காக கேரள பத்திரிகையாளர்கள் இன்று வருகை

image

நெல்லை சுத்தமல்லி அருகே கேரள கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அந்த சம்பவம் குறித்த முழு தகவல்களையும் சேகரிப்பதற்காக கேரள மாநில பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இன்று(டிச.19) நடுக்கல்லூர் பழுவூர் கொண்டாநகரம் பகுதிகளுக்கு நேரில் வருகிறார்கள். மேலும் இன்று அந்த கழிவுகள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

News December 19, 2024

யுபிஐ மோசடி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட சைபர் கிரைம் நேற்று(டிச.17) விடுத்துள்ள அறிக்கையில், இணையதளத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் UPI REQUEST MONEY FRAUD பண மோசடி அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரியாமல் உங்களுக்கு பணத்தை மாற்றி அனுப்பிவிட்டதாக கூறுவார்கள். இதை பொருட்படுத்த வேண்டாம் என கூறிப்பிடப்பட்டுள்ளது.

News December 18, 2024

கல்குவாரியில் பாறையில் சிக்கிய தொழிலாளி உடல் மீட்பு

image

இருக்கன்குறை அருகே தனியார் கல்குவாரியில் இன்று(டிச.18) மாலை பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 4 பேரில் நாகர்கோவிலை சேர்ந்த அருண்குமார் என்பவர் மட்டும் சம்பவ இடத்திலேயே பலியானார். 3 பேர் படுகாயத்துடன் ராதாபுரம், தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனர். இது குறித்து கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 18, 2024

நெல்லை பேராசிரியருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

image

நாடு முழுவதும் எழுத்தாளர்களுக்கு இன்று(டிச.18) சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்ற ஆய்வு நூலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 18, 2024

நெல்லை மாவட்டத்தில் படிப்படியாக குறையும் மழை

image

நெல்லை மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைந்து வருகிறது. இன்று (டிச.18) காலை வரை நிலவரப்படி மாஞ்சோலை, பாபநாசத்தில் 1, காக்காச்சியில் 2. நாலு முக்கில் 6, ஊத்தில் 4, களக்காட்டில் 3.20 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 17.20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது என்று கலெக்டர் கார்த்திகேயன் இன்று(டிச.18) தெரிவித்தார்.

error: Content is protected !!