India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் முக்கிய குளங்கள் தூர்வாரும் பட்டியலை என்னிடம் கொடுங்கள். அதற்கு உடனடியாக நிதி பெற்றுத் தர நான் தயாராக இருக்கிறேன். அவசரமாக உடனடியாக தூர் வாரும் குளங்களின் பட்டியலை அறிக்கையாக தருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என கலெக்டர் கார்த்திகேயன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்தார்.
பாளையங்கோட்டை நீதிமன்றம் முன்பு வாலிபர் ஒருவர் நேற்று(டிச.20) வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஷ்குமார் மீனா இந்த சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேடிக்கை பார்த்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா கூறுகையில், கொலை செய்யப்பட்ட மாயாண்டி கொலை வழக்கு உள்பட சிறு வழக்குகளில் தொடர்பு உடையவர். கொலை வழக்கு தொடர்பு உடைய நபர்களை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்வது வழக்கம். இதனால் பல குற்ற சம்பவங்களை போலீசார் தடுத்துள்ளனர். மாயாண்டி கொலை சம்பவத்தில் பாதுகாப்பு பணி போலீசார் வேடிக்கை பார்த்தனரா? என விசாரணை நடத்தப்படும் என்றார்.
வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நேரம் மாற்றப்படுகிறது. நெல்லையிலிருந்து இரவு 8.05 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்படும். இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணி போர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கலைஞர் கைவினை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.In/kkt என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.
நெல்லையில் கொட்டப்பட்டுள்ள கேரளா மருத்துவ கழிவுகள் அபாயகரமானது இல்லை என கேரளா அதிகாரிகள் குழுவினர் இன்று (டிச.20) தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அபாயகரமானதில்லை என்றால் இவ்வளவு செலவு செய்து கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டப்பட காரணம் என்ன? என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேரளா அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.
திருநெல்வேலி நீதிமன்றம் முன்பு இன்று (டிச.20) காலை மாயாண்டி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கொலை சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
நெல்லை நீதிமன்றம் முன்பு இன்று (டிச.20) காலை மாயாண்டி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நெல்லை நீதிமன்றத்தில் போலீசார் பாதுகாப்பு இருந்தும் கொலை நடந்தது எப்படி என வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதிலை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணல் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று(டிச.20) டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் கலந்து கொண்டார். இதில் பிரியங்கா காந்தி உட்பட முக்கிய எம்பிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.