India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாநகர காவல் எல்லைப் பகுதியில் ஏற்கனவே உள்ள சோதனை சாவடிகளுடன் சேர்த்து நேற்று முதல் கூடுதலாக 6 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் போலீசார் துப்பாக்கியுடன் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். இன்ஸ்பெக்டர் தலைமையில் நான்கு போலீசார் வீடியோ கேமரா உதவியுடன் சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கல்லூர் அருகே கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு கழிவுகள் நேற்று அப்புறப்படுத்தப்பட்டது. அதில் நேற்று மற்றும் 18 லாரிகளில் கழிவுகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, இன்று (டிச.23) 12 லாரிகளில் மருத்துவ கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 30 லாரிகளில் கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கழிவுகள் கொட்டப்பட்ட ஆறு இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1 முதல் நெல்லை வழியாக செல்லும் தாம்பரம் – நாகர்கோவில் (20691) அந்தியோதயா அதி விரைவு ரயிலின் நேரம் இரவு 11 மணிக்கு பதிலாக 10:40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போல் பல்வேறு ரயில்களில் கால அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது. ஏராளமான ரயில்கள் சென்னையில் இருந்து அரை மணி நேரம் அல்லது கால் மணி நேரம் புறப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி, நெல்லை மாவட்ட காவல் சரக பகுதிகளில் இன்று (டிச.23) இரவு முதல் நாளை காலை வரை ஆய்வு பணி மேற்கொள்ளும் அதிகாரிகளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு அவசர காவல் தேவைப்படுபவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முன்னீர் பள்ளம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்ற சங்கர் என்பவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கேட்டுக் கொண்டதற்கிணங்க எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையை அடுத்து கலெக்டர் உத்தரவின்படி இன்று சங்கரலிங்கம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரளாவின் மருத்துவ கழிவுகளை மேலாண்மை செய்வதில் மாநில அரசு தவறிவிட்டதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. கழிவுகளை திருநெல்வேலியில் சட்டவிரோதமாக கொட்டியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் அரசுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தொலைபேசி மூலம் அறிமுகமில்லாத நபர் உங்களை தொடர்பு கொண்டு தெரியாமல் உங்களுக்கு பணத்தை மாற்றி அனுப்பிவிட்டதாக கூறுவார்கள். அந்த நபர் கூறிய தொகை உங்கள் வங்கி கணக்கிற்க்கு வரவு வைக்கப்பட்டது போல் குறுஞ்செய்தி (SMS) ஒன்று வரும் என கூறி பணத்தை மொத்தமாக மோசடி செய்து விடுவார்கள்.எனவே இது போன்று SMS வந்தால் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.
நெல்லை மாவட்ட அளவில் வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 26ஆம் தேதி காலை 10 மணி முதல் நடத்த கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. எமிஸ் இணையதளம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் இதற்கான முன்னுரிமை நபர்கள் விவரம் பட்டியலாக தயாரிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நாளை(டிச.24) தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 10:30 மணிக்கு நெல்லைக்கும், 11.10 மணிக்கு வள்ளியூருக்கும் வந்து சேரும். தொடர்ந்து இந்த ரயில் கன்னியாகுமரி வரை இயக்கப்படுகிறது. விடுமுறை கொண்டாட்டத்திற்கு செல்பவர்கள் இந்த ரயிலை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தாம்பரத்திலிருந்து நெல்லை வழியாக செல்லும் கன்னியாகுமாரி வரை செல்லும் சிறப்பு ரயில் வ.எண்-06039, நாளை(டிச.24) தாம்பரத்திலிருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30க்கு நெல்லை வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Sorry, no posts matched your criteria.