India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக இன்று ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில் மாவட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் கடும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக முந்தைய ஆண்டை காட்டிலும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது என கூறியுள்ளார்.
பிசானபருவ சாகுபடிக்காக, கூடுதலாக 1500 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் நெல்லைக்கு, வெளியிடங்களிலிருந்து ரயில் மூலம், இன்று (டிச.25)வந்து சேர்ந்தது. இதில், 800 மெட்ரிக்டன் தென்காசி மாவட்டத்திற்கும், 450 மெட்ரிக்டன் நெல்லை மாவட்டத்திற்கும், 150 மெட்ரிக்டன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும்,100 மெட்ரிக் டன் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பிரித்து, லாரிகள்மூலம் அனுப்பப்பட்டதாக, நெல்லை வேளாண்துறை தெரிவித்துள்ளது
நெல்லை, வள்ளியூர் வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா ரயில் நேரம் ஜனவரி 1ம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேரப்படி இரவு 10:40 மணிக்கு தாம்பரத்தில் இந்த ரயில் புறப்படும், மறுநாள் பகல் 11 மணிக்கு நெல்லைக்கு வந்து, பின்னர் வள்ளியூர் வழியாக நாகர்கோவில் செல்லும் என தென்னக ரயில்வே ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று(டிச.24) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் அஞ்சல் அடையாள அட்டை விநியோகிக்கப்படுவதால் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம், இதற்கான விண்ணப்ப படிவங்களை ரூ.20 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் அடையாள அட்டை வழங்கப்படும்.
நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று(டிச.24) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் அஞ்சல் அடையாள அட்டை விநியோகிக்கப்படுவதால் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம், இதற்கான விண்ணப்ப படிவங்களை ரூ.20 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் அடையாள அட்டை வழங்கப்படும்.
ராதாபுரம் சமத்துவபுரத்தில் பெரியாரின் 51வது நினைவு தினம் நேற்று (டிச.24) அனுசரிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது: தமிழக அரசு திவாலாகும் என ஒரு சிலரின் ஆசையாக உள்ளது, அது ஒருபோதும் நிறைவேறாது, ஆல் பாஸ் திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளதை தமிழக அரசு செயல்படுத்தாது என அவர் தெரிவித்திருந்தார்
நெல்லையில் மாநகர போலீஸ் சட்டம் 1992-ன் படி நெல்லை மாநகரில் நேற்று(டிச.25) முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொது அமைதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா நேற்று ( டிச.24 ) தெரிவித்தார்.
நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி ஆணையர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.24) இரவு அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.
நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பைக் ரேஸ், பைக் வீலிங்கில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று மாலை முதல் நாளை காலை வரை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடஉள்ளனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேளாண்மை இயந்திரம் ஆக்குதல் துணை இயக்கத் திட்டத்தில் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட் கட்டுப்படுத்தும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பெற்று நெல்லை வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் 9025732083 என்ற தொடர்பு கொண்டு பயன்படுத்தலாம் என்றார்.
Sorry, no posts matched your criteria.