Tirunelveli

News December 28, 2024

நெல்லைக்கு வரும் முதல்வர்; அறிக்கை வெளியீடு 

image

பாளை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நேற்று(டிச.27) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 29,30,31 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளார். இதனை தொடர்ந்து வருகின்ற டிச.30ஆம் தேதி காலை 10 மணிக்கு கேடிசி நகர் ரவுண்டானா அருகில் வரவுள்ள முதல்வருக்கு அழைப்பு தர அனைத்து நிர்வாகிகளும் வருகை தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

News December 28, 2024

பாளையங்கோட்டையில் மாரத்தான் போட்டி

image

தி ஃபெடரல் மற்றும் பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியர் கல்லூரி இணைந்து நடத்தும் நெல்லை மாரத்தான்- 2024 போட்டி பாளையங்கோட்டையில் நாளை(டிச.29) நடக்கிறது. காலை 6:00 மணிக்கு பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியத்திலிருந்து தொடங்குகிறது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கொடியசைத்து இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். *ஷேர்*

News December 28, 2024

நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள்

image

இன்று(டிச.28) காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த மாணவர்கள் சந்திக்கும் விழா நடைபெறுகிறது. பிற்பகல் 2:30 மணிக்கு மாவட்ட அறிவியல் மையத்தில் கோயில் வன பாதுகாவலர் விருது வழங்கும் விழா நடக்கிறது. பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில் இன்று மாலை 4:30 மணிக்கு சனி பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News December 28, 2024

போக்சோ குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

image

மானூர் அருகே உள்ள அளவந்தான் குளத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி (62). இவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக மானூர் போலீசார் இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நெல்லை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபத்ராதேவி கருப்பசாமிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார். 

News December 27, 2024

நெல்லை மாவட்ட ரோந்து காவல் அதிகாரிகள் விவரம் வெளியீடு 

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.

News December 27, 2024

நெல்லையில் இலவச பயிற்சி வகுப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில்  டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி பெருமாள்புரம் சிதம்பரம் நகரில் நடைபெற உள்ளது. இதில் வாராந்திர மாதிரி தேர்வு மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் தொடர்புக்கு 0462-2902248 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 27, 2024

வள்ளியூரில் ரூ 10,000 மதிப்புள்ள ஆடு திருட்டு

image

வள்ளியூரை சேர்ந்தவர் சுடலை கண்ணு மனைவி மணிபாலா (46). இவர் வீட்டிற்கு முன்புறம் உள்ள  இடத்தில் 10 ஆடுகளை கட்டி வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் ஆடுகளுக்கு இழை தழைகளை வைக்க சென்றபோது ஒரு ஆடு மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.10,000 ஆகும். இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் இன்று (டிச.27) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 27, 2024

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையின் விவரங்கள்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று(டிச.27) அதிகாலை பெய்த மழையின் விவரம் பின்வருமாறு: அம்பாசமுத்திரம் – 7.20 மி.மீ, மணிமுத்தாறு -1.20 மி.மீ, திருநெல்வேலி – 2.00 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டு – 1.00 மி.மீ, மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. சாரல் மழை பெய்த இடங்களில் முழுவதுமான விவரங்கள் அறிய முடியவில்லை.

News December 27, 2024

ரூ.3 லட்சம் வரையிலான அரசு தொழிற்கடன் – ஆட்சியர் 

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(டிச.26) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில் செயல்படும் இந்த திட்டத்தில் 25 வகையான தொழிற்கடன் வழங்கப்படும். கடன்களுக்கு 25% மானியம் & 5 % வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. ரூ.3 லட்சம் வரையிலான கடன் வழங்கவும், ஆண்டுதோறும் 10000 கைவினை கலைஞர்களுக்கு இந்த திட்டத்தின் படி தொழிற்கடன் வழங்கப்படுகிறது. *ஷேர் செய்யவும்*

News December 27, 2024

நெல்லையில் TNPSC தோ்வுக்கான இலவச பயிற்சி – ஆட்சியா்

image

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் 2025ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வுக்கான அறிவிக்கை ஏப்ரல் மாதம் வெளிவரும் என அறிவித்துள்ளது. இந்த தோ்வுக்காக, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஜன.2 ஆம் தேதி முதல் காலை 10.30 மணிக்கு தொடங்கப்படும். வாரந்தோறும் முழு மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். தோ்வுக்குரிய புத்தகங்கள் அலுவலக நூலகத்தில் உள்ளன*ஷேர்*

error: Content is protected !!