India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை சௌந்தர சபையில் காந்திமதி அம்பாளுக்கு சௌந்தர சபாபதி திருநடன காட்சி தரும் உற்சவமும், நாளை மறுநாள் கோவில் பொற்றாமரை குளத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், 9 முதல் 15 வயதுடைய இளம் தலைமுறை உங்களை ‘கடலாக’ கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களை ஏன், எப்படி நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை கருப்பொருளாக வைத்து கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாக அஞ்சல் துறை தலைவர் சென்னை, நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு வருகிற 18-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றார்.
திருச்செந்தூரில் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இன்றும் நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அதிகளவில் ஏறியதால், வழக்கமாக ரயிலில் செல்லும் அலுவலர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் இடம் கிடைக்காமல் சிரமப்பட்டனர். பலர் நின்று கொண்டு பயணித்தனர். எனவே முக்கிய திருவிழா நாட்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை எழுந்துள்ளது
#இன்று(பிப்ரவரி 12) காலை 10 மணிக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10.30 மணிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்கலன் வண்டிகளை வழங்கும் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.
நெல்லை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது, “நெல்லை வண்ணாரப்பேட்டையில் இஎஸ்ஐ மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உள் நோயாளிகள் படுக்கை வசதியை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். மேலும் எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்” என்றார் .
நெல்லை மாவட்ட காவல்துறை நேற்று(பிப்.11) வெளியிட்ட செய்தி குறிப்பில், நெல்லையில் சமூக வலைத்தளங்களை போலீசார் உண்ணிப்பாக கண்காணித்து வருகின்றனர். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.
முக்கூடல் அருகே மருதமுத்தூர் பகுதி சேர்ந்த ராமையா (35 )என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அருள்ராஜ் ,சுந்தர், அவரது அண்ணன் தாமரைச்செல்வன் ஆகிய மூன்று பேர் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அருண்குமார் (37 )என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சந்திப்பு ரயில்வே டிஎஸ்பி இளங்கோவன் பரிந்துரையின்படி நெல்லை போலீஸ் மாநகர கமிஷனர் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் அருண்குமார் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை சந்திப்பு ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் கற்களை வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவும். விளையாட்டு தனத்தை ரயில் வழித்தடத்தில் காட்டக்கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் 8 வது பொருநை புத்தகத் திருவிழா கடந்த ஜனவரி 31 தொடங்கி நேற்று வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 124 அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 11 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் ரூ.1.8 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.