Tirunelveli

News January 16, 2025

நெல்லை – தாம்பரம் வரை மட்டுமே சிறப்பு ரயில் சேவை!

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணி காரணமாக, திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 16,23,30 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து மாலை 6:45 மணிக்கு புறப்படும் வண்டி(06070) எழும்பூர் வரை செல்லாது. தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News January 16, 2025

நெல்லையில் முதல் முறையாக இளையராஜா கச்சேரி!

image

நெல்லை மாவட்ட இசைப்பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் ரெட்டியார்பட்டி – முத்தூர் சாலையில் நாளை(17.1.2025) மாலை இசைஞானி இளையராஜாவின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எஸ்பிபி சரன், ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பல பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு பாடுகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் கட்டணம் 300 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News January 15, 2025

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

image

நெல்லை மாவட்ட பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று (ஜன.15) காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 15, 2025

நெல்லை மாநகரில் இன்றைய நிகழ்வுகள்

image

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டவுன் வஉசி தெருவில் உள்ள திருவள்ளூர் சிலைக்கு திமுக அதிமுக மற்றும் திருவள்ளூர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இன்று(ஜன.15) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. #பாளை சாரதா மகளிர் கல்லூரி வைத்து இன்று மாட்டுப் பொங்கல் விழா காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. #மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று பொது மக்களின் வருகை இருப்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News January 15, 2025

நெல்லையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

தைப்பொங்கல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இன்று(ஜன.15) மாலை முதல் பணியிடங்களுக்கு திரும்புகின்றனர். இதனால் பண்டிகைக்கு வந்தவர்கள் திரும்பி செல்வதற்கு வசதியாக, நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தேவையான அளவு சிறப்பு பஸ்களை இன்று முதல் அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.

News January 15, 2025

அதிகாலையிலேயே இறைச்சி வாங்க படையெடுத்த மக்கள்!

image

பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் இன்று(ஜன.15) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதாமாக இந்நாள் அமைந்தாலும், மறுபக்கம் இறைச்சி சமைத்து ருசிப்பது வழக்கம். இதையொட்டி நெல்லை பகுதி கறிக்கடைகளில் அதிகாலையிலேயே கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆடு கிலோ ரூ.800 – ரூ.900க்கும், மாடு ரூ.400க்கும், கோழிக்கறி 250 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

News January 14, 2025

காணும் பொங்கல் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

image

நெல்லை மாவட்டத்தில் நாளை மறுதினம் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் கட்டுச்சோறு, பழங்கறி, கரும்பு, பனங்கிழங்கு சகிதமாக சுற்றுலா மையங்களுக்கு வருவார்கள். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் 1400 காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

News January 14, 2025

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு 

image

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜனவரி 14) திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News January 14, 2025

நெல்லை வந்தே பாரத் முன்பதிவுகள் விறுவிறுப்பு

image

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் நாளை (ஜன.15) முதல் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இதன் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக 17ஆம் தேதி காலையில் சென்னைக்கு செல்வோர் மற்றும் 19ஆம் தேதி சென்னைக்கு செல்ல விறுவிறுப்புடன் முன்பதிவு நடந்து முடிந்துள்ளது. 

News January 13, 2025

தமிழில் பெயர்ப்பலகை வைக்காத 26 கடைகளுக்கு நோட்டீஸ்

image

நெல்லையில் 2024ல் தொழிலாளர் நலத்துறைஆய்வு மேற்கொண்டதில் தமிழில் பெயர்ப்பலகை முறையாக வைக்காத 91 கடைகள் வணிக நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இதுவரைஅபராதமாக ரூ.75,500 விதிக்கப்பட்டுள்ளது. பெயர்ப்பலகை நிறுவனங்கள்மற்றும் பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தாத 26 கடைகள் நிறுவனங்கள் மீது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!