Tirunelveli

News September 6, 2025

நெல்லையில் உயர்ந்த பஸ் கட்டணம்

image

ஓணம் பண்டிகை- மிலாடி நபி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறைக்காக சென்னையில் இருந்து நெல்லை வந்தவர்கள் நாளை மாலை சென்னைக்கு திரும்ப முன்பதிவு செய்து வருகின்றனர். வழக்கமான ரயில் பாஸ்களில் இடங்கள் நிரம்பிய நிலையில் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ரூ.1,900 முதல் ரூ.3,700 வரை வசதிக்கு ஏற்ப கட்டணம் உயர்ந்துள்ளது.

News September 6, 2025

நெல்லை 46வது வார்டில் புதிய தார் சாலை

image

மேலப்பாளையம் மண்டலம் 46வது வார்டு பீடி தொழிலாளர் காலனியில் தார் சாலை அமைக்கும் பணியினை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர், பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் ராஜூ நெல்லை கிழக்கு மாநகர திமுக பொறுப்பாளர் ALB. தினேஷ், மேலப்பாளையம் மேற்கு பகுதி திமுக பொறுப்பாளர் துபாய் சாகுல் உள்பட பலர் அருகில் உள்ளனர்.

News September 6, 2025

நெல்லை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

நெல்லை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News September 6, 2025

சேரன்மகாதேவியில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு

image

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தனியார் கல்லூரி கலையரங்கத்தில் வைத்து உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று (செப்.6) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சட்ட பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமை தாங்கினர். இதில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

News September 6, 2025

வள்ளியூர் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று (06.09.2025) நடைபெற்றது. முகாமில் சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். தொடர்நது பொதுமக்களிடம் முகாம் குறித்து கேட்டறிந்தனர்.

News September 6, 2025

நெல்லை: வாட்ஸ் அப் மூலம் புதிய மோசடி

image

போக்குவரத்து விதி மீறல் இ-லான் மோசடி தற்போது வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. போக்குவரத்து விதிகள் மீறியதாக அபராதம் செலுத்த வேண்டும் என ஒரு ‘ஏபிகே’ கோப்பிற்கான லிங்க் கொடுக்கப்படுகிறது. இது போலியான ஒரு செயலியாகும். அரசின் அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டும் போக்குவரத்து அபராதங்களை சரி பார்க்க வேண்டும் என தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. SHARE IT

News September 6, 2025

நெல்லை: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

image

நெல்லை மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 6, 2025

மின்தடை செயற்பொறியாளர் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஓடக்கரை துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், மணிமுத்தாறு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்.6) நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிவித்துள்ளார்.

News September 6, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 5) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 5, 2025

நெல்லைக்கு மேலும் ஒரு பெருமை!

image

குலசையில் 2வது ஏவுதளம் அமைக்கும் நிலையில், பாளையங்கோட்டையில் புதிய விண்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.7.12 கோடி செலவில் டெண்டர் கோரி விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது .இங்கே கட்டுப்பாட்டு மையம் அமைத்து அதில் விண்கலன்களை கண்காணிப்பது, கட்டளைகளை பிறப்பிப்பது போன்ற முக்கிய பணிகள் இந்த மையத்தில் நடைபெறும் என இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. நெல்லைக்கு மேலும் பெருமை சேர்க்கும் இந்த செய்தியை ஷேர் செய்யுங்க

error: Content is protected !!