Tirunelveli

News September 9, 2025

நெல்லை: விருது பெற ஆட்சியர் அழைப்பு..!

image

தமிழ்நாட்டில் சுற்றுலா தொழில் முனைவோரை ஊக்குவிக்க 17 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. சுற்றுலா ஆபரேட்டர், தங்குமிடம், உணவகம், சாகச சுற்றுலா, வழிகாட்டி உள்ளிட்டவை இதில் அடங்கும். தகுதியுள்ளவர்கள் www.tntourismawards.com இணையதளத்தில் செப்.15, 2025-க்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை (0462-2500104, 9176995877) தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News September 9, 2025

இ எஸ் ஐ சி துணை மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

image

நெல்லை இ எஸ் ஐ சி துணை மண்டல அலுவலகத்தில் நாளை 10ம் தேதி மாலை 4 மணிக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என பொறுப்பு அதிகாரி இணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். முகாமில் மருத்துவமனை கண்காணிப்பாளர் குறைதீர்க்கும் அதிகாரி மருத்துவ அலுவலர் பங்கேற்கின்றனர் பயனாளிகள் குறை ஏதும் இருப்பின் முகாமில் தெரிவித்து நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2025

BREAKING திருநெல்வேலி வருகிறார் விஜய்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி செப்.13 அன்று திருச்சியில் தொடங்கி அக்.11ம் தேதியன்று நெல்லை, குமரி, தூத்துக்குடியில் மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

News September 9, 2025

நெல்லை: மத்திய கூட்டுறவு வங்கியில் சிறப்பு கடன் தேர்வு திட்டம்

image

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் வழங்கிய பண்ணை சாரா, வேளாண் கடன்களில் 31.12.2022 வரை தவணை தவறியவற்றுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் – 2023 செயல்படுகிறது. 12.09.2024க்கு முன் 25% செலுத்தி, மீதி 75% ஒரே தவணையில் 9% வட்டியுடன் செலுத்தி கடனை தீர்க்கலாம். கூடுதல் வட்டி, அபராதம் தள்ளுபடி செய்யப்படும். *ஷேர் பண்ணுங்க

News September 9, 2025

கருப்பந்துறையில் மின்னல் தாக்கி நடந்த விபரீதம்!

image

கருப்பந்துறையைச் சேர்ந்த பாலம்மாள்(60) மற்றும் உய்க்காட்டான்(14) நேற்று மாலை கருப்பந்துறை இந்திரா நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரத்தை மின்னல் தாக்கியதில் மரக்கிளைகள் முறிந்து பாலம்மாள் மற்றும் உய்க்காட்டான் மீது விழுந்ததில் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 ஆடுகள் இறந்தன.

News September 9, 2025

வந்தே பாரத் ரயிலில் மேலும் 180 பயணிகள் பயணிக்கலாம்

image

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் 8 பெட்டியில் இருந்து கடந்த ஜனவரி 15 முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டியுடன் இயங்கி வருகிறது. தற்போதும் காத்திருப்போர் பட்டியல் உள்ளதால் 20 பெட்டிகளுடன் ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதனால் இந்த ரயிலில் 180 பேர் கூடுதலாக பயணிக்கலாம்.

News September 9, 2025

நெல்லை மக்களே; கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கான தொடர்பு எண்கள்
மாவட்ட கட்டுப்பாட்டு அறை
9790215826
9629939239
9489930261
8428840830
9894098763
மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை
9566898152
9043918270
9788231124
நகர கட்டுப்பாட்டு அறை – 8939948100
ஊரக கட்டுப்பாட்டு அறை – 9487501294
*ஷேர் பண்ணுங்க

News September 9, 2025

நெல்லைக்கு 25 தாழ்தள அரசு பஸ்கள் ஒதுக்கீடு

image

ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஏறி இறங்குவதற்கு வசதியாக நெல்லை அரசு போக்குவரத்துக் கழக கோட்டத்திற்கு 25 தாழ்தள அரசு பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக 4 பஸ்கள் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்திற்கு வந்துள்ளன. இவற்றை விரைவில் முக்கிய வழித்தடங்களில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

News September 9, 2025

நெல்லை: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் – அரசு பணி!

image

நெல்லை மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> CLICK <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025 ஆகும். நெல்லை மக்களே இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 9, 2025

நெல்லை: போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்!

image

பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக மகேஷ் குமார் என்ற அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாளையில் பணிபுரிந்து இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் டவுனுக்கும், டவுனில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தச்சநல்லூர் காவல் நிலையத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காசி பாண்டியன் கவின் கொலை வழக்கில் கொலையாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!