India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொச்சுவேலி – ஷாலிமார், திருநெல்வேலி – ஷாலிமார், தாம்பரம் – சந்திரகாசி, கோயம்புத்தூர் – பரௌனி ஆகிய சிறப்பு ரயில்களின் சேவையை மேலும் 3 மாதம் காலம் நீட்டிப்பு செய்து தெற்கு ரெயில்வே நேற்று (ஜன.20) அறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகம் வருகிற 25ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் குடும்ப அட்டை தொடர்பான பெயர் சேர்த்தல் நீக்கம் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அரசு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிப்ரவரி 6, 7ஆம் தேதிகளில் நெல்லை வருகிறார். பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 78 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ வளாகத்தை தொடங்கி வைக்க உள்ளார் அதே நிகழ்ச்சியில் அரசு நலத்திட்டங்களையும் துவங்கி வைக்கிறார். இதற்காக அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை மைதானம் சீரமைக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் 25ம் தேதி நடக்கும் குறைதீர் முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்பட பல சேவையை பெறலாம் கூடுதல் தகவலுக்கு கட்டுப்பாட்டுஅறை எண்: 9342471314 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள்.1967 மற்றும்18004255901 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று தெரிவித்துள்ளார்.
ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்று வரும் அகில இந்திய சட்டமன்ற பேரவை தலைவர்களின் மாநாட்டில் இருந்து தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு இன்று வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் செயல்பாடு குறித்து மாநாட்டில் பேச முடியவில்லை என்றால் வேறு எங்கு பேசுவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவிநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி வரும் சனிக்கிழமையன்று (25.01.2025) குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று ( ஜன.20 ) தெரிவித்துள்ளார்.
நாட்டின் 76-வது குடியரசு தின விழா வருகிற ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில் பாளை வ உ சி மைதானத்தில் வைத்து குடியரசு தின விழா நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தேசிய கொடியினை ஏற்றி வைக்கிறார். இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.இன்று வாகன சோதனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று காலை இந்த வழக்கிற்கு தீர்ப்பு கூறப்பட்டது.அதில் வாலிபரை கொலை செய்த 8 பேருக்கு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர காவல் துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், சமூக வலைத்தளங்கள் மூலம் தற்போது மோசடி நடைபெற்று வருகின்றன. மேலும் தேவையில்லாத பதிவுகள் பதிவிடுவதன் மூலம் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது .எனவே பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளின் சமூக வலைத்தள செயல்பாடுகளை கவனியுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 1 முதல் இன்று வரை இந்தியாவிலேயே மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் ஊத்து பகுதி 1022 மிமீ மழையை பெற்றிருக்கிறது. இம்மழை நாட்டிலேயே மிக அதிகம். ஊத்துக்கு அடுத்தபடியாக நாலுமுக்கு 912 மிமீ மழையும், காக்காச்சி 786 மிமீ மழையும் பெய்துள்ளது. மாஞ்சோலை இந்தியாவின் தனித்துவமிக்க இடமாக கருதப்படுகிறது. கடந்த 11 தினங்களாக இங்கு தொடர்ந்து மழை கொட்டுகிறது.
Sorry, no posts matched your criteria.