India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும். மேலப்பாளைத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம், மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், முறப்பநாட்டில் பணிகள் தொடக்கம், மேலப்பாளையம், அம்பாசமூத்திரம் மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசி வருகிறார். 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு நெல்லையின் அடையாளமாக திகழும் நெல்லையப்பர் கோவிலில் பூட்டிக்கிடந்த மேற்கு, வடக்கு ,தெற்கு வாசல்கள் திறக்கப்பட்டது நமது கலைஞர் ஆட்சியில் தான். வரும் நவம்பர் மாதத்திற்குள் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி தேர் ஓடும் எனவும் முதல்வர் பேசியுள்ளார்
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நெல்லை மாவட்ட அமைப்பின் சார்பில் நேற்று இரவு (பிப்-6) மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் வரும் 14. 02 .2025 வெள்ளிக்கிழமை மாலை ராதாபுரம் ,நாங்குநேரி, அம்பாசமுத்திரம், பாளை, திருநெல்வேலிஆகிய 5 இடங்களில் மாலை நேர கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் 25.02.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் நேற்று (பிப்-6) விடுத்துள்ள செய்தி குறிப்பில் நெல்லை , தென்காசி மாவட்டங்களில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் முரண்பாடுகள் கொண்ட 42 நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .மேலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நெல்லையை சேர்ந்த ஸ்ரீ வள்ளி என்பவருக்கு சொந்தமான இடம் விஎம் சத்திரம் ஆட்சி மடம் பகுதியில் உள்ளது. இதன் மதிப்பு ரூ 2.5 கோடி ஆகும். இவரது நிலத்தை 3 பேர் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் குமரியை சேர்ந்த நிர்மலா என்பவரை கைது செய்து ,ஜெரால்டு செல்வராஜ்,ராஜசேகர், அண்ணாதுரை ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று கள ஆய்வு மேற்கொள்வதற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைப்பதற்காகவும் நெல்லைக்கு வருகை தந்தார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தமிழக சபாநாயகரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு கலைஞர் புத்தகத்தை பரிசளித்து வரவேற்றார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுபயனமாக முதல்வர் இன்று வருகை தந்துள்ளார். இந்நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் இயங்கும் பள்ளிகள் மதியம் 12-30 மணிக்கு மேல் விடுமுறை விடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்ட அறிக்கையில் மதுரை திருப்பரங்குன்றம் விஷயத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடாமல் அரசியல் செய்யாமல், முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும். இவ்விவகாரத்தில் ஜனநாயக சக்திகளோடு எஸ்டிபிஐ கட்சி என்றைக்கும் நிற்கும். சிறுபான்மை சமூக மக்களின் வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்கிற வகையில் குரல் கொடுக்கும் துணை நிற்கும் என கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை நெல்லை வருகிறார். இதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகர் மாவட்ட மற்றும் அருகே உள்ள மாவட்டங்கள் சேர்ந்த சுமார் 1000 போலீசார் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு வழியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இதற்காக வெளி மாவட்ட போலீசார் இன்று நெல்லை வந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்து காலை 11.45 கங்கைகொண்டான் சிப்கார்டில் உற்பத்தியினை தொடங்கி வைக்கிறார். 12.10க்கு கங்கைகொண்டான் சிப்காட்டில் அடிக்கல் நாட்டுதல், பிற்பகல் 1.1 வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகை, மாலை 4. பாளையங்கோட்டையில் சீர்மிகு நகர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல், மாலை 5 மணிக்கு பாளையில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
Sorry, no posts matched your criteria.