India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது நெல்லை செங்கல்பட்டு இடையே கூடுதல் சிறப்பு விரைவு ரயிலை இன்று அறிவித்துள்ளது. நிலையிலிருந்து செப். 26, 28 அக் 3, 5, 10, 12, 17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் காலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதுபோல் செங்கல்பட்டில் இருந்து செப். 26, 28 அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26ம் தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும்.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.19) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர் வழியாக சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி இடையே பண்டிகை சிறப்பு ரயில் (06151) செப்டம்பர் 22, 29 அக்டோபர் 6, 13, 20 ஆகிய நாட்களில் இரவு 11:50 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06152 கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 23, 30 அக்டோபர் 7, 14, 21 தேதிகளில் பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் இதற்கான முன்பதிவு நடக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் 2025ம் வருடத்தில் மட்டும் இதுவரை 20 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 21 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பாகஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்டார்.

நெல்லை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின் பேரில் இரவு நேர கண்காணிப்பை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த ஒரு மாதத்தில் 6 வீடுகளில் நடந்த கொள்ளை, கொள்ளை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 கிராம் தங்க நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆணையாளர் தெரிவித்தார்.

நெல்லை என்.சி.சி மாணவர்கள் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை; 50வது தமிழக துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். நெல்லை 5 தமிழக பட்டாலியன் என்.சி.சி., மாணவர்கள் 3 பேர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றனர். பாளை., தனியார் கல்லூரி மாணவி பிரியங்கா 3பி ஓபன் சைட் ஜூனியர் பிரிவில் தங்கபதக்கம், புரோன் ஓபன் சைட்டில் வெண்க லபதக்கம் வென்றார்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <

நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய கவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் ஆக. 18 முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை SI சரவணனிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்த சுர்ஜித் பயன்படுத்திய டூவீலர் பதிவெண் போலி என தெரிய வந்துள்ளது. மேலும் கொலைக்காக ஜெயபால் என்பவர் இடத்தையும் சுர்ஜித் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

திருவேங்கடம் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேந்திரன் நேற்று (செப் 18) தனது மகனின் மருத்துவ பரிசோதனை சான்று வாங்குவதற்காக பைக்கில் அழகாபுரியிலிருந்து நெல்லைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மானூர் அருகே அழகிய பாண்டியபுரம் சிற்றாற்று பாலம் அருகே பைக்கு சென்ற போது சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நெல்லை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.