Tirunelveli

News February 9, 2025

பொருநை புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவு

image

நெல்லை டவுனில் உள்ள வர்த்தக மையத்தில் 8வது பொருநை புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஜன.31 அன்று தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா நாளை (பிப்.10) நிறைவடைகிறது. இந்த பத்து நாட்களிலும் தினமும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 9, 2025

போலி ஜாதி சான்றிதழ் விவகாரம் – வழக்கறிஞர் தப்பியோட்டம்

image

போலி ஜாதி சான்றிதழ் வாங்கி வழக்கறிஞர் தொழில் செய்து வருவதாக வந்த புகாரையடுத்து பிரம்மா என்ற வழக்கறிஞர் மீது  ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் நெல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா தலைமையில் இன்று (பிப்-09) வழக்கறிஞர் பிரம்மாவை கைது செய்ய போலீசார் பாளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.போலீசார் வருவதை தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பிரம்மா அங்கிருந்து தப்பி ஓடினார்.

News February 9, 2025

போலி ஜாதி சான்றிதழ் விவகாரம் – வழக்கறிஞர் தப்பியோட்டம்

image

போலி ஜாதி சான்றிதழ் வாங்கி  வழக்கறிஞர் தொழில் செய்து வருவதாக வந்த புகாரையடுத்து பிரம்மா என்ற வழக்கறிஞர் மீது  ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் நெல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா தலைமையில் இன்று (பிப்-09) வழக்கறிஞர் பிரம்மாவை கைது செய்ய போலீசார் பாளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.போலீசார் வருவதை தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பிரம்மா அங்கிருந்து தப்பி ஓடினார்.

News February 9, 2025

பிப்ரவரி 11ஆம் தேதி நெல்லையில் மதுக்கடைகள் மூடல்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஆகியவை பிப். 11ஆம் தேதி மூடப்படுகிறது .அதனை மீறி மதுபாட்டில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News February 9, 2025

கூடங்குளம் அருகே விபத்தில் 2 பேர் பலி 

image

 கூடங்குளம் அருகே செட்டிகுளம் பைபாஸ் சாலையில் உவரி கோவிலுக்கு சென்றுவிட்டு பைக்கில் வந்த  மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் செல்வம் (60) அவரது மனைவி புஷ்பம் (58) ஆகியோர் மீது குமரி மாவட்டம்  தெங்கம்புதூரை சேர்ந்த ஜெகதீஷ் (30) என்பவரின் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்வம் பலியானார்.அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கூடங்குளம் போலீசார் விசாரணை 

News February 8, 2025

மதம் அரசு நிறுவனமாக மாறி விடக்கூடாது – கனிமொழி 

image

நெல்லை புத்தக திருவிழாவில் இன்று எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசுகையில், வாசிப்பின் வழியாக உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும். மதம் என்பது அரசு நிறுவனமாக மாறிவிடக் கூடாது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். மதம் அரசின் கைக்குசென்றால் அது அதிகாரம் மிக்கதாக ஆகிவிடும். நாம் ஒவ்வொருவரும் அருகில் இருக்கும் மனிதர்களை நேசிக்க வேண்டும். அதுதான் அன்பான தமிழ் சமூகத்தை தக்கவைக்கும் என கூறினார்.

News February 8, 2025

திருநெல்வேலியில் 20 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

திருநெல்வேலி சரகத்தில் இன்று (பிப்.8) 20 காவல் துறை ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சரக டிஐஜி மூர்த்தி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கோவில்பட்டி காவல் ஆய்வாளர் ராஜாராம் பணகுடி காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் காவல் ஆய்வாளர்கள் திருநெல்வேலி சரகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் பொறுப்பேற்கின்றனர்.

News February 8, 2025

தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் 

image

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு நெல்லையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள்ளிட்ட இடங்களில் பிப்.10 அன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. பள்ளிக்கு செல்லாத சிறார்கள், 20 முதல் 30 வயது வரை உள்ள மகளிர் பயனடையுமாறு கலெக்டர் சுகுமார் இன்று அறிவித்துள்ளார்.

News February 8, 2025

224-வது ஆட்சியராக பொறுப்பேற்றார்

image

நெல்லை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மருத்துவர் இரா.சுகுமாரன் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த மருத்துவர் கார்த்திகேயன் எல்காட் சேர்மனாக மாறுதலாகி சென்றதையடுத்து நெல்லையின் 224-வது ஆட்சியராக சுகுமாரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அனைத்து துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

News February 8, 2025

பாளையில் குடிமைப் பணிகள் தேர்வு பலத்த பாதுகாப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி II, II A பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இன்று (பிப்-8) நடைபெறுகிறது. தேர்வு மையங்களுக்கு காலையிலேயே தேர்வர்கள் வந்திருந்தனர் அவர்களை பலத்த ஆய்வுக்கு பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்தை பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர்.

error: Content is protected !!