Tirunelveli

News September 20, 2025

நெல்லை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்

image

தெற்கு ரயில்வே, பண்டிகைக்கு முன் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கிறது: சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி (06152). புறப்பாடு: அக்டோபர் 6,13,20 (திங்கள்) இரவு 11:50 சென்ட்ரல்; காலை 1:20 கன்னியாகுமரி, மறுமார்க்கம்: 23,30; அக்டோபர் 7,14,21 (செவ்வாய்) பிற்பகல் 3:35 கன்னியாகுமரி; காலை 8:30 சென்ட்ரல்.
பெட்டிகள்: 2 AC 2, 5 AC 3, 11 SL, பொது, 2 EOG வழி: அரக்கோணம், சேலம், மதுரை, நெல்லை செல்கிறது.

News September 20, 2025

நெல்லை: கிராம வங்கிகளில் 489 காலியிடங்கள்! நாளை கடைசி

image

நெல்லை மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 21க்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 20, 2025

நெல்லை: 10th தகுதி.. ஏர்போர்ட்டில் வேலை ரெடி! உடனே APPLY

image

நெல்லை மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள 1446 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> நாளை (செப். 21)க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு மதுரையில் நடைபெறும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 20, 2025

நெல்லை: ஆட்டோவை திருடி சென்ற நபர் சுற்றி வளைப்பு

image

வண்ணாரப்பேட்டை பரணி நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் நேற்றிரவு நெல்லை டவுன் ஸ்ரீ புரத்தில் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று உள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது தனது ஆட்டோவை ஒருவர் எடுத்து செல்வதை பார்த்துள்ளார். உடனடியாக தனது நண்பர்களுக்கு தகவல் கூறியுள்ளார். வண்ணார்பேட்டையில் வைத்து அவரது நண்பர்கள் ஆட்டோவை மடக்கி பிடித்து ஆட்டோவை திருடி சென்ற நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

News September 20, 2025

நெல்லை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.நெல்லை – 9445000380
2.பாளை – 9445000381
3.நாங்குநேரி- 9445000387
4.ராதாபுரம்- 9445000388
5.அம்பை- 9445000386
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News September 20, 2025

நெல்லை சந்திப்பில் வாலிபர் மர்ம மரணம்

image

நெல்லை சந்திப்பு ரயில்வே நிலையம் செல்லும் பாதையில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 20, 2025

நெல்லை: காவல்துறையில் 3,665 காலியிடங்கள்.! APPLY

image

நெல்லை மக்களே, தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. விண்ணப்பிக்க கடைசி தேதி நாளையுடன் (செப். 21) முடிவடைகிறது. கல்வி தகுதி – 10வது தேர்ச்சி. 18 வயது நிரம்பியவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,200 முதல் 67,100 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News September 20, 2025

நெல்லை: மனைவியை கொலை செய்த கணவன் வாக்குமூலம்

image

நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அன்புராஜ். தனது மனைவி பிரித்திகாவை நேற்று நள்ளிரவில் கொலை செய்து விட்டு போலீசில் சரணடைந்தார். பின்னர் போலீசில் அவர் அளித்த வாக்கு மூலத்தில் பிரித்திகா அம்மாவுக்கும் அன்புராஜுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் சம்பவத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரித்திகாவை தாயாருடன் பேசக்கூடாது எனக் கூறிய நிலையில் தொடர்ந்து பேசியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

News September 20, 2025

நெல்லை – செங்கல்பட்டு இடையே தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு

image

தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது நெல்லை செங்கல்பட்டு இடையே கூடுதல் சிறப்பு விரைவு ரயிலை இன்று அறிவித்துள்ளது. நிலையிலிருந்து செப். 26, 28 அக் 3, 5, 10, 12, 17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் காலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதுபோல் செங்கல்பட்டில் இருந்து செப். 26, 28 அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26ம் தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும்.

News September 20, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.19) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!