India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.21] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் மாணவிகளுக்கான தங்கும் விடுதியில் 14 வயதுடைய 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஆண் வார்டன் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அறிந்த பெற்றோர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணைக்கு பின் வார்டன் அபூபக்கர் (46) மற்றும் உடந்தையாக இருந்த பெண் வார்டன் வகிதா என்ற வசந்தி( 43) ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் இன்று கைது செய்தனர்.

நெல்லை மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

மூலைக்கரைப்பட்டி அருகே தெற்கு நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த 62 வயது ஆவுடையம்மாள், 23 ஆண்டுகளுக்கு முன் கணவர் டேனியல் இறந்த பிறகு, மகன் ஜெயபால் வீட்டருகிலுள்ள செட்டில் தனியாக வாழ்ந்தார். உடல் நலக்குறைவால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூலைக்கரைப் பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இன்று புரட்டாசி மாத அமாவாசையில் செய்ய வேண்டியவை
->அதிகாலையில் குளித்து முன்னோர்களின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
->இன்று விரதம் இருப்பதால் முன்னோர்களின் ஆசி முழுதாக கிட்டும்.
-> பிரசித்திபெற்ற பாபநாசம் சிவன் கோயிலுக்கு சென்றும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்யலாம்.
-> இச்செயல்களால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.
இதனை எல்லோரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

நெல்லை மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்! <

நெல்லை மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. கடைசி தேதி – செப். 23 ஆகும். மேலும் விவரங்களுக்கு <

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று செப்டம்பர் 20 விடுத்துள்ள செய்தி குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கி வருகிற அக்டோபர் 4ம் தேதி வரை போலீஸ் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா மற்றும் கூட்டங்கள் போன்றவை நடத்தக்கூடாது. பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி தெரிவித்துள்ளார்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறையின் கீழ் செயல்படும் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறிதல் மையத்திற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் சில்வர் விருது வழங்கி பாராட்டினார். மேலும் மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் ராஜுவ பகல் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார். இதற்காக முதன்மை ஆய்வாளர் டாக்டர் பூங்கொடியை டீன் ரேவதி பாலன் இன்று பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.