India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லையப்பர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை தொடங்கி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் நவராத்திரி கொலு மண்டபத்திற்கு எழுந்தருளி தர்பார் காட்சி நடைபெற உள்ளது. தினமும் காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் மாலையில் தர்பார் காட்சியுடன் மகா தீபாராதனையும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

நெல்லை மாவட்டம், திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிருஷ்ண குமார் கூறியதாவது: நாய்க்கடியால் ஏற்படும் பாதிப்பின் முதல் நிலை என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே ஊசி போட்டு மருந்து வழங்கி சிகிச்சை அளிக்கபடும். 2ம் நிலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிடி மற்றும் நாய் கடிக்கு வழங்கப்படும் ஏ ஆர் வி ஊசி மருந்து வழங்கப்பட்டு காயத்தின் தன்மையை பொறுத்து நெல்லை ஜி.ஹெச்-க்கு அனுப்பப்படுவார்கள் என்றார்.

நெல்லை மக்களே இனி ரேஷன் கடைகளில் நியாய விலை பொருட்கள் வாங்க கட்டபையும் காசூம் கொண்டு போகும் காலம் போயே போச்சு.தமிழக அரசு புதிதாக ”மொபைல் முத்தம்மா” சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் நீங்க உங்க ரேஷன் கடைகளில் UPI- ஐ மூலம் பணம் செலுத்தி நியாய விலை பொருட்களை வாங்கலாம். நீங்க ரேஷன் கடைக்கும் கட்டை பையும் போனும் கொண்டு போற காலம் வந்தாச்சு. உங்க குடும்ப உறுப்பினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

நெல்லை, திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 75). கூலித் தொழிலாளி மது அருந்து பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் கொடுமுடி ஆறு அணைப்பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திவ்ய தேசங்களில் ஒன்றான வானமா மலை கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு நிகழ்ச்சியாக தெய்வநாயகப் பெருமாள் ஆண்டாள் நாச்சியார் அபூர்வமான சேர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மேடை தளவாய் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டு பயிற்சி வகுப்பு வருகிற அக்டோபர் 15ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான சேர்க்கை இன்று செப்டம்பர் 22 முதல் நடைபெறுகிறது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் உள்ள தனியார் மஹாலில் வள்ளியூர் உட்கோட்ட காவலர் குடும்பங்கள் கொண்டாடும் காவலர் தின விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இதில் டிஎஸ்பி வெங்கடேஷ்,
பணகுடி காவல் ஆய்வாளர் ராஜாராம் உள்பட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

மழைக்கால மின்விபத்துகளை தடுக்க நெல்லை மின் பொறியாளர் அகிலாண்டேஸ்வரி பாதுகாப்பு அறிவுரை:
அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க..

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே ஒத்தக்கடை பகுதியில் உள்ள காலி இடத்தில் சுமார் ஒன்றரை அடி உயரத்துடன் ஆஞ்சநேயர் சிலை பீடம் உள்ளது. இந்த நிலையில் பீடத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். நேற்று காலையில் இதைக்கண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுக்குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை.

நெல்லையில் உள்ள வார்டுகள் 4 மண்டலங்களாக உள்ளது.
1.நெல்லை மண்டலம்: 15, 16, 17, 18, 19, 20, 21,22, 23, 24, 25, 26, 27
2.தச்சநல்லூர் மண்டலம்: 1, 2 ,3, 4, 10, 11, 12, 13, 14, 28, 29, 30
3.பாளையங்கோட்டை மண்டலம்: 5, 6, 7, 8, 9, 32, 3334, 35, 36, 37, 38, 39, 55
4. மேலப்பாளையம் மண்டலம் : 31, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54
இந்த தகவலை உங்க வார்டு மக்களுக்கு SHARE பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.