Tirunelveli

News February 15, 2025

சிறுவனின் இறப்புக்கு நோயின் தன்மையே காரணம் – அமைச்சர்

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 வயது சிறுவன் மருத்துவ உதவியாளர் ஊசி போட்டதால் உயிரிழந்ததாகவும் மேலும் போதிய மருத்துவர்கள் இல்லாதது அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சிறுவன் இறப்புக்கு காரணம் நோயின் தன்மையே என தெரிவித்தார்.

News February 14, 2025

திருநெல்வேலி உதவி ஆணையர் பணியிட மாற்றம்

image

தமிழகத்தில் துணை ஆட்சியர்கள் இடமாற்றம் செய்து இன்று (பிப்ரவரி 14) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு திருநெல்வேலி உதவி ஆணையர் (கலால்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்பார் என கூறப்பட்டுள்ளது. அறிவிப்பை தொடர்ந்து வள்ளிக்கண்ணுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

News February 14, 2025

போக்சோவில் கைதான பேராசிரியர் டிஸ்மிஸ்

image

முன்னீர்பள்ளம் அருகே உள்ள மருதகுளத்தைச் சேர்ந்த பாளை சேவியர் கல்லூரியில் வணிகவியல் துறையில் பணிபுரியும் பிரைட் ஜூவட்ஸ் (34) என்ற தற்காலிக பேராசிரியர் அந்தக் கல்லூரியில் பயிலும் 17 வயது கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதியப்பட்டு நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் பேராசிரியர் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

News February 14, 2025

கஞ்சா பொட்டலங்கள் தீயிட்டு அழிப்பு

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பொத்தையடி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட கஞ்சா பொட்டலங்களை நீதிமன்ற விசாரணைக்கு பின்பு இன்று நெல்லை மண்டல போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் தீயிட்டு அழித்தனர்.

News February 14, 2025

வனத்துறை வாகனம் ஏலம் அறிவிப்பு

image

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் ராமேஸ்வரன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், திருக்குறுங்குடி வனச்சரக அலுவலக பயன்பாட்டில் உள்ள ஜீப் வாகனம் பிப்.24 அன்று காலை 11 மணியளவில் ஏலம் விடப்படுகிறது .ஏலம் எடுக்க விரும்புவோர், வைப்புத் தொகையாக ரூ.5,000 துணை இயக்குனர் களக்காடு சரணாலயம் என்ற பெயரில் வங்கி டிடி எடுத்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

News February 14, 2025

கல்லூரி பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

image

முன்னீர்பள்ளம் அருகே உள்ள மருதகுளத்தைச் சேர்ந்த பாளை சேவியர் கல்லூரியில் வணிகவியல் துறையில் பணிபுரியும் பிரைட் ஜூவட்ஸ் (34) என்ற தற்காலிக பேராசிரியர் அந்தக் கல்லூரியில் பயிலும் 17 வயது கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதியப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 14, 2025

திருநெல்வேலி-தாதர் ரயிலுக்கு சிஞ்சலியில் தற்காலிக நிறுத்தம்

image

திருநெல்வேலியில் இருந்து தாதருக்கு வாரத்தில் 3 நாட்கள் சாளுக்கியா அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கர்நாடகா மாநிலம் சிஞ்சலியில் மாயக்கா தேவி அம்மன் வருடாந்திர திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி நாளை 15 ஆம் தேதி 18, 19, 22 ஆகிய நான்கு நாட்கள் இந்த ரயில் சிஞ்சலி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 14, 2025

நெல்லை அஞ்சல் துறையில் 71 காலிபணியிடம்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>லிங்க் <<>> ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

தங்க நகை மதிப்பீட்டாளராக வாய்ப்பு

image

தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற 20-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நெல்லை ஸ்ரீபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதம் குறித்தும்,பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி, ஆகிய உலோக தரம் அறிதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

News February 14, 2025

காதலர்களுக்கு நெல்லை காவல்துறை எச்சரிக்கை

image

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14) காதலர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லையில் காதலர்கள் எல்லை மீறிய செயல்களில் பொது இடங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறையும் மாநகர காவல் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!