Tirunelveli

News September 23, 2025

நெல்லை: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

image

நெல்லை மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் இந்த <>லிங்கில் கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி – செப். 30. சம்பளம் 15,700 – 71,900. சேரன்மாதேவி, மானூர், களக்காடு, பாளை, வள்ளியூரில் பணிநியமனம் செய்யப்படும். சொந்த ஊரில் அரசு வேலை! எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News September 23, 2025

நெல்லை: 10வது படித்தவர்களுக்கு 25 ஆயிரத்தில் வேலை உறுதி

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 50க்கு மேற்பட்ட அட்வைஷர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 21 -60 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <>கிளிக்<<>> செய்து அடுத்த மாதம் 27-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News September 23, 2025

நாய் கடிக்கு 1,706 வெறிநோய் தடுப்பூசி மருந்து

image

நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே நாய் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,706 வெறிநாய் தடுப்பூசி மருந்து குப்பிகள் உள்ளன. மேலும் ரேஸ் குளோபின் 55 குப்பிகள் கையிருப்பில் உள்ளன பொதுமக்கள் வளர்ப்பு நாய் பூனை மற்றும் தெரு நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

நெல்லை மாவட்டத்தில் 9 துணை பிடிஒ மாற்றம்

image

பாளையங்கோட்டை யூனியன் தலைமை இடத்து துணை பிடிஒ ராமலட்சுமி களக்காட்டிற்கு மாற்றப்பட்டார். வள்ளியூர் துணை பிடிஓ ராஜேஸ்வரி ராதாபுரத்திற்கும் இந்தப் பணியில் இருந்த வெங்கடேஷ் வள்ளியூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுபோல் மாவட்ட முழுவதும் மொத்தம் ஒன்பது துணை பிடிஓ அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் சுகுமார் பிறப்பித்துள்ளார்.

News September 23, 2025

மேலப்பாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

image

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி விலக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விழுந்து கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு இன்று ( செப்.23 ) காலை தகவல் கிடைத்தது. தகவல் பெறப்பட்டு பாளையங்கோட்டை தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று பார்க்கையில் அந்த நபர் ஏற்கனவே இறந்து கிடந்தது தெரியவந்தது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 23, 2025

நெல்லை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 23, 2025

நெல்லை: ஆட்டோ மோதி சிறுவன் உயிரிழப்பு

image

சுத்தமல்லி வஉசி நகரை சேர்ந்த 7 வயதுடைய சுடர் செல்வம் என்ற சிறுவன் அவருடைய உறவினருடன் பைக்கில் நேற்று சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று திடீரென பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சிறுவன் சுடர் செல்வம் பலத்த காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். நள்ளிரவில் சிறுவன் சுடர் செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

News September 23, 2025

நெல்லை: கல்விக் கடன் வேண்டுமா? மிஸ் பன்னாதீங்க

image

நெல்லை மாவட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. நாளை 24 ஆம் தேதி நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றோர் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். தகுதியானவர்களுக்கு கல்வி கடன் வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் 3 நாட்கள் கல்வி கடன் முகாம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் வருகின்ற 23,24,25 ஆகிய மூன்று தேதிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்விக்கடன் வழங்கும் முகாமை நடத்துகிறது. இந்த சிறப்பு முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கல்வி கடனை பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

காவல்கிணறு அருகே நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர் பலி

image

நெல்லை காவல்கிணறு அருகே நான்கு வழிச்சாலை ஆரம்பிக்கும் இடத்திற்கு அருகில் ஓம் பேப்பர் பேவர் பிளாக் அணுகு சாலையில் கேரள மாநிலத்தில் இருந்து வந்த கேடிஎம் பைக்கும் மினி டெம்போவும் மோதியதில் அருண் என்பவர் தலையில் காயமடைந்தார். போலீசார் அவரை மீட்டு அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

error: Content is protected !!