Tirunelveli

News February 16, 2025

பகுதி நேர வேலை வாங்கி தருவதாக மோசடி

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டு ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்யும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் .ஆசை வார்த்தை கூறி சிறிய தொகையை முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

News February 16, 2025

கொடைக்கானலில் பதுங்கிய 2 நெல்லை ரவுடிகள் கைது

image

முக்கூடல் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த செல்வகுமரேசன் என்ற தலைமை காவலரின் வீட்டில் கார் கண்ணாடியை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட 2 ரவுடிகள் உட்பட 3பேரை நெல்லை போலீசார் கொடைக்கானலில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற போது மூவருக்கும் கைகளில் முறிவு ஏற்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார் நேற்று (பிப்.15) நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

News February 15, 2025

நெல்லையில் காங். கூட்டத்தில்  ப.சிதம்பரம் பேச்சு

image

அரசியல் சாசனத்தை உருவாக்கி தந்தவர் அம்பேத்கர் காந்திக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. காந்தியத்தையே குழி தோண்டி புதைத்து விடுவார்கள். அம்பேத்கரை அழித்து விடுவார்கள். இன்று நாம் சொல்கிறோம், நம்மோடு பல தோழமைக் கட்சிகளும் சொல்கிறார்கள். என ப.சிதம்பரம் பேசினார். MLA ரூபி மனோகரன், தங்கபாலு, செல்வபெருந்தகை MLA ,எம்பி.ராபர்ட் புருஸ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News February 15, 2025

பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி

image

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வாழைத்தோட்டம் மெயின் ரோட்டில் மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இச்சம்வத்தில் சாத்தான்குளம் தனியார் கல்லூரி முதல்வர் உட்பட இருவர் பலியாயினர். மேலும் ஒருவர் பலத்த காயத்துடன் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 15, 2025

நெல்லை விஸ்வாமித்திரர் ஸ்தல வரலாறு தெரியுமா?

image

இந்தியாவிலேயே விஸ்வாமித்திரருக்கு என்று கோயில் நெல்லையின் கடைக்கோடி கிராமமான விஜயாபதியில் அமைந்துள்ளது. இழந்த தன் தவ பலன்களை மீண்டும் பெற விஸ்வாமித்திரர் யாகம் செய்ய தேர்ந்தெடுத்த இடம் விஜயாபதி. விசுவாமித்திரரின் நட்சத்திரம் விசாகம். ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் விசுவாமித்திரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டால், பித்ருக்களின் சாபம் நீங்குவதாக கூறப்படுகிறது. SHARE IT

News February 15, 2025

335 கிராமங்களில் பதிவு செய்யும் முகாம் – ஆட்சியர் தகவல்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 335 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பெயர் பதிவேடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் நில உடமை பதிவுகள் சரி பார்த்துக் கொள்ளும் முகாம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அனைத்து துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் விவசாயிகள் பயன் பெற இயலும். விவசாயிகள் இதில் பதிவு செய்வது அவசியம் என்றார்.

News February 15, 2025

திருநெல்வேலி-சென்னை கூடுதல் ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு

image

நெல்லை-சென்னை இடையே மின் மயமாக்கலுடன் கூடிய இரட்டை ரயில் பாதை இருந்தும் போதுமான ரயில்கள் இருந்தும் ரயில்வே ஓட்டுநர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே கூடுதல் ரயில் டிரைவர்கள் மற்றும் கார்டுகளை நியமனம் செய்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

News February 15, 2025

மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை கைது

image

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி. இவரது மகள் அப்பகுதியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது மகளை பாலியல் தொல்லை செய்து கர்ப்பமாகியதாக கூறப்படுகிறது. இது குறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியின் தந்தையை நேற்று (பிப்.14) கைது செய்தனர்.

News February 15, 2025

31 இடங்களில் உதயமாகும் முதல்வர் மருந்தகம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் 31 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மருந்தகங்களை பிப். 24அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்க உள்ளார். இதில் 20 மருந்தகங்கள் தனிநபர் தொழில் முனைவர் மூலமும், 11 இடங்கள் கூட்டுறவுத் துறை மூலமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை கலெக்டர் சுகுமார் செய்து வருகிறார்.

News February 15, 2025

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

image

இட்டமொழி அழகப்பூரத்தை சேர்ந்த கோவில் பூசாரி இளங்காமணி நேற்று மாலை கோவிலில் பூஜை செய்வதற்காக தனது 3 வயது மகன் சுந்தரபாண்டியுடன் சென்றார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் மகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சுந்தரபாண்டியை  பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். விஜயநாராயணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!