Tirunelveli

News March 24, 2025

புகையிலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

image

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் புகையிலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஆல் தி சில்ட்ரன் நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பொது மக்களுக்கு புகையிலை குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு அவர்களின் கையெழுத்து பெறப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கையெழுத்துக்களை புகையிலைக்கு எதிராக எதிராக பதிவு செய்தனர்.

News March 24, 2025

புருஷோத்தம பெருமாள் கோவிலில் நாளை திருவிளக்கு பூஜை

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிரசித்தி பெற்ற புருஷோத்தம பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாளை (மார்ச்.25 ) பங்குனி திருவோணத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு திருமஞ்சனம் திருவாராதனை, மாலை 5 மணிக்கு தீபத்திருவிளக்கு பூஜை நடைபெறு உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2025

நெல்லை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் டிஇஐசி. டி- அடிக்சன் பிரிவில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற உளவியல் கவுன்சிலர், தொழில்நுட்ப அலுவலர், சோசியல் ஒர்க்கர் உள்ளிட்ட 6 பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பத்தை tirunelveli.nic.in இல் பதிவு செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஏப் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

News March 24, 2025

நெல்லையில் 6 பேர் குண்டர் குட்டத்தில் கைது

image

தென்காசியை சேர்ந்த கணேஷ் முத்துக்குமார் (36), முருகப்பெருமாள் ( 27), ரமேஷ் (24), சக்திவேல் (28), அலெக்ஸ் சற்குணம் (27), பாளையங்கோட்டை சேர்ந்த முத்துக்குமார் (26) ஆகியோர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் வினோத் சாந்தாராம் பரிந்துரையின் படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News March 24, 2025

நெல்லை: இரவு ரோந்து பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு காவல் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி சரகத்தில் முன்னீா்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் காவல் பணியில் ஈடுபடுவார். அவரது கைபேசி தொடர்பு எண் 83000 71556. இதுபோல் நெல்லை ஊடகம் நெல்லை, ஊரகம், நாங்குநேரி வள்ளியூர், அம்பை, ஆகிய பகுதிகளுக்கும் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2025

நெல்லை: குழந்தை வரம் தரும் ஆலயம்

image

நெல்லை மாவட்டம் காருக்குறிச்சியில் குலசேகரநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு கிழக்கு நோக்கி குலசேகரநாதபுரம் தெற்கு நோக்கி சிவகாமி அம்மனும் அருள் புரிகின்றனர். இந்த ஆலயத்தில் வழிபட்டால் தோஷம் நீங்கி திருமண வாழக்கை அமையும். குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியமும், கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்த தம்பதியினர் வேண்டினால் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *SHARE IT*

News March 23, 2025

நெல்லை:விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

image

மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலமாக நெல்லை மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 12 நகர் நல மையங்களில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க நாளை (மார்-24) கடைசி தேதி.11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன. 12 மருத்துவ அலுவலர்கள், 12 நர்சுகள், 12 ஊழியர்கள் பணிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ8500 முதல் 60,000 வரை சம்பளம். விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். SHARE IT

News March 23, 2025

தாமிரபரணியில் களமிறங்கிய சிறப்பு காவல்படை

image

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சிறப்பு காவல்படை (TNUSRF) 9-ம் அணியின் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் இன்று பாபநாசம் தாமிரபரணி ஆற்றின் கரைகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை தளவாய் கமாண்டன்ட் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை கமாண்டன்ட் உள்பட பலர் பங்கேற்றனர்.

News March 23, 2025

முன்னாள் காவலர் கொலையில் மேலும் ஒருவர் கைது

image

நெல்லை டவுனில் முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே அக்பர்ஷா, கார்த்திக் என இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதனை தொடர்ந்து முகமது தவ்பிக் என்ற கிருஷ்ணமூர்த்தி போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நேற்று +1 மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பீர் முகமது என்பவர் கொலைக்கு உதவியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

News March 23, 2025

பாளை  தபால் நிலையத்தில் பார்சல் அனுப்பும் வசதி

image

நெல்லை அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முருகன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதியை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அற்புதமான வாய்ப்பை வணிக ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அஞ்சல் அலுவலக வணிக பிரிவை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!