India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருவரங்க நேரியை சேர்ந்த சுதன் நித்தியானந்தம் (19) என்பவர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா சென்ற போது மூணாறில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இவருடன் சேர்ந்து 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருவரங்க நேரியை சேர்ந்த சுதன் நித்தியானந்தம் (19) என்பவர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா சென்ற போது மூணாறில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
நெல்லை அருகே உள்ளது தெற்கு விஜயநாராயணம். இவ்வூரில் முஸ்லீம்களே இல்லை. ஆனால் இங்கு ஆண்டு தோறும் ஆடி -16-ல் கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது. கந்தூரி விழாவை இங்கு இந்துக்களே நடத்துகின்றனர். விழாவிற்காக கேரளா உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் விஜயநாரயணத்திற்கு வருவது வழக்கம். இங்குள்ள பல இந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தர்காவின் பெயரில் மேத்தப்பாண்டியன், மேத்தா என்று பெயர் சூட்டுகின்றனர்.
பணி நிரந்தரம் தொடர்பாக தற்காலிக ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத முன்னாள் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசுக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (பிப்-19 ) உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்துள்ளார்.
கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தின் 38வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன அதன்படி 23, 24 ,25ஆகிய தேதிகளில் காலை 10.30மணிக்கு மாணவ மாணவிகளுக்கான அறிவில் வினாடி வினாடி, ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் sciencecentrenellaiednprog@gmailcom என்றமின்னஞ்சலில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
சந்திப்பு அண்ணாசிலை- பிரசன்னா காலனி வரை, பெருமாள்புரம்-பிரசன்னா காலனி, ஐஆர்டி பாலிடெக்னிக் விலக்கு -அரவிந்த் கண்மருத்துவமனை, சந்திப்பு ரயில்வே ஸ்டேஷன்-தாமஸ்நகர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. தகுதியானவர்கள் மினிபஸ்களை இயக்குவதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியை சேர்ந்தவர் பிபின் (28). இவர் நெல்லை சேரன்மகாதேவி அருகே புலவன்குடியிருப்பு பகுதியில் தனியார் செங்கல் சூளையில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று பணியின் போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர் இவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் மாதந்தோறும் 3 ஆம் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. நடப்பு மாதம் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு பாளை பெருமாள்புரம், சி.காலனி, சிதம்பரநகர் என்ற புதிய முகவரியில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
தெற்கு ரயில்வே முன்பதிவற்ற பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் தேவைகளை கருத்தில் கொண்டு அனைத்து ரயில்களிலும் நான்கு முன் பதிவற்ற பெட்டிகள் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி நெல்லை வழியாக செல்லும் கன்னியாகுமரி – புதுச்சேரி எர்ணாகுளம் -வேளாங்கண்ணி ரயில்களில் பொது பெட்டிகள் குறைக்கப்பட்டதாகவும், இது தற்காலிகமானது என நேற்று தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மீனவர் காலனியை சேர்ந்த பெயிண்டர் ராஜா என்பவரை அடிதடி பிரச்சினைக்காக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை காவல் நிலையத்திலிருந்து அவர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அவரை மீண்டும் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.