India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை அருகே மருத்துவக்கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் குப்பைகளை கையாளும் தனியார் நிறுவனத்தினர் திறந்தவெளியில் தீயிட்டு எரித்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிஎன்எஸ் 329, 271, 272 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 12(1) உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கடந்த 18-ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளார். அவரது 2 மாத செல்போன் பதிவுகளை நேற்று போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் போலீஸ் அதிகாரி அடிக்கடி பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட கழக மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி இன்று (மார்ச்.29) வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஏப்ரல் மாத மின் நுகர்வோர் குறைதீர்க்க கூட்டம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல்1ஆம் தேதி, வள்ளியூர் மின்கோட்டத்தில் ஏப்ரல். 4ம் தேதி நடைபெற உள்ளது. மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
திருநெல்வேலி மாநகர எல்லை பகுதியில் இன்று (மார்ச்.29) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இரவு நேர காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.
நெல்லை எஸ்.பி சிலம்பரசன் இன்று (மார்ச்.29) வெளியிட்ட செய்தி குறிப்பில், இன்ஸ்டாகிராமில் பண மோசடி நடைபெறுகிறது.எனவே இன்ஸ்டாகிராமில் அறிமுகமில்லாத நபர்களிடம் ஆன்லைனில் மொபைல் துணி போன்றவற்றை ஆர்டர் செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.இது போன்ற மோசடி நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் www.cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் தெரிவிக்கவும் என கூறியுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டப்படிப்புக்கான தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இன்று (மார்ச்.29) பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 1ம் தேதி விண்ணப்பம் திறக்கப்படும்.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தில் காரையாறு வனப்பகுதியில் இரண்டு யானைகள் சண்டையிட்டுக் கொண்டதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த யானையை பரிசோதனைக்கு உட்படுத்தி இறப்பை உறுதி செய்தனர். சண்டையிட்டுக் கொண்டதில் ஒரு யானையின் கொம்பால் குத்தப்பட்டதில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியகம் சார்பில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ. 74.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட மறுசீரமைப்பு பணிக்கு அனுபவம் வாய்ந்த ஏஜென்சிகள் & நிறுவனங்களிடமிருந்து இ- டெண்டர்கள் வரவேற்கப்படுகின்றது. www.eprocure, gov.in/eprocure/cppp – ல் டெண்டர் ID:2025_NCSM_853930_1 ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து டெண்டரை ஆன்லைனில் பதிவேற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று (மார்ச்-28) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கோழிப்பண்ணை அமைப்பதற்கு ரூ-25 லட்சம், ஆடுபண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் 50 லட்சம் வரை, பன்றி வளர்க்க 15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்பட உள்ளது .இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் இங்கே <
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி ஜூன் மாதம் 5-ஆம் தேதி துவங்கி ஜூலை 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்றாவது சுற்று போட்டிகள் திருநெல்வேலியில் ஜூன் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 7 போட்டிகள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.