India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லையை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் வேலை தொடர்பாக மர்ம நபர் அனுப்பிய வெப்சைட் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.22,16,985 அனுப்பி ஏமாற்றப்பட்டதாக மனுதாரர் cybercrime.gov.in என்ற மாநகர சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளித்தார். போலீசார் துரிதமாக செயல்பட்டு கேரளாவை சேர்ந்த சித்தீன் மற்றும் சுவிஸ் குமார் ஆகியோரை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெல்லை மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை பாப்பாக்குடி மற்றும் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இந்த முகாம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வடக்கன்குளத்தை சேர்ந்தவர் சேவியர் (80). கால்நடை துறையில் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் வாட்ஸ் அப் மூலம் பெங்களூர் சிபிஐ அதிகாரி மதன் குமார் பேசுவதாக குறிஞ்செய்தி அனுப்பி தொடர்ந்து வீடியோ காலில் பேசி அவரிடம் இருந்த 54 லட்ச ரூபாயை குறிப்பிட்ட இரு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரை நெல்லை சைபர் போலீசார் விசாரணை.

நெல்லை, சீதப்பற்ப நல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் 2020ம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில் கொண்ட நகரம் கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதை அடுத்து நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் அவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

நெல்லை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நெல்லை, பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியில் சேர்ந்தவர் சூரஜ் 21 இவர் அதே பகுதியில் உள்ள தேவாலையம் அருகே அமர்ந்து செல்போன் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து மர்மநபர்கள் அரிவாளால் அவரை தாக்கி அவரிடம் இருந்து ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூபாய் 3000 ரொக்க பணத்தை பறித்து சென்று விட்டனர். இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <

கல்வி உதவித்தொகை தருவதாக கூறி மோசடி, பெற்றோரின் Whatsapp எண்ணிற்கு QR Code ஒன்றை அனுப்புகின்றனர். PIN நம்பரை கேட்டும், அதன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சைபர் குற்றங்கள் நடைபெற்றால் சைபர் குற்ற இணையதளத்தில் www.cybercrime.gov.in & 1930 என்ற எண்ணிற்கு அழைத்து உடனடியாக தங்களுடைய புகாரினை பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். *ஷேர் செய்யுங்கள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.28] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை எஸ்பி அலுவலகத்தில் விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் என்ற பெயரில் போலியான சமூக வலைதளங்களை உருவாக்கி இணையதள குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது தொடர்பாக புகார் கொடுக்க 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.