India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் சாலை போக்குவரத்து நிறுவனம் தமிழ்நாடு அரசு மேம்பாட்டு கழகம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக ஆண், பெண் இருபாலருக்கும் கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://candidate.tnskill.tn.gov.in.skill வெப்சைட்டில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
▶️ தாமிரப்பரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.400 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
▶️ போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1 லட்சம் புத்தகங்கள், மாநாட்டு கூட வசதிகளுடன் நூலகங்கள்.
▶️நரசிங்கநல்லூரில் புதிய தொழிற்பேட்டை.
▶️ மீன் இறங்குதளம், மீன்பிடி வலைகள் பின்னுதல்.
▶️ரூ.225 கோடி மதிப்பீட்டில் 14.2 கிமீ மேற்கு புறவழிச்சாலை பணிகள் இந்தாண்டு தொடங்கும்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார், அதில் காவிரி, வைகை, நொய்யல், தாமிரப்பரணி ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்கும் பொடுட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட நதிக்கரை மேம்பாட்டு பணிகள் நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை தொழிலாளர் உதவி ஆணையாளர் திருவள்ளுவன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கடைகள் ,வர்த்தக நிறுவனங்கள் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியத்துடன் ஏப்ரல் 1 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி மற்றும் குறைந்தபட்ச ஊதியம் சேர்த்து ஏப்ரல் 1முதல் வழங்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு இன்ஸ்பயர் விருது வழங்கி வருகிறது. 2024-25 கல்வியாண்டில் விருது பெற தகுதியான மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1197 மாணவ, மாணவிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 22 மாணவ, மாணவிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு சிஇஓ சிவக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பணகுடி அருள்மிகு இராமலிங்க சுவாமி திருக்கோயிலில் ஓதுவார் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் அசோக்குமார், செயல் அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் மார்ச்.1 அன்று 18 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் 35 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்கக் கூடாது. விண்ணப்பங்களை ஏப்.1 மாலை 5:45 மணிக்குள் கோயில் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேரன்மாதேவியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவன் மணிகண்டன் கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி சேரன்மகாதேவியில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய வழக்கறிஞர் ராஜா ராம் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச்-13] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி (SJHR) துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்படி மாநகர பகுதிகளில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதைதடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், இன்று(மார்ச்.13) மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், 18 வயது பூர்த்தியடையாத தங்கள் குழந்தைகள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மூன்றாவது நாளாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சம் சிங்கம்பட்டி அடுத்த மாஞ்சோலை ஊத்து பகுதியில் ஆறு மில்லி மீட்டர் மழை நாலுமுக்கு பகுதியில் 4 மி.மீ மழை, பாபநாசத்தில் 4 மி.மீ மழை, கொடுமுடியாறு அணை பகுதியில் 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த தகவலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.