Tirunelveli

News April 15, 2024

வேட்பாளருக்கு மரத்திலான இரட்டை இலை சின்னம் வழங்கி மாணவர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜான்சிராணி பாளையங்கோட்டை பகுதியில் நேற்று இரவு பிரச்சாரம் செய்த போது அவருக்கு பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம் பர்கிட் மாநகரத்தில் 9ம் வகுப்பு மாணவன் சுரேஷ் ஆனந்த் வேட்பாளர் பெயர் பொறிக்கப்பட்ட மரத்தில் செய்த இரட்டை இலை சின்னத்தை கொடுத்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு வேட்பாளர் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 15, 2024

திருநெல்வேலியில் 103.60 மில்லி மீட்டர் மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (ஏப்.15) காலை வரை மொத்தமாக 103.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக மாஞ்சோலை பகுதியில் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News April 15, 2024

நெல்லையில் போலீஸ் குவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு இன்று (ஏப். 15) பிரதமர் வருவதை ஒட்டி பாதுகாப்பிற்காக நெல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்ட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி அம்பாசமுத்திரம் வருவதை ஒட்டி நெல்லையில் 2500 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News April 15, 2024

நெல்லை: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

image

நாங்குநேரி பட்டபிள்ளை வடக்கு தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் என்ற 5ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நேற்று (ஏப்ரல் 14) மதியம் வீட்டில் கம்பரசர் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து கீழே விழுந்தார். உடனே சிறுவனை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 15, 2024

நெல்லை: இரவிலும் தொடரும் பிரச்சாரம்

image

நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து 17வது வார்டுக்குட்பட்ட பழைய பேட்டை, சர்தார்புரம், காந்தி நகரில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி தலைமையில் வாரிய தலைவர் விஜிலா சத்யானந்த் மற்றும் திமுக மகளிர் அணியினர் நேற்று (ஏப்ரல் 14) இரவு வீடு வீடாகச் சென்று கைச்சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

News April 14, 2024

பாஜ வேட்பாளருக்கு சம்மன்

image

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பபட்டுள்ளது. தாம்பரம் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றபட்ட விவகாரம் குறித்து விசாரிக்க இன்று (ஏப்.14) சம்மன் அனுப்பிய காவல் துறையால் நெல்லை பார்லிமென்ட் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இதனால் திமுக, காங் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

News April 14, 2024

நெல்லை மாவட்டத்தில் மழை

image

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) நெல்லை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 14, 2024

நெல்லையப்பர் கோவிலில் நாளை முக்கிய நிகழ்ச்சி

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவில் நாளை (ஏப்ரல் 15) சோமவார சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சகஸ்ர லிங்கம் சன்னதி முன் மாலை 5 மணிக்கு இந்த வழிபாடு நிகழ்ச்சி பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழு சார்பில் நடைபெறுகிறது. சிவ பக்தர்கள் திரளாக பங்கேற்க திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.

News April 14, 2024

நெல்லையில் 61 நாட்களுக்கு தடை

image

மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான கூத்தங்குழி உவரி, கூட்டபனை , பெருமணல், பஞ்சல், கூடங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் நாளை முதல் 61 நாட்களுக்கு ( ஏப். 15 ) கடலுக்கு செல்ல மாட்டார்கள்.  எனவே மீன்களின் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

News April 14, 2024

மழை அளவு வெளியிட்ட ஆட்சியர்

image

நெல்லையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று (ஏப்.14) காலை வரை மாவட்டம் முழுவதிலும் மொத்தமாக 32 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஏப்.14) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இன்றும் தொடர்ந்து வானிலை மந்தகமாக காணப்படுவதால் இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

error: Content is protected !!