Tirunelveli

News March 16, 2025

நெல்லை: கடன் தொல்லை தீர்க்கும் ஆலயம்

image

நெல்லை, அம்பாசமுத்திரத்தில் புருஷோத்தம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால் ‘புருஷோத்தமர்’ என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு ‘ஏகபத்தினி விரதர்’ என்றும் பெயருண்டு. மூலவர் புருஷோத்தம பெருமாள் கைகளில் 2 சங்கு 2 சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*

News March 16, 2025

நெல்லை: மாணவிக்கு பாலியல் தொந்தரவு – ஆசிரியர் கைது

image

களக்காடு பகுதியை சேர்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வரும் மாவடி புதுரை சேர்ந்த மோகன் (54) என்பவர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் மோகன் நேற்று கைது (மார்ச்-15) செய்யப்பட்டார்.

News March 16, 2025

கோயில்களில் அறங்காவலர் குழு விண்ணப்பிக்க வாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரூ.10 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருவாய் உள்ள கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்ய மாவட்ட குழு அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு நியமன உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை உதவி ஆணையர் இந்து சமய அறநிலை துறை அலுவலகம் 24பி, 26வது குறுக்கு தெரு மகாராஜா நகர் நெல்லை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

News March 16, 2025

பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு

image

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவரும் பிரபல எழுத்தாளரும், தமிழ் ஆர்வலருமான நாறும்பூ நாதன் உடல்நலக் குறைவால் இன்று(மார்ச்.16) காலமானார். அவருடைய மறைவு எழுத்தாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் பாளையங்கோட்டை சாந்தி நகரில் குடியிருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2025

நெல்லை மாவட்டத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய ராணுவ ஆள் சேர்ப்பிற்கு அக்னி வீர் திட்டத்தின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோர் இதில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல்.10 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. <>லிங்க் <<>>கிளிக் செய்யவும்

News March 16, 2025

மறைந்த தவெக மாவட்ட செயலாளரின் கண்கள் தானம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி நேற்று(மார்ச்.15) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு தமிழக வெற்றிக் கழக நிறுவன தலைவர் விஜய் உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்ட தமிழக வெற்றிக் கழக கட்சியினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.

News March 15, 2025

அமெரிக்க அதிபர் சந்திக்க நினைத்த நெல்லை நபர் தெரியுமா.?

image

நெல்லை களக்காட்டை சேர்ந்தவர் பாலம் கல்யாணசுந்தரம். சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். பாலம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் 40 ஆண்டுகளாக சமூக சேவையாற்றி தன் சொந்த பணத்தில் ரூ.30 கோடிக்கும் மேல் செலவழித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இவரை தன் தந்தையாக தத்தெடுத்தவர். அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் இந்தியா வருகையின் போது அரசு சாராமல் சந்திக்க நினைத்த நபரில் இவரும் ஒருவர். *ஷேர் பண்ணுங்க*

News March 15, 2025

நெல்லை: போக்சோவில் ஆட்டோ டிரைவர் கைது

image

தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30) ஆட்டோ டிரைவரான இவர் மாணவ மாணவிகளை டியூஷனுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது 13 வயது சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் படி தச்சநல்லூர் போலீசார் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதனிடையே அவரையும் அவரது ஆட்டோவையும் தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவும்  செய்துள்ளனர்.

News March 15, 2025

TN BUDGET – நெல்லையில் மழைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம

image

2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச்.15) காலை 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். திருநெல்வேலி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைவாழ் உழவர் முன்னேற்ற திட்டத்திற்காக ரூ.22.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

தவெக செயலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

image

நெல்லை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளராக இருந்து வந்தவர் சஜி. இவர் இன்று சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் பொது குழுவில் பங்கேற்க சென்றிருந்தபோது மாரடைப்பினால் உயிரிழந்தார். பொறுப்பேற்று மூன்று மாதம் ஆவதற்குள் அவர் உயிரிழந்தது அவரது கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!