India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மக்களே, உங்கள் வீடு/நிலத்திற்கு தெளிவான வரைபடம் (FMP) இல்லையா? இடம் நீளம், அகலம் தெரியாமா கவலையா? இனிமேல் அவசியமில்லை! இங்கு <

நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறையில் தாசில்தார், 7 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பிரிவு தனி தாசில்தார் பாலமுருகன் நில எடுப்பு தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் மறுக்கால் குறிச்சி சிப்காட் தொழில் பூங்கா, நில எடுப்பு தனி தாசில்தார் முருகன் தேர்தல் பிரிவு புதிய தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவித தவறும் இல்லை என்பதை நிறுவ எதிர் தரப்பினரை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்துக்கு கட்டுக்கதைகளை புனைந்து வந்தது திமுக அரசு. இந்த அவசரத்திற்கு பின்னால் ஏதோ ஒரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்து இருக்கிறது என்ற மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது. அப்பாவி பொதுமக்களை காவு வாங்கிய கயவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என நயினார் அறிக்கை.

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே <

நெல்லை மாவட்டத்தில் அரசு தேர்வு துறை மூலம் மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரை அனைவருக்கும் உரிய மேல்நிலை பொதுத்தேர்வு எழுதி அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை பெறாதவர்களுக்கு வருகிற ஜனவரி 10ஆம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கபட்டுள்ளது. அதன் பின்னர் அறிவிப்பு இன்றி அளிக்கப்படும் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. எனவே சம்பந்தபட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நெல்லை மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<

நெல்லை, மதவக்குறிச்சி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் மர்ம நபர்கள் சுமார் 80க்கும் மேற்பட்ட கோழிகளின் உடல்கள் கோழி கழிவுகளை கொட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு மற்றும் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுக்குறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் டவுன் அண்ணா தெருவை சேர்ந்த பரத்மாரி என்பவர் கோழிக்கழிவுகளை கொட்டியது தெரியவந்தது. அவர் கைது செய்யபட்டார்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி மாணவன் சின்னதுரையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக வெட்டினர். சாதிய வன்மத்தால் நடைபெற்றதாக கூறப்பட்ட இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தாக்குதலுக்கு பின் சின்னத்துரை குடும்பம் ரெட்டியார்பட்டியில் குடியேறியது. இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் நேற்று நள்ளிரவு சின்னத்துரையின் தாய் அம்பிகா உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (அக்.13) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.13] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சரவணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.