Tirunelveli

News March 24, 2025

நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

நெல்லை மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ரகு இப்பணிகளை மேற்பார்வை செய்வார்.

News March 24, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

அரசு பஸ் பாஸ் இணையதளம் வாயிலாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படும் நிலையில் ஏற்கனவே பயன்படுத்தி வரும் 31-03-2025 வரை செல்லத்தக்க பாஸ்களை 30-06-2025 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துமாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம். நாளை மறுநாள் நடைபெறவிருந்த முகாம் ஒத்திவைக்கப்படுவதாகவும் இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News March 24, 2025

நெல்லை: தீண்டாமை கடைபிடிக்காத கிராமங்கள்

image

கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆதிதிராவிடர் & பழங்குடியினர் மாநில ஆணைய ஆய்வுக் கூட்டத்தில் மாநில ஆணைய தமிழ்வாணன் பங்கேற்று தீண்டாமை இல்லாத கிராமத்திற்கு ரூ.10 லட்சம் நிதியை வன்னிகோணேந்தல், முதுமொத்தன்மொழி கிராமங்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் கலெக்டர் சுகுமார் முன்னிலை வகித்தார். நெல்லையில் தொடர் சாதிய பிரச்சனை இருந்து வரும் நிலையில் 2 கிராமங்கள் தீண்டாமையின்மை கடைபிடிப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

News March 24, 2025

நெல்லை: தனிப்படை போலீசார் தீவிர வேட்டை 

image

டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஆன இவர் இடப்பிரச்னை காரணமாக கடந்த 18-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கிருஷ்ணமூர்த்தி, பீர்முகமது, அக்பர் ஷா ஆகிய 3 பேர் கைதாகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி நூர் நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News March 24, 2025

நீதிமன்ற வளாகத்தில் சிக்கிய நபர்களால் பரபரப்பு

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் இன்று (மார்ச்24) போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பத்து பேர் சிக்கினர். நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நூர்நிஷா இன்று சரணடைவதாக தகவல் வந்ததை அடுத்து நீதிமன்றத்தில் போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்தனர். இதில் சந்தேகத்தின் பேரில்10 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News March 24, 2025

புகையிலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

image

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் புகையிலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஆல் தி சில்ட்ரன் நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பொது மக்களுக்கு புகையிலை குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு அவர்களின் கையெழுத்து பெறப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கையெழுத்துக்களை புகையிலைக்கு எதிராக எதிராக பதிவு செய்தனர்.

News March 24, 2025

புருஷோத்தம பெருமாள் கோவிலில் நாளை திருவிளக்கு பூஜை

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிரசித்தி பெற்ற புருஷோத்தம பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாளை (மார்ச்.25 ) பங்குனி திருவோணத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு திருமஞ்சனம் திருவாராதனை, மாலை 5 மணிக்கு தீபத்திருவிளக்கு பூஜை நடைபெறு உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2025

நெல்லை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் டிஇஐசி. டி- அடிக்சன் பிரிவில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற உளவியல் கவுன்சிலர், தொழில்நுட்ப அலுவலர், சோசியல் ஒர்க்கர் உள்ளிட்ட 6 பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பத்தை tirunelveli.nic.in இல் பதிவு செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஏப் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

News March 24, 2025

நெல்லையில் 6 பேர் குண்டர் குட்டத்தில் கைது

image

தென்காசியை சேர்ந்த கணேஷ் முத்துக்குமார் (36), முருகப்பெருமாள் ( 27), ரமேஷ் (24), சக்திவேல் (28), அலெக்ஸ் சற்குணம் (27), பாளையங்கோட்டை சேர்ந்த முத்துக்குமார் (26) ஆகியோர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் வினோத் சாந்தாராம் பரிந்துரையின் படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News March 24, 2025

நெல்லை: இரவு ரோந்து பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு காவல் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி சரகத்தில் முன்னீா்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் காவல் பணியில் ஈடுபடுவார். அவரது கைபேசி தொடர்பு எண் 83000 71556. இதுபோல் நெல்லை ஊடகம் நெல்லை, ஊரகம், நாங்குநேரி வள்ளியூர், அம்பை, ஆகிய பகுதிகளுக்கும் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!