India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று(செப்.,24) அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இப்போட்டியில் காவல்துறையினர், வருவாய் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமீபமாக சில மாநிலங்களில் அம்மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் மசோதாகளுக்கு கூட அம்மாநில ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதில்லை. பேரவையை அவமதிப்பது என்பது அந்த சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களை அவமதிப்பதாகும் என டெல்லியில் நேற்று(செப்.,23) நடைபெற்ற காமன்வெல்த் பாராளுமன்ற கூட்டமைப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம்(80). இவரிடம் மும்பை சைபர் கிரைம் போலீஸில் இருந்து பேசுவதாக மர்ம நபர் வீடியோ காலில் பேசி வங்கி கணக்கு விபரங்களை பெற்றுள்ளார். பின்னர் அவரிடம் ரூ.99 லட்சம் ஏமாற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இது குறித்து நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தரும் புவியியல் துறை நிபுணருமான சந்திரசேகர் கூறுகையில், பூமிக்கு அடியில் நிகழும் திடீர் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் அதிக வெப்பநிலை ஏற்படும் போது பூமிக்கு அடியில் நீரோட்டம் நகன்று ஏற்படும் வறட்சி, வெயில் அதிகம் பதிவாகும் பகுதிகளில் திடீர் மழை பெய்தாலோ ஏற்படலாம் என்றார்.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ், திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள வெளி ஆதார முறையில் தற்காலிகமாக சமுதாய அமைப்பாளராக பணிபுரிவதற்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்த 35 வயதிற்குட்பட்ட, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.
நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்; நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடி நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தங்கள் ஆதார் அட்டையுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தனியார் உர கடைகளில் அரசு நிர்ணயத்த விலையில் உரங்களை வாங்கி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இளைஞரிடம் பூணூல் அறுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் காவல்துறை விளக்கமளித்துள்ளது. இளைஞர் தெரிவித்த நேரத்தில் அந்தத் தெருவில் உள்ள அனைத்து பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டது. இளைஞர் கூறுவதுபோல் அந்த நேரத்தில் எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை என்று நெல்லை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இளைஞரின் குடும்பத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார்.
10ஆவது காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் இந்திய வட்டார மாநாடு டெல்லியில் இன்று(23.9.2024) நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தமிழ்நாடு இல்லத்தில் உள்ளுறை ஆணையர்(Resident Commissioner) ஆசிஷ் குமார் I.A.S அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கோத்து கொடுத்து வரவேற்றார்.
நாங்குநேரி டோல்கேட்டில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டுடன் 3 பேர் கைதாகினர். இந்நிலையில் அந்தக் கும்பலின் முக்கிய டிசைனரான ராஜேந்திரன் என்பவரை மூன்றடைப்பு போலீசார் நேற்று(செப்.,22) கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், கள்ளநோட்டு ஏஜெண்டுகள் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறினால் பொதுமக்கள் உடனடியாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
ஒன்றிய இணை அமைச்சர் வேல்முருகன் நெல்லையில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும்; கோயில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது; கோயில் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய வாரியம் அமைக்க இதுவே நல்ல நேரம் என்றார்.
Sorry, no posts matched your criteria.