Tirunelveli

News October 23, 2024

வள்ளியூர்-நாகர்கோவில் இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரத்து

image

திருவனந்தபுரம் கோட்டத்தில் நாகர்கோவில் சுற்று பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் – நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ், இன்று(அக்.,23) இரு மார்க்கத்திலும் வள்ளியூர் – நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. அந்த ரயில் வள்ளியூரில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு செல்லும் என இன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News October 23, 2024

தீபாவளி நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

தீபாவளியையொட்டி நெரிசலை தவிர்க்க சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி இடையே எழும்பூர், செங்கல்பட்டு, நெல்லை வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அக்.,29 மற்றும் நவ.,5ம் தேதிகளில் இரவு 11.45க்கு புறப்படும் சிறப்பு ரயில்(06001)  மறுநாள் பகல் 12.15-க்கு கன்னியாகுமரியை சேரும். இந்த ரயிலுக்கு முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் குவிஸ் போட்டி

image

பிரபல தமிழ் நாளிதழான இந்து தமிழ் குழுமம் மற்றும் இந்தியன் வங்கி சார்பாக மாணவர்களுக்கான ஆன்லைன் குவிஸ் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. https://www.htamil.org/IBQUIZ இதற்கு பதிவு செய்வதற்கு மேலே உள்ள லிங்க் மூலம் மாணவர்கள் 27.10.24 வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9940268686 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News October 23, 2024

தீபாவளி – மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட காவல்துறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல கடைகள் பெயரில் லிங்க்குகளை அனுப்பி குலுக்கல் முறையில் பரிசு அளிப்பதாக வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம். உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்றனர்.

News October 23, 2024

தீபாவளி பட்டாசு: நெல்லை கலெக்டர் வேண்டுகோள்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த ஆண்டைப் போல தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதை கருத்தில் கொண்டு குறைந்த ஒலியுடன் வெடிக்க வேண்டும்.

News October 23, 2024

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற நெல்லை வீரர்

image

நெல்லை மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பாளை மு.ந. அப்துர் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி மாணவர் யஷ்வந்த்ராஜ் 3000 மீட்டர், மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2ம் பரிசு வென்றுள்ளார். மேலும் தனிநபர் சாம்பியன் விருதும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற இவரை சபாநாயகர் அப்பாவு இன்று (அக்.22) பாராட்டினார்.

News October 23, 2024

தீபாவளி முன்பதிவு நாளை ஆரம்பம் – சங்கம் அறிக்கை

image

தீபாவளி பண்டிகை முடிந்து வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி சென்னைக்கு செல்ல கல்லிடைக்குறிச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கல்லிடைக்குறிச்சி இரயில் பயணிகள் நலச்சங்கம் இன்று (அக்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

News October 23, 2024

நெல்லை மாவட்டத்தில் வறண்டு போன 800 குளங்கள்

image

நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (அக்.22) லேசான சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையாத காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள 1200 குளங்களில் சுமார் 800 குளங்கள் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது. மீதமுள்ள குளங்களில் பெயரளவுக்கு தண்ணீர் இருக்கிறது. களக்காடு வட்டம் அதன் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டு காணப்படுகிறது.

News October 23, 2024

பம்பை வழியாக தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு

image

தீபாவளி பண்டிகை முடிந்து செல்பவர்கள் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து நவம்பர் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக விருதுநகர், மதுரை, திருச்சி சென்று அதிகாலை நான்கு பத்து மணி அளவில் தாம்பரத்தை சென்றடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News October 23, 2024

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் நெல்லை வருகை

image

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா வருகிற 26 ஆம் தேதி சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பட்டம் அளிக்க உள்ளார். இதற்காக அவர் நெல்லைக்கு வருகை தர உள்ளார். விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!