India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுகவின் புதிய கழக உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் பணிகளை மேற்பார்வையிட்டு விரைந்து முடிப்பதற்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (அக்.1) அறிவித்துள்ளார். அதன்படி அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் செயலாளருமான பாப்புலர் முத்தையா தேனி மேற்கு பகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ராஜகண்ணப்பனை திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம் ஐயப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்டத் துணை அமைப்பாளர் வீரபாண்டியன், வெங்கடேஷ் மற்றும் பலர் உடன் சென்றனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (அக்.1) விடுத்துள்ள செய்திகுறிப்பில்; நெல்லை மாவட்டத்தில் வீடுகள் தோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்துபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இல்லங்களில் வைத்திருக்கும் நூலக நூல்களின் முகவரி, பராமரிப்பு, முழு விவரம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட நூலகரின் 9486251779 என்ற எண்ணிற்கு புகைப்படத்தை இணைத்து நவம்பர் 30ஆம் தேதிக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை உதவி இயக்குனர் கதர் கிராம தொழில்கள் அலுவலக கதர் விற்பனை நிலையத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா நாளை (அக்.2) நடைபெற உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு காந்தியடிகள் படத்தை திறந்து வைத்து சிறப்பு விற்பனையை துவங்கி வைக்க உள்ளார்.
நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து, மலைத்தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஆகியோர் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் தொழிலாளர் நல நிதி பங்காக ரூ.60 செலுத்த வேண்டும். இதனை web-portal //iwmis.lwb.tn.gov.in ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என்றார்.
நெல்லை – எழும்பூர் இடையே வியாழக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரயில் அருப்புக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, சிதம்பரம், கடலூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் குறைவாக இருப்பதால் ரயில்வேக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த ரயிலை முன்புபோல தென்காசி மார்க்கமாகவோ அல்லது நேர் வழியாகவோ இயக்க வேண்டும் என நெல்லை மற்றும் தென்காசி ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லை-செங்கோட்டை ரயில்களில் எப்போதும் கூட்டம் நெரிசல் காணப்படுகிறது. காலை மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு & தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் என ஏராளமானோர் பயணிக்கின்றனர். விடுமுறை நாளில் வெளியூர் செல்வோர் அதிகளவு பயணிக்கின்றனர். இதனால் இடம் கிடைக்காமல் நடைபாதை, படிக்கட்டுகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
நெல்லை வருவாய் மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக 16 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் பாளை., தாசில்தாராகவும், நெல்லை தாசில்தார் ஜெயலட்சுமி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக தனி தாசில்தாராகவும், பாளை., தாசில்தார் சரவணன் நெல்லை கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்க உள்ளார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ பணியின் போது உயிர் நீத்த படை வீரர்களின் கைபெண்கள் தொழில் தொடங்க சிறப்பு மானிய கடன் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 10ம் தேதிக்குள் முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.