India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் அமுதா ராணி, ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து டாக்டர் அமுதா ராணிக்கு நெல்லை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் மற்றும் பேராசிரியர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சேரன்மகாதேவி வட்டாரம் நடுக்கல்லூர் பகுதியில் நேற்று(அக்.,3) மாலை நடைபெற்ற தாமிர ஆர்கானிக் உழவர் உற்பத்தியாளர் நிறுவன மதிப்பு கூட்டல் மைய திறப்பு விழாவில் கலெக்டர் கார்த்திகேயன் பேசினார். அவர் பேசுகையில், நிலக்கடலை செடியை ஆடு மாடுகளுக்கு தீவனமாக வழங்கினால் ஊட்டச்சத்து அதிகரித்து மாடுகளில் பாலின் தரம் மற்றும் பாலின் அளவு அதிகரிக்கும் என்றார். SHARE IT.
நெல்லை மாவட்ட அறிவியல் மையம், உலக விண்வெளி வார (World Space Week) 2024 கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகிற 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 6 முதல் 8 வகுப்பு பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி ‘எதிர்கால விண்கலம்’ (Future Spacecraft) என்ற தலைப்பில் காலை 10.30 மணிக்கு நடத்த திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள மாணவ-மாணவிகள் அன்று நேரில் பங்கு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள் விழா மற்றும் கோமதி அம்மாள் உதவும் கரங்கள் அறக்கட்டளை 5ம் ஆண்டு தொடக்க விழா வரும் 12ஆம் தேதி முக்கூடல் ஆதிசிவம் திருமண மண்டபத்தில் கோல போட்டி, மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. போதையின் விளைவுகள் குறித்து நாடகம் நடக்கிறது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ள இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவ பிரிவில் துறை தலைவராக பணியாற்றும் டாக்டர் ராமலட்சுமி டீன் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக இன்று (அக்.3) நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன் மற்றும் டாக்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாப்பாக்குடி புது கிராமம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (50) என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு நந்தன் தட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கி மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று (அக்.3) ஆலங்குளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்தவல்லி பாலகிருஷ்ணனுக்கு 3 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
நவதிருப்பதி கோயில்களுக்கு புரட்டாசி சனிக்கிழமைகளை முன்னிட்டு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நாளை மறுதினம்(அக்.,5) 3வது சனிக்கிழமையை முன்னிட்டு புதிய பஸ் நிலையத்தில் சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் கார்த்திகேயனை கண்டித்து அரசு அலுவலர்கள் கண்டன பதைகை ஒன்று வைத்துள்ளனர். அதில், நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஊழியர் விரோத போக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆட்சியரை கண்டித்து பாதகை வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி வழியாக திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் வருகிற 6, 8, 10 ஆகிய தேதிகளில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8:25 மணிக்கு பதிலாக 10.35 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு நள்ளிரவு வந்து செல்லும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. திருச்சி அருகே தண்டவாள பராமரிப்பு நடைபெறுவதன் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. SHARE IT.
சென்னை முதன்மைச் செயலாளர் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று 137 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நெல்லை (அமலாக்கம்) தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.