India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல் 7 இரவு முதல் காலை வரை இரவு காவல் இருந்து பணியில் உள்ள அதிகாரிகள் விபரம் உட்கோட்ட காவல் நிலையங்கள் அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளன .அவர்களது கைபேசி தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் உதவி தேவைப்படுவார்கள் காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க
கடந்த ஜனவரி 1 முதல் இன்று வரையிலான காலத்தில் இந்தியாவிலேயே மிக அதிக மழையை பெற்ற இடமாக திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான ஊத்து மலை கிராமம் உள்ளது. ஊத்துமலையில் 1780 மிமீ மழையை பெற்று தனது முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளது என வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். (நெல்லையில் அதிக அளவு மழை பதிவாகும் இடமாக ஊத்துமலை உள்ளது) *ஷேர் பண்ணுங்க
சீதபற்பநல்லூர் சேர்ந்த முத்து என்பவரது மகன் மாதேஷ் வயது 6. இவர் அங்கன்வாடியில் படித்து வருகிறார். நேற்று சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பங்கள் விழுந்தன. இன்று காலை அதே பகுதியில் நடந்து சென்ற மாதேஷ் மின் வயரில் மிதித்து விட மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தான். சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (INSURANCE) பிஸ்னஸ் டெவலப்மென்ட் பணிக்கு காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இங்கே <
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல் 6 இரவு முதல் நாளை காலை வரை, இரவு காவல் பணியில் உள்ள போலீசார் விவரம், உட்கோட்ட காவல் நிலையங்கள் அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளன .அவர்களது தொடர்பு தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் உதவி தேவைப்படுவோர்கள் மேலே உள்ள புகைப்பட்டத்தில் இருக்கும் காவல் அதிகாரிகளின் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 95 முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், 10 குழு வட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 50 அங்கன்வாடி உதவி பணியாளர்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை www.icds.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தூத்துக்குடியையை சேர்ந்த தொழிலாளி வின்சென்ட். போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த வழக்கில் தற்போது டிஎஸ்பியாக இருந்து வரும் ராமகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்நிலையில் மருத்துவ சோதனைக்கு பின் அவர்கள் இன்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2 நாட்கள் பெய்து வரும் மழையால் தென் மாவட்டங்களில் இன்று வெப்பநிலை குறைந்துள்ளது. வெப்பநிலை அதிகரிக்காததால் இன்று தென்தமிழக மாவட்டங்களில் மழையும் குறைந்துள்ளது. இன்று ஏப்ரல் 6 பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால்இன்று மாலை, இரவு நேரங்களில் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் தனியார் நிறுவனத்தில் “பாதுகாப்பு அதிகாரி” பணிக்கு ரூபாய் 15,000 முதல் 25,000 சம்பளம் வரை வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் இந்த வேலைக்கு போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
மானூர் மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்த காளிதாஸ் கருப்பசாமி மாரியப்பன் ஆகியோரிடம் மதுரையைச் சேர்ந்த பிரேம்குமார் அவரது மனைவி காளிஸ்வரி இருவரும் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4,05,000 பணத்தை மோசடியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வந்த பிரேம்குமார் தம்பதியை கோவையில் இன்று போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.