Tirunelveli

News August 6, 2025

திருநெல்வேலி: போராட்டங்களுக்கு தடை – காவல்துறை

image

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் இன்று வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்: திருநெல்வேலியில் வருகின்ற அடுத்த 15 நாட்களுக்கு பொதுமக்கள் அனுமதியின்றி கூடுதல் போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பாக இந்த உத்தரவானது நாளை (ஆகஸ்.06) முதல் வருகின்ற (ஆகஸ்.20) வரை அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

News August 6, 2025

நெல்லை மீன் பிடிக்க சென்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில், இந்திரா காலனியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சந்தன குமார், மீன் பிடிக்க சென்றபோது ஊரா குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 6, 2025

நெல்லை: மேயர் தலைமையில் குறைத்தீர் முகாம்

image

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனு பெற்றார். மாநகரின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் துணை மேயர் கே ஆர் ராஜி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 5, 2025

BREAKING: நெல்லையில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை, சேரன்மகாதேவியை சேர்ந்த 16 வயது மாணவன் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி ஒருவரை இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்ததாக கூறப்படுகிறது. வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் மாணவி வீட்டில் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் உறவினர்களான 5 சிறார்கள் இன்று மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதுக்குறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரணை.

News August 5, 2025

நெல்லை: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி நிறுவனத்தில் ( OICL ) 500 அசிஸ்டண்ட் காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கபடுகிறது. டிகிரி முடித்தவர்கள் 02.08.2025 முதல் 17.08.2025 க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News August 5, 2025

கவின் கொலை.. சுர்ஜித் தாயாருக்கு சம்மன்!

image

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி, குற்றவாளி சுர்ஜித்தின் தயார் கிருஷ்ணகுமாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர், ஆகஸ்ட் 15க்குள் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

News August 5, 2025

BREAKING: கவின் கொலை.. யாரும் தப்பிக்க கூடாது!

image

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கை நெல்லை நீதிபதி தலைமையில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் இன்று, கவின் கொலை வழக்கில் யாரும் தப்பிக்க கூடாது. முறையாக விசாரணை நடத்தி 8 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News August 5, 2025

நான்கு பேர் மீது குண்டாஸ்.. நெல்லை ஆட்சியர் உத்தரவு

image

அம்பை முடபாலத்தைச் சேர்ந்த முகேஷ் (20), சுனில் ராஜ் (19), முத்து (21), கணேசமூர்த்தி (22) ஆகியோர் கல்லிடைகுறிச்சியில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, பொது சொத்து சேதம் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர். அம்பை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வேண்டுகோளின்படி, மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையால், கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டார்.

News August 5, 2025

JOB ALERT: நெல்லை கூட்டுறவு வங்கியில் வேலை

image

நெல்லை இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கும் மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். நெல்லைக்கு குறிப்பிட்ட அளவு காலியிடங்கள் உள்ளன. ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து பார்க்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப். 12ல் நடைபெறும். அரசு வேலையில் தேடுவோருக்கு SHARE செய்யவும்.

News August 5, 2025

நெல்லையில் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அரசு சார்பில் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண்கள் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இதற்கு www.tnuwwb.tn.gov.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெருமாள்புரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT

error: Content is protected !!