Tirunelveli

News November 1, 2024

நெல்லை: 171 டிரைவர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

image

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2,033 டிரைவர், கண்டக்டர்கள், 75 டெக்னீசியன்களை நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், மதுரையில் 95, நெல்லையில் 171 டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் எம்.டி.சியில் 323 டிரைவர், கண்டக்டர், எஸ்.இ.டி.சியில் 318 டிரைவர், கண்டெக்டர்கள் நிரப்பப்படவுள்ளது.

News October 31, 2024

மாநகரின் இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (அக்டோபர் 31) இரவு ரோந்து நியமனம் செய்யப்பட்ட காவலர்களின் பெயர் அவர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர். இரவு நேர உதவிக்கு பொதுமக்கள் இந்த காவலர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News October 31, 2024

நெல்லைக்கு கனமழை எச்சரிக்கை!

image

பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையான இன்று 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் இன்று (அக்.31) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News October 31, 2024

பாதுகாப்பே ஆனந்தம்- நெல்லை மாநகர காவல் துறை

image

நெல்லையில் தீபாவளி பண்டிகை இன்று(அக்.31) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மாநகர காவல் துறை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பாதுகாப்பான தீபாவளியை ஆனந்தமான தீபாவளி என விழிப்புணர்வுடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News October 31, 2024

தீபாவளி பட்டாசு – நெல்லை ஆட்சியர் உத்தரவு

image

நெல்லை மாவட்ட பகுதிகளில் தற்போது பரவலாக அனைத்து இடங்களிலும் மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கார்த்திகேயன் கூறும் போது, நெல்லை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க வேண்டாம். மாசு, ஒலி ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

News October 31, 2024

நெல்லையில் இன்றைய (அக்.31) நிகழ்ச்சிகள்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று (அக்.31) வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிகள்; *நெல்லையப்பர் அன்னை காந்திமதி அம்மன் கோவிலில் இரவு 7 மணி ஐப்பசி திருக்கல்யாணம் மூன்றாம் நாள் ஊஞ்சல் வைபவம். *காலை 10 மணி முதல் பாளையங்கோட்டை இஸ்கான் கோயிலில் மக்களே ஆரத்தி எடுக்கும் தீபாவளி தீபத் திருவிழா வழிபாடு. *அனைத்து கோயில்களிலும் தீபாவளி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் காலை 6 மணி முதல் நடைபெறுகிறது.

News October 30, 2024

தீபாவளி குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தீபாவளி பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடவும் மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பொதுமக்கள் இரவு 10 மணிக்குப் பிறகு பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News October 30, 2024

பேட்டையில் விவசாயி கொலை – 5 பேர் சிக்கினர்

image

திருநெல்வேலி பேட்டை காவல் நிலைய எல்கையில் உள்ள மலையாளமேட்டில் நேற்று (அக்.29) இரவு நடந்த விவசாயி பரமசிவம் என்பவர் கொலையில் சந்தேகத்திற்குரிய ஐந்து நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேட்டை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா கூறினார்.

News October 30, 2024

பல்வீர் சிங் ஏடிஎஸ்பிக்கு விரைவில் சம்மன்

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏடிஎஸ்பிஆக பணியாற்றிய பல்வீர் சிங் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வீர் சிங் ஏடிஎஸ்பிக்கு விரைவில் சம்மன் அனுப்ப உள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் இன்று (அக்.30) தகவல் வெளியிட்டுள்ளது.

News October 30, 2024

கஞ்சா புகையிலை குறித்து புகார் அளிக்க எண் வெளியீடு

image

நெல்லை மாவட்ட காவல்துறையினர் நேற்று (அக்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட இந்த பொருட்களால் மனித உயிருக்கு தீங்கு ஏற்படுகிறது. இது குறித்து 10581 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!