India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தசரா திருவிழாவையொட்டி திருநெல்வேலி சாலை மார்க்கமாக வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வு நடைபெறும் நாட்களான இன்று(11.10.2024), நாளை(12.10.2024) மற்றும் 13.10.2024 ஆகிய 3 நாட்களில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நேற்று(அக்.,11) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(அக்.,12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை நேற்று(அக்.,11) கொண்டாடப்பட்டது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் பொங்கல் வழங்கப்பட்டது.
Telegram App-ல் வரும் Part time job, Online job, Work from Home போன்ற விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள். சிறிய வேலைகளுக்கு பணம் கொடுப்பதுபோல் நடித்து பெரிய டாஸ்க் உள்ளதாகவும், அதற்கு பெரிய தொகையை முதலீடு செய்யுமாறு கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். நீங்கள் பாதிக்கப்பட்டால் cybercrime.gov.in/ -ல் புகார் அளிக்கலாம் என நெல்லை மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது. SHARE IT.
Telegram App-ல் வரும் Part time job, Online job, Work from Home போன்ற விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள். சிறிய வேலைகளுக்கு பணம் கொடுப்பது போல் நடித்து பெரிய டாஸ்க் உள்ளதாகவும், அதற்கு பெரிய தொகையை முதலீடு செய்யுமாறு கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கலாம் என நெல்லை மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
வீட்டின் உரிமையாளரிடமிருந்து வீட்டை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான திறன் திருவிழா வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கவியரங்கம், நடனம், பேச்சு ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். விருப்பமுள்ளவர்கள் 11ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அரசு அருங்காட்சியக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை(ஆரஞ்ச் அலெர்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்லும் மக்கள் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.
நெல்லை மானூர் அருகே சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் பத்மகுமார். இவரது மூத்த சகோதரி அனிதா(40). தம்பியிடம் சொத்தில் அனிதா பங்கு கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி சுப்பையாபுரத்தில் உள்ள தம்பி வீட்டுக்கு வந்த அனிதா, யாரும் இல்லாத நேரத்தில் பீரோவில் இருந்த 25 பவுன் நகையை திருடியுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் நேற்று(அக்.,10) வழக்குப் பதிந்து அனிதாவை கைது செய்தனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணைந்து மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் 15 ஆம் தேதி தொடங்கி மாவட்டத்தின் 11 வட்டாரங்களிலும் நடத்துகிறது. முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் குழந்தைகள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் கொண்டு வரவேண்டும் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.