India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் 8 வது பொருநை புத்தகத் திருவிழா கடந்த ஜனவரி 31 தொடங்கி நேற்று வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 124 அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 11 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் ரூ.1.8 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கு 35 ரூபாய் மட்டுமே செலுத்தி வெறிநோய் ஊசி செலுத்திக்கொள்ளும் வசதியினை கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை செல்ல பிராணிகள் வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று (பிப்ரவரி 10) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகர டவுன் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோவிலில் இன்று (பிப்.10) கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கோவில் கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நடப்பு பிப்ரவரி மாதத்தில் தேசிய திறனறிவு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான முழு விபரங்கள் www.kalviseitiofficial.com என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இதில் பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் வேலி கற்கள் வைக்கப்பட்டது. இது குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் வேலி கற்கள் வைத்தது தெரிய வந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுனில் உள்ள வர்த்தக மையத்தில் 8வது பொருநை புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஜன.31 அன்று தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா நாளை (பிப்.10) நிறைவடைகிறது. இந்த பத்து நாட்களிலும் தினமும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி ஜாதி சான்றிதழ் வாங்கி வழக்கறிஞர் தொழில் செய்து வருவதாக வந்த புகாரையடுத்து பிரம்மா என்ற வழக்கறிஞர் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் நெல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா தலைமையில் இன்று (பிப்-09) வழக்கறிஞர் பிரம்மாவை கைது செய்ய போலீசார் பாளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.போலீசார் வருவதை தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பிரம்மா அங்கிருந்து தப்பி ஓடினார்.

போலி ஜாதி சான்றிதழ் வாங்கி வழக்கறிஞர் தொழில் செய்து வருவதாக வந்த புகாரையடுத்து பிரம்மா என்ற வழக்கறிஞர் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் நெல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா தலைமையில் இன்று (பிப்-09) வழக்கறிஞர் பிரம்மாவை கைது செய்ய போலீசார் பாளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.போலீசார் வருவதை தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பிரம்மா அங்கிருந்து தப்பி ஓடினார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஆகியவை பிப். 11ஆம் தேதி மூடப்படுகிறது .அதனை மீறி மதுபாட்டில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கூடங்குளம் அருகே செட்டிகுளம் பைபாஸ் சாலையில் உவரி கோவிலுக்கு சென்றுவிட்டு பைக்கில் வந்த மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் செல்வம் (60) அவரது மனைவி புஷ்பம் (58) ஆகியோர் மீது குமரி மாவட்டம் தெங்கம்புதூரை சேர்ந்த ஜெகதீஷ் (30) என்பவரின் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்வம் பலியானார்.அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கூடங்குளம் போலீசார் விசாரணை
Sorry, no posts matched your criteria.