Tirunelveli

News October 16, 2024

அவசர உதவி மைய எண்கள் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய உதவி மைய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் இன்று (அக்.16) அறிவித்துள்ளது. இந்த எண்களை பயன்படுத்தி பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

கண்ணபிரான் கைது – மாவட்ட காவல்துறை கடும் எச்சரிக்கை

image

தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவன தலைவர் கண்ணபிரான் இன்று (அக்.16) பல்வேறு ஆயுதங்கள் வைத்திருந்ததாக பாளையங்கோட்டை தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் எவ்வித சம்பந்தமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வரும் நிலையில், மாவட்ட காவல்துறை தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

News October 16, 2024

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும், கஞ்சா போதை பொருட்கள் உள்ளிட்டவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று மது போதையில் வாகனம் ஓட்டாதீர், சாலை விதிகளை மதிப்போம், விபத்தினை தடுப்போம் என புகைப்படத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்துள்ளனர்.

News October 16, 2024

ஒன்றிய அமைச்சரிடம் எம்பி வைத்த முக்கிய கோரிக்கை

image

ஒன்றிய அமைச்சர் மன்ஷுக் மாண்டவியாவை நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் புதுடெல்லியில் இன்று(அக்.16) சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் நெல்லை, தென்காசி மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதியில் உள்ள லட்சக்கணக்கான பீடி தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.800ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். நிச்சயம் ஆவன செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

News October 16, 2024

மாணவர்களின் திறன் விழாவிற்கு அழைப்பு

image

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வருகின்ற 19ஆம் தேதி தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாணவர்களின் திறன் விழா நடைபெற உள்ளது. இதில் கவியரங்கம், நடனம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாட்டினை தீத்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை நிறுவனர் நெல்லை அருள் செய்து வருகிறார். இதில் அனைவரும் கலந்துகொள்ள அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

News October 16, 2024

மாஞ்சோலை தோட்ட வழக்கு அக்.,23-க்கு தள்ளிவைப்பு

image

மாஞ்சோலையை சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, ராஜன் உள்ளிட்ட தொழிலாளர்கள் வீட்டுமனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஹைகோர்ட் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று(அக்.,15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்கள் மீதான இறுதி விசாரணைக்காக அக்.,23 ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

News October 16, 2024

வகுப்பறையை நாங்கள்தான் சுத்தம் செய்வோம்: சபாநாயகர்

image

நெல்லையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று சிறந்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போற்றி சபாநாயகர் அப்பாவு பேசுகையில், நாங்கள் படிக்கும்போது வகுப்பறையை சுத்தப்படுத்துதல், தண்ணீர் எடுத்தல் போன்ற பணிகளை குழு சுழற்சி அடிப்படையில் செய்வோம். மாணவர்கள் அன்பாக இருப்பதற்கு 100% பணியாற்றுகிறவர்கள் ஆசிரியர்கள். எனவே உள்ள சிறு சிறு விஷயங்களுக்கு ஆசிரியர்களை தண்டிக்கும் நிலையை மாற்றுங்கள் என்றார். SHARE IT.

News October 16, 2024

5797 கர்ப்பிணிகள் கண்காணிப்பு: நெல்லை கலெக்டர்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025 ஜனவரி 14-ஆம் தேதி வரை குழந்தை பிறக்கும் நாள் உள்ள 5797 கர்ப்பிணிகள் கனமழை எச்சரிக்கை வழங்கப்படும் நேர்வுகளில் முன்கூட்டி மருத்துவமனைகளில் சேர்ந்துகொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக குடும்பநல இணை இயக்குனர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

போதை பழக்கத்தை தடுக்க மூன்று கட்ட நடவடிக்கை – டிஐஜி மூர்த்தி

image

போதை பொருள்களால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை சரகத்தில் 256 கல்லூரிகள் உள்ளன. கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கத்தை தடுக்க மூன்று கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

திருநெல்வேல: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (அக்.15) இரவு நேர ரோந்து பணி அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி நாதன் தலைமையில் காவலர்களின் பெயர் மற்றும் அவர்களின் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேர உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!