India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குறுஞ்செய்தி மூலம் 4G சிம்மை 5G சிம்மாக மாற்ற வேண்டுமென்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் என்று உங்கள் செல்போனிற்கு வரும் குறுஞ்செய்தியின் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். லிங்கை கிளிக் செய்தால் உங்கள் மொபைலில் உள்ள தகவல்கள் திருடப்படும் மேலும் உங்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோக வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி நெல்லை மாவட்ட காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டிஎஸ்பி ஜெபராஜ் தலைமையில் நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் காவல் அதிகாரிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவசர தேவைக்கு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
மாஞ்சோலை தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வனப்பகுதியில் பழங்குடியினர் மட்டுமே குடியிருக்க உரிமை தரப்பட்டுள்ளது. சுய வேலைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே தொடர்ந்து வசிக்க அனுமதி தரப்பட்டது. மற்ற தொழில் செய்பவர்கள் தொழிலாளர்களாக கருதப்படுவர். வனத்தில் இருக்க உரிமையில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நெல்லையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையில் பிரபல தொழிலதிபர் வெங்கடேஷ் மற்றும் முன்னாள் எம்பி ஞான திரவியத்தின் இரண்டாவது மகன் தினகரன் உள்பட பல்வேறு தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை இன்று திடீரென நடத்தினர். இந்த சோதனையால் பரபரப்பு நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு பூ மொத்த விற்பனை சந்தையில் இன்று (நவ.6) மல்லிகை, பிச்சி விலை திடீரென உயர்ந்தது. நேற்று ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையான மல்லி பூ இன்று 2000 ரூபாயாக இரட்டிப்பாக உயர்ந்தது. இதுபோல் பிச்சி கிலோ 300 ரூபாயிலிருந்து 700 ரூபாயாக உயர்ந்தது. நாளை முகூர்த்த தினம் என்பதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நாளையும் விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.
திருநெல்வேலி மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசன நிலங்களுக்கு, பிசான பருவ சாகுபடிக்காக இன்று(நவ.,6) காலை கலெக்டர் கார்த்திகேயன் தண்ணீர் திறந்துவிட்டார் 2025 மார்ச் 31ஆம் தேதி முடிய,146 நாட்களுக்கு, திறந்துவிடப்படும் இந்த தண்ணீரால் ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடை., கிராமங்களை சேர்ந்த 2756 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
நெல்லை மாவட்ட அணைகளில் இன்றைய நிலவரப்படி, பாபநாசம் அணையின் உச்ச நீர்மட்டம் 143 அடி; நீர் இருப்பு 92.20 அடி; நீர் வரத்து 382.45 கன அடி; நீர் வெளியேற்றம் 1204.75கன அடி; சேர்வலாறு அணையின் உச்சநீர்மட்டம் 156 அடி; நீர் இருப்பு 97.08 அடி; மணிமுத்தாறு அணையின் உச்ச நீர்மட்டம் 118 அடி; நீர் இருப்பு 64.85 அடி; நீர் வரத்து 193.30 கன அடி; நீர் வெளியேற்றம் 30 கன அடி.
நெல்லை மாவட்டத்தில் இன்று(நவ.,6) நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம்: #பாளையங்கோட்டை சித்தா கல்லூரியில் முதலாண்டு மாணவிகள் அறிமுக நிகழ்ச்சி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. #நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. #நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி திருவிழா திருச்செந்தூரில் வருகின்ற 7ஆம் தேதி வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை(நவம்பர் 6) சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை சிறப்பு ரயில்(06099/06100) இயக்கப்பட உள்ளது. இதனை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள தென்னக ரயில்வே நேற்று(நவம்பர் 5) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் & கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை(நவ.7) மாலை 5.45 மணிக்குள் <
Sorry, no posts matched your criteria.