Tirunelveli

News October 17, 2024

தோட்டக்கலை பயிர்: நெல்லை கலெக்டர் வேண்டுகோள்

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று(அக்.,17) விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவமழையின்போது தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, சப்போட்டா போன்றவற்றை உரிய நடைமுறையில் பாதுகாக்க வேண்டும். எடையை குறைக்க கிளைகளை கவர்ச்சி செய்ய வேண்டும். செடிகள் காற்றில் பாதிக்காதபடி தாங்கு குச்சிகளை வைத்து கட்ட வேண்டும். காய்கறி பயிர்கள் அதிக நீர் தேங்கா வண்ணம் வடிகால் வசதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

நெல்லை மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தினமும் அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(அக்.,17) துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ் தலைமையில் காவலர்களின் பெயர் மற்றும் அவர்களின் தொடர்பு எண் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் உதவிக்கு இவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News October 17, 2024

மேலப்பாளையத்தில் தொடர் விபத்து! மக்கள் புகார்

image

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இன்று(அக்.,17) லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை சிகிச்சைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்‌. மேலும் இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம் சாட்டினர்‌.

News October 17, 2024

தொழில் பூங்கா: நெல்லை கலெக்டர் முக்கிய தகவல்

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று(அக்.,17) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் 50% or ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவோ அது அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். இது குறித்த கூட்டம் 21ஆம் தேதி பிற்பகல் 5:30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

வள்ளியூரில் முன்னாள் MP தலைமையில் கொண்டாட்டம்

image

அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு வள்ளியூர் பேருந்து நிலையத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லாசர், வள்ளியூர் பேரூர் கழக செயலாளர் பொன்னரசு உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

News October 17, 2024

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா தொடக்கம்

image

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாளை மாத பிறப்பு முன்னிட்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று(அக்.16) சுவாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ள சப்பரத்தில் உலா வந்த காந்திமதி அம்மனை பக்தர்கள் தரிசித்தனர்.

News October 17, 2024

நெல்லை: தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு 

image

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை கோவை உள்ளிட்ட நகரங்களில் வேலை பார்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவர். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக நெல்லை, தென்காசி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இதற்கான பரிந்துரையை தெற்கு ரயில்வே அனுப்பியுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 17, 2024

ரூ 45 கோடியில் தூண்டில் பாலம் அப்பாவு உறுதி

image

உவரி கூட்டப்பனை பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பா கூறுகையில், இந்த பகுதியில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மூலம் உங்கள் பகுதியில் தூண்டில் அமைப்பதற்கு ரூ 45 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதற்கான நிதி இன்னும் அரசிடம் இருந்து பெறப்படவில்லை. கடற்கரை அருகில் உள்ள ஆலயம் கூட பாதிப்படைந்துள்ளது என்றார்.

News October 17, 2024

நெல்லையப்பர் கோவிலில் இன்று அன்னதானம்

image

அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவை இன்று (அக்.15)  அதிமுகவினர் மிக சிறப்பாக கொண்டாட உள்ளனர். அதையொட்டி ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் அதிமுக சார்பில் மதியம் அன்னதான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

News October 17, 2024

நெல்லை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தினமும் பொதுமக்கள் பயனுக்காக இரவு நேர ரோந்து அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (அக்.16) இரவு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் காவலர்கள் பெயர்கள் அவர்களின் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!