India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

களக்காடு அருகே பத்மநேரியை சேர்ந்தவர் ஆறுமுகம் (57). ஓட்டல் தொழிலாளியான இவர் நேற்று முந்தினம் இரவு தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக மின்ஒயர் அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மாநகரில் போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 07 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 479 மதுபாட்டில்கள் (86.22 லிட்டர்) மற்றும் மதுவிற்ற பணம் ரூ.6650 மற்றும் மதுவிற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

சுத்தமல்லியை சேர்ந்த மூதாட்டி ஆண்டிச்சி என்பவரை கடந்த 8ம் தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து கட்டி போட்டு 25 சவரன் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்ததில் வேட்டையை சேர்ந்த மணிகண்டன் ஜீவா ஆகிய இருவரும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. சென்னையில் நகைகளை மாற்றிய போது நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பாப்பாக்குடி அருகே அடைச்சாணி பகுதியை சேர்ந்த சரவணன் (47) பைக் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு டயர் பஞ்சர் பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பனை தோட்டத்துக்கு மலம் கழிக்க சென்றபோது மர்ம நபரால் வெட்டி கொல்லப்பட்டார். பாப்பாக்குடி போலீஸ் விசாரணையில் உறவினர் பாலமுருகன்(30) குடும்ப தகராறில் கொலை செய்தது தெரியவந்ததால் போலீஸார் அவரை கைது செய்தனர்.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீசாரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

நெல்லை மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாத்தனும் (அ) வேறு எண் சேர்க்கனுமா?
1. இங்கு <
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5. அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்.
தகவல்களுக்கு : 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.நெல்லை – 9445000380
2.பாளை – 9445000381
3.நாங்குநேரி- 9445000387
4.ராதாபுரம்- 9445000388
5.அம்பை- 9445000386
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அடைச்சாணி பகுதியை சேர்ந்த சரவணன் (47) என்பவர் இன்று (ஜன 16) காலை வாய்க்கால் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.