India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய காவல்துறையினர், தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு தொலைதூர ரயில்களில் பயணிகளிடம் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். நிலையத்தில் இருந்து தினமும் புறப்பட்டு செல்லும் ரயில்களில் பட்டாசு எடுத்து செல்கிறார்களா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை செய்கின்றனர். இன்றும் இப்பணி தொடரும் என தெரிவித்தனர்.
சமூக வலைத்தளத்தில் தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனத் தலைவர் கண்ணபிரான் கைது தொடர்பாக சிலர் தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். யூடியூப்பில் ஒருவர் குறிப்பிட்ட நபருக்கும் கண்ணபிரானுக்கும் இடையே உள்ள பகையை குறிப்பிட்டுள்ளார்.இது உண்மைக்கு புறம்பான தவறான கருத்து ஆகும்.
நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு நேற்று முன்தினம்(அக்.,18) வண்ணார்பேட்டையில் ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு, GRT ஹோட்டல் அருகே சென்றபோது மேயர், துணை மேயர் கார்கள் அந்த காரை பின் தொடர்ந்தன. அப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பிரேக் பிடித்ததில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் மேயர், துணை மேயர் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தன.
நெல்லை மாவட்டத்தில் நேற்று(அக்.19 ) இரவு சில இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று(அக்.20) நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா நேற்று(அக்.19) இரவு விடுத்துள்ள வானிலை பதிவு தெரிவித்துள்ளார். எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களை நாளைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும்.
சென்னையில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி:- நெல்லை பாளையங்கோட்டை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை தாக்கியது குறித்த கேள்விக்கு, நெல்லை பாளையங்கோட்டை நீட் பயிற்சி மையத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா நேற்று(அக்.18) விடுத்துள்ள வானிலை பதிவில், வங்க கடல் பகுதிகளில் அக்டோபர் 22ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இதனிடையே நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
உலக மனநல தினத்தை முன்னிட்டு நெல்லை “ஆர்- சோயா” தொண்டு நிறுவன மனநல விழிப்புணர்வு குழுவினர் குமரி முதல் டெல்லி வரை பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். வழிநெடுக சாலையோரம் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். நேற்று கோவா பைபாஸ் சாலையில் ஒரு வாலிபரை மீட்ட இக்குழுவினர் நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலத்தை அடைந்ததாக தெரிவித்தனர்.
நெல்லையில் தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பால் தாக்கிய சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசார் கடந்த 13 மற்றும் 15ஆம் தேதி விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள நீட் பயிற்சி மைய உரிமையாளரை தேடி வருகிறோம். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
பாபநாசம் கல்லூரியில் மாணவி ஒருவரை முதுநிலை மாணவர் ஒருவர் யதார்த்தமாக பார்த்துள்ளார்.இதுகுறித்து ஒருவர் மாணவியின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார் .ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினர் நேற்று மாணவரை தாக்கியுள்ளனர் .இது குறித்த புகாரின் அடிப்படையில் மாணவரை தாக்கியதாக மாணவியின் உறவினர்கள் மாணவர்கள் உட்பட 8 பேர் மாணவியின் உறவினர் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
நெல்லை மாவட்ட காவல்துறை நேற்று (அக்.18) வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்த போர்டல் (CEIR- Central Equipment Identity Register) மூலமாக கொடுக்கப்படும் புகாரால் தொலைந்து போன அல்லது தவறவிட்ட செல்போனை உடனடியாக மீட்க பயன்படுகிறது. ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.