Tirunelveli

News November 9, 2024

போலி சான்றிதழ் வழங்கிய 2 பேர் சிறையில் அடைப்பு

image

நெல்லை, நரசிங்கநல்லூரை சேர்ந்த சோலை ராஜன் மற்றும் சுப்பையா ஆகிய 2 பேர் VAO-விடம் போலியாக சான்றிதழ் பெற்று கொலை வழக்கில் கோவில்பட்டி சிறையில் உள்ள ஒரு நபருக்கு ஜாமீன் பெறுவதற்காக கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். சான்றிதழ் குறித்து சந்தேகமடைந்த நீதிபதி இது குறித்து காவல்துறைக்கு விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் போலி சான்றிதழ் என தெரியவரவே 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

News November 8, 2024

நெல்லை இரவு ரோந்து பணி காவலர்கள் பட்டியல்

image

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க தினமும் காவல்துறையினர் இரவு வந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று(நவ.8) உதவி ஆணையர் சரவணன் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அதற்கான அதிகாரிகள் அடங்கிய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 8, 2024

நெல்லையில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்

image

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் 16,17, 23, 24 ஆகிய தேதிகளில் 1.1.2025 – ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் (31.06.2006 அன்று வரை பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளவும், வாக்காளர் அடையாள அட்டை இருப்பவர்கள் ஏதேனும் திருத்தம் செய்து கொள்ளவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளவும் , கொள்ளவும் , கூறியுள்ளார்.

News November 8, 2024

நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

image

தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழையின் எதிரொலியாக கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. அந்த வகையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை காலை 8.30 கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மக்கள் இந்த சூழலிற்கேற்ப முன் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. *பகிரவும்* SHARE*

News November 8, 2024

மின் பகிர்மான வட்டத்தினர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

image

நெல்லை மின் பகிர்மான வட்டத்தினர் இன்று(நவ.8) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் மின் பாதுகாப்பு அம்சங்களை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இடி,மின்னல், காற்றின் போது மின் கம்பங்கள் ட்ரான்ஸ்பார்மர் அருகே செல்லக் கூடாது. அவசர மின் உதவிக்கு 94987 94987 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

News November 8, 2024

நடிகர் நெப்போலியன் மகனை மணம் முடித்த நெல்லை பெண்!

image

தமிழ் திரைப்பட நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்-க்கும் நெல்லை மாவட்டம் மூலகரைப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டது. தொடர்ந்து இவர்களது திருமணம் ஜப்பான் நாட்டில் நேற்று(நவ.,7) மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

News November 8, 2024

முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க நவ.,20 கடைசி நாள்

image

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி ஃபார்ம், டி ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவ.,20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நெல்லை மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று (நவ.,8) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோல் நாளை(நவ.,9) நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்று சுழற்சி மேற்கு திசையில் நகர்வதால் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் வெளியில் செல்வோர் இதற்கு ஏற்ப தங்கள் பயணத்தை வகுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 8, 2024

கல்வி உதவித்தொகை பெற டிச.,31 கடைசி நாள்: உதவி ஆணையர்

image

நெல்லை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப் பிரசன்னா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

News November 8, 2024

பல் பிடுங்கிய விவகாரம்: 3ஆவது முறையாக ஆஜராகாத பல்வீர் சிங்

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏடிஎஸ்பி-யாக பணிபுரிந்த பல்வீர் சிங், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது குறித்த வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றும்(நவ.,7) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பல்வீர் சிங் ஆஜராகவில்லை. தொடர்ந்து 3ஆவது முறையாக அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

error: Content is protected !!