India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி – ஷாலிமர், தாம்பரம் – சந்திரகாசி என இரு வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரயில்கள் விரைவில் இயங்க உள்ளன. இதில் பொதுப் பெட்டிகளும் இருக்கும். திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் ரயிலால், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் ஆகிய நகரங்களுக்கும் இந்த ரயில் சேவை கிடைக்கப் பெறும். சென்னையில் இருந்து வடமாநிலங்கள் பயணிப்போருக்கு சந்திரகாசி ரயில் பயனுள்ளதாக இருக்கும்.
நெல்லையில் இன்று (அக்.22) 300 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை போலீசார் பிடித்துள்ளனர். பிடிப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அரிசி கடத்துவதற்கு காரணமாக இருந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேசன் அரிசி கடத்தல் குறித்து ஆங்காங்கே தீவிர சோதனை நடைபெற்று வருகின்றது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த தெற்கு வீரவநல்லூரில் தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை கேரள மாநிலம் திருத்துறை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் இந்த ஆலையில் இன்று (அக்.22) காலை 9 மணி முதல் இணை இயக்குனர் ஷாலினி தலைமையிலான எட்டு பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியில் தமிழகத்தில் உள்ள – நெல்லை மாவட்ட வீரருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. பாண்டிச்சேரி ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான சீனியர் பூம் சேதேக்வாண்டோ போட்டியில் விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியை சேர்ந்த வீரர் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை புரிந்தார். தேசிய போட்டியில் 36 மாநிலங்களை சேர்ந்த 1608 வீரர்கள் கலந்துகொண்டனர்.
எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் சுபின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் 9 ஆண்டுகளாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களை காலி பணியிடங்களில் பணியமர்த்துவதை தவிர்த்து செவிலியர் பணிக்கான கல்வி தகுதியில்லாத நபர்களை கொண்டு நிரப்புவது அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது பணியில் உள்ள தொகுப்பூதிய செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே பல்லிக்கோட்டையை சேர்ந்த அதிமுக முன்னாள் கிளை செயலாளரான செல்லத்துரை(47), தற்போது ஊர் நாட்டாமையாக உள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சுபாஷ், சின்ன ராஜா, பாலா ஆகிய 3 பேரை நேற்று முதல் தேடி வருகின்றனர்.
மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவில் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள உட்கோட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல், அரசு அனுமதிக்காமல் மது விற்பனை செய்தல், போதைப்பொருள் நடமாட்டம் பற்றிய தகவல்களை 1081 மற்றும் 9498101765 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் ரகசியம் பாதுகாக்கப்படும் என மாவட்ட காவல்துறை நேற்று (அக்.21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நெல்லை மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு மோசடிகள் குறித்தும், இணையதளம் மோசடிகள் குறித்தும், விபத்துக்கள் குறித்தும், குற்ற செயல்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று (அக்.21) பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்போம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புக்கு 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என புகைப்படத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் உதவிக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி இன்று (அக்.21) இரவு ரோந்து அதிகாரிகள் விபரம் அடங்கிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அதில் காவல் நிலையங்கள் மற்றும் ரோந்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் அவர்களின் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களை பொதுமக்கள் உதவிக்கு பயன்படுத்திக்கொள்ள மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நெல்லை மாநகர காவல்துறை சார்பில் தினமும் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு அட்டவணை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (அக்.21) மாநகர காவல்துறைக்கு உட்பட்ட காவல் நிலையங்களின் காவலர்கள் பெயர்கள், அவர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளனர். இவர்களை இரவு நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.