Tirunelveli

News October 26, 2024

நெல்லை கலெக்டருக்கு குவியும் பாராட்டு

image

நெல்லையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை நிலங்கள் இருக்கும் நிலையில், சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் விதமாக அலையாத்தி காடுகளை அமைக்கும் முயற்சியில் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடப்பட்டன. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆக்சிஜனை வழங்கும் மாங்குரோவ் கன்றுகளை நட்டு காலநிலை மாற்றத்தை சமநிலைப்படுத்தும் நெல்லை கலெக்டரின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

News October 26, 2024

சிறப்பு வகுப்புகள் வேண்டாம்: நெல்லை கலெக்டர்

image

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று(அக்.,25) பகல் முழுவதும் அவ்வபோது மிதமான மழை பெய்தது. குறிப்பாக நாங்குநேரி, ராதாபுரம் பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து இன்றும்(அக்.,26) நெல்லையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பள்ளிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் எனவும் கலெக்டர் கார்த்திகேயன் தடை விதித்துள்ளார்.

News October 26, 2024

நெல்லையில் கலைத் திருவிழா போட்டிகள் 29-ல் தொடக்கம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழக அரசு பள்ளிக் கல்வி துறையின் சார்பாக நடைபெறக்கூடிய வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் வரும் அக்.29 மற்றும் நவ.5 ஆகிய தினங்களில் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.

News October 26, 2024

கூடங்குளம் குறித்து சபாநாயகர் தகவல்

image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு உலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்த கூடங்குளம் அணுக்கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாத நிலை உள்ளது. ராஜஸ்தான் பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அணுக்கழிவுகளை கொண்டு செல்லலாம் என தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு நெல்லையில் நேற்று (அக்.25) தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

அழகநேரியில் முகாமை துவக்கி வைக்கும் அப்பாவு

image

நெல்லை மாவட்டம் அழகநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (அக்.26) காலை 9 மணி அளவில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைக்க உள்ளார். எம்பி ராபர்ட் ப்ரூஸ் முன்னிலை வகிக்கிறார். ஏற்பாடுகளை வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் செய்து வருகிறார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

News October 26, 2024

46 பதக்கங்களுடன் 7ஆம் இடத்தை பிடித்த நெல்லை

image

தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் நடைபெற்ற போட்டியில் 14 தங்கம், 15 வெள்ளி, 17 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 46 பதக்கங்களுடன் மாநில அளவில் ஏழாவது இடத்தினை பிடித்துள்ளது. ஏழாவது இடம் பிடித்த திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News October 25, 2024

கன மழை எதிரொலி – பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (அக்.26) கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News October 25, 2024

ஹபீபி படத்திற்கு நெல்லை முபாரக் வாழ்த்து

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (அக்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி வழங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்று வாழ்வியலை சொல்லும் விதமாக தமிழர் மரபையும், சிறுபான்மை முஸ்லிம்களின் வாழ்வியல் முறைகளையும் ஒருங்கிணைத்து படைக்கப்பட்டுள்ள ஹபீபி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

News October 25, 2024

நெல்லை மாவட்டத்தில் நாளை கனமழை

image

தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை (அக்.26) கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 25, 2024

நெல்லை: இரவு ரோந்து காவலர்கள் நியமனம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமாரை இன்று (அக்.25) இரவு ரோந்து பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் ரோந்து காவலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!