Tirunelveli

News October 29, 2024

வழிப்பறியில் ஈடுபட்ட 2 மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

image

பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த 4 பேரை விசாரணை செய்தனர். அதில் டீக்கடை தொழிலாளியிடம் 4 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 4 பேரை போலீசார் நேற்று(அக்.28) கைது செய்தனர், அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News October 29, 2024

வாழை படத்தில் நடித்த நடிகர்களை பாராட்டிய எம்எல்ஏ

image

திரைப்பட வர்த்தக குடும்பம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணை நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வாழை படத்தில் நடித்த நடிகர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா மேலப்பாளையத்தில் நேற்று (அக்.28) நடைபெற்றது. திரைப்பட வர்த்தக பிரிவு கலைக் குடும்ப நல சங்க மாநில பொருளாளர் ரகுமான் ஷா தலைமை தாங்கினார். பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி பரிசுகள் வழங்கினார்.

News October 29, 2024

தேநீர் அருந்தி விட்டு குறைகளை கேட்டறிந்த நெல்லை MP

image

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (அக்.28) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்லும் வழியில் நாங்குநேரி ஏர்வாடிக்கு வருகை தந்த திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் அங்குள்ள சாலையோர டீ கடையில் மக்களோடு மக்களாக நின்று தேநீர் அருந்தி விட்டு அங்குள்ள மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

News October 29, 2024

தீபாவளியையொட்டி நெல்லையில் 54 இடங்களில் வாகன சோதனை

image

நெல்லையில் தீபாவளியை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் என சுமார் 1400 பேர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 34 இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் 43 நான்கு சக்கர வாகனங்கள் மூலமாகவும் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். 54 இடங்களில் வாகன தணிக்கை நடத்தப்படும் என எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

News October 29, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 28, 2024

நெல்லை மாவட்டத்தில் டிஎஸ்பி தலைமையில் இரவு ரோந்து பணி

image

நெல்லை புறநகர் மாவட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஜார் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்கள் கூட்டம் காணப்படுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் இரவு ரோந்து அதிகாரிகள் காவலர்கள் பெயர் விபரங்கள் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

News October 28, 2024

நெல்லை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களின் உதவிக்காக இன்று (அக்.28) இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்டவைகள் அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர உதவிக்கு அட்டவணையில் உள்ள காவலர்களை மாநகர பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News October 28, 2024

நெல்லை: வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

image

நாளை (அக்.29) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (அக்.28) தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

News October 28, 2024

TN ALERT App – 1 லட்சம் பேர் டவுன்லோட்

image

மழை வெள்ளம், புயல் பாதிப்பு போன்ற இடர்பாடுகளின் விபரங்களை தெரிந்து கொள்ளவும், வானிலை நிலவரங்களை அறிந்து கொள்வதற்கும் TN ALERT என்ற App அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். அனைவரும் டவுன்லோட் செய்து பயனடையுமாறு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2024

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை – காவல்துறை அறிவுரை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று(அக்.28) வெளியிட்ட தீபாவளி திருநாள் முன்னெச்சரிக்கை அறிவுரைகள்; அதிக ஒலி எழுப்பும் மற்றும் ஆபத்தான பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும். மின் வயர் இல்லாத திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பயன்படுத்திய பட்டாசுகளை குப்பை தொட்டியில் போட்டு அப்புறப்படுத்தவும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

error: Content is protected !!