Tirunelveli

News November 5, 2024

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அப்பாவு அழைப்பு

image

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நாளை(நவ.06) நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள சபாநாயகர் அப்பாவு பயணம் மேற்கொண்டுள்ளார். செல்லும் வழியில் கோலாலம்பூர் மலேசிய தமிழ் சங்கத்தில் நேற்று அவர் பேசியதாவது, நீங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குங்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தாருங்கள். தமிழ்நாட்டில் ஒற்றை சாளர அனுமதி மூலம் நீங்கள் உடனடியாக தொழில் தொடங்கலாம் என்றார்.

News November 5, 2024

சிறுவனை பீர் பாட்டிலால் தாக்கிய விவகாரம்; 3 பேர் அதிரடி கைது

image

நெல்லை மேலப்பாட்டம் கிராமத்தில் வேகமாக காரில் சென்றவர்களை கேள்வி கேட்ட சிறுவனை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் முத்துக்குமார், லட்சுமணன், தங்க இசக்கி ஆகிய 3 பேரை பாளையங்கோட்டை தாலுகா போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார் நீதி சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News November 5, 2024

நெல்லை மின் குறைதீர்க்க கூட்டத் தேதிகள் அறிவிப்பு

image

நவம்பர் மாதம் மின்வாரிய குறைதீர் கூட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி 8ஆம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 12ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 15ஆம் தேதி நெல்லை கிராமப்புற கோட்டை அலுவலகத்திலும், 22ஆம் தேதி நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர்க்க கூட்டங்கள் பகல் 11 மணிக்கு நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

மீண்டும் சாதி வெறியில் மாணவனை வெட்டிய கும்பல்

image

மேலப்பாட்டம் கிராமத்தில் தன் மீது மோதும் நோக்கில் வேகமாக காரில் சென்றவர்களை தட்டி கேட்ட சிறுவனை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. படுகாயம் அடைந்த சிறுவன் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இது குறித்த தகவல் அறிந்த பாளை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை வெட்டிய கும்பலை தேடி வருகின்றனர்.

News November 5, 2024

மாஞ்சோலை மக்களை சந்திக்கும் சீமான்

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அம்பை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வரும் 14-ஆம் தேதி மாஞ்சோலை மக்களை சீமான் சந்தித்து குறைகளை கேட்க உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

கத்தோலிக்க திருச்சபைக்கு புதிய பேராயர் நியமனம்

image

கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர்மறை மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளாக பதவியில் இருந்த தற்போதைய பேராயர் அந்தோணி பாப்புசாமி ஓய்வு பெற்றார். இதையடுத்து தற்போது கூடுதல் பொறுப்பான பரிபாலகர் என்ற பதவிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி சவரிமுத்துவை ரோம் நகரில் உள்ள போப்பாண்டவர் பிரான்சிஸ் நியமித்துள்ளார். புதிய ஆயருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News November 5, 2024

திருநெல்வேலி மாவட்ட இரவு ரோந்து போலீசார் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் பொன்ரகு தலைமையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று இரவு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் காவல்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News November 5, 2024

100 கைப்பேசிகள் பறிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் 100 கைப்பேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின்படி அவற்றை போலீசார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து எஸ்பி சிலம்பரசன் கைப்பேசிகளை உரிய நபர்களிடம் நேரில் ஒப்படைத்தார். இவற்றின் மதிப்பு ரூபாய் 18 லட்சத்து 58 ஆயிரத்து 649 ஆகும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2024

நெல்லை எம் பி -யின் முக்கிய நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நாளை (நவம்பர் 5ஆம் தேதி) பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நடைபெறும் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு டக்கரம்மாள்புரத்தில் பல்நோக்கு மிஷன் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

News November 5, 2024

நெல்லையில் 17 வயது சிறுவனுக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை, மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவனை இன்று திருமலை கொழுந்துபுரத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. இதில், சிறுவன் படுகாயம் அடைந்தார். பீர் பாட்டிலாலும் தாக்கியதில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!