India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை வழியாக குருவாயூர் – சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் 28ஆம் தேதி பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி அன்றைய தினம் இந்த ரயில் சென்னையில் இருந்து 28ஆம் தேதி புறப்பட்டு நெல்லை வழியாக நாகர்கோவில் டவுன் வரை மட்டுமே செல்லும். அங்கிருந்து குருவாயூர் வரை ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் 29ஆம் தேதி காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் டவுனில் இருந்து நெல்லைக்கு புறப்படும்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதாக இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இரண்டாவது தளத்தில் உள்ள கூட்டங்கில் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் என்றும், ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில், உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பட்டியலை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி ஊரகப்பகுதி, நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய உட்கோட்டங்களில், ரோந்து பணிகள் மேறிகொள்ளப்படுகின்றன. இந்த பணிகளில் தாழையூத்து, களக்காடு, வள்ளியூர், வீரவல்லூர் காவல் ஆய்வாளர்களும், கல்லிடைக்குறிச்சி உதவி காவல் ஆய்வாளர்களும் ஈடுபடுகின்றனர்.

மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் கவுது இப்ராகிம் (வயது 59). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதித்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் இறந்தார். பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லையில் தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை நீர் கலப்பது, விவசாய உரங்கள், பூச்சிக்கொல்லிகள் என பல்வேறு காரணங்களால் தாமிரபரணி ஆறு மாசுபடுகிறது. ஆய்வில் ஹெவி மெட்டல்ஸ் என்று அழைக்கப்படும் உலோகங்கள் ஆர்சனியம், நிக்கல், குரோமியம், காட்மியம், நைட்ரேட்ஸ் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடலில் பல்வேறு பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட இது காரணமாக அமைகிறது என மருத்துவர் புகழேந்தி தெரிவித்துள்ளார். SHARE IT

நெல்லை எம்.பியாக கடந்த முறை ஞானதிரவியம் இருந்தபோது மும்பை குர்லாவில் இருந்து புறப்படும் எல்.டி.டி- மதுரை ( வ.எண்.22101) வாராந்திர ரயிலை நெல்லை வழியாக திருச்செந்தூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி இருந்தார். ஆனால் அந்த கோரிக்கையை தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே அந்த ரயிலை திருச்செந்தூர் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக விட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்களை களையும் விதமாக விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.

தமிழகத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நெல்லையில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முனஞ்சிபட்டியை சேர்ந்தவர் மூக்காண்டி மகன் சுந்தர். ஆடுகள் மேய்க்கும் தொழிலாளியான இவர் 100 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று குட்டி ஆடுகளை கிடையில் அடைத்து சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது கிடையில் இருந்த 18 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். விசாரணையில் நாய்கள் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவை சேர்ந்த பால இசக்கி, சேரன்மகாதேவியை சேர்ந்த சுப்பிரமணியன், செல்வகுமார் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி, அடிதடி, அச்சுறுத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சிலம்பரசன் பரிந்துரை நிலையில் கலெக்டர் சுகுமார் உத்தரவின் படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பேரையும் நேற்று கைது செய்து பாளை மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.