India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் வி.கே. புரத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் சினிமா திரையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் பள்ளி கல்விதுறை விசாரணை நடத்துகின்றன. நடிகர் விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தை மாணவர்களிடம் ரூ.25 கட்டணம் பெற்று ஒளிபரப்பியது என இந்துமுன்னணி குற்றச்சாட்டியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில் நடைபெற்ற 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் அங்குள்ள முக்கிய நகரங்களில் தமிழர்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்களை சந்தித்து வந்தவர், நேற்று அவர் குயின்ஸ்லாந்து மாகாணம் கேய்ரின்ஸ் பிராந்திய கவுன்சில் மேயர் ஆமி ஈடனை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையானார்.
தேமுதிக திருநெல்வேலி புறநகர் மாவட்டம் மீனவர் அணி நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம் பரிந்துரையின்பேரில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று(நவ.,11) நியமனம் செய்துள்ளார். மாவட்ட செயலாளராக கவின், துணை செயலாளர்களாக ஜெய், அந்தோணி, பிச்சை, ஜேசுராஜ் ஆகியோருக்கு நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கிடவும் பிரேமலதா கேட்டுக்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் பெண் கலெக்டராக சிறப்பாக பணியாற்றி மக்களின் ஆதரவு பெற்றவர் ஷில்பா பிரபாகர் சதீஷ். இவர் தமிழக அரசின் சுற்றுலாத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவு நேற்று தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய துறை பொறுப்பேற்க இருக்கும் அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சுற்றுலாத்துறை அமைச்சரும், சேலம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான சேலம் ராஜேந்திரன் நாளை(நவ.,13) டவுன் நயினார் குளம், மிதவை ஓட்டல் பணி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஆய்வு செய்வதற்காக நெல்லை வருகை தருகிறார். இதை தொடர்ந்து இன்று இரவு 8 மணியளவில் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகை வரும் அமைச்சருக்கு மத்திய மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(நவ.,12), # காலை 10 மணிக்கு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலையருகே மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. # காலை 10:30 மணிக்குதிருநெல்வேலி மாநகராட்சி பிரதான அலுவலக மையக் கட்டடத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி புறநகர் மாவட்ட பகுதிகளில் இரவில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் இரவு ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு சிறப்பு அதிகாரியாக அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் இன்று இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
அதிமுகவில் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொள்ள மூத்த நிர்வாகிகளை கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி அருணாச்சலம் ஆகிய இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் முன்னேற்றம் குறிக்கும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
நெல்லை மாவட்ட ரயில் பயணிகள் சங்க கமிட்டி கூட்டம் ஏர்வாடியில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் கலீல் ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் தினேஷ் முன்னிலை வகித்தார்.பொருளாளர் முத்துவாப்பா வரவேற்ரையாற்றினார்.இந்த கூட்டத்தில் தென் மாவட்ட மக்கள் நலன் கருதி கோவை நெல்லை இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்குவது,சென்னை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளை அதிகரிப்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவி சுற்றுலாப் பயணிகளின் முக்கிய மையமாக உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் அதிக அளவில் மக்கள் வந்து குளிக்கின்றனர். இதனிடையே கடந்த 10 நாட்களாக அருவியில் நீர்வரத்து மிக அதிகமாக இருந்தது. இதன் காரணமாக இந்த அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். கடந்த 2 நாளாக மழை பெய்யாத நிலையில் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.