India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

மாவடியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மாரிமுத்து. இவர் நேற்று பேட்டை கிருஷ்ணபேரி அருகே லாரியை ஓட்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி அவ்வழியாக வந்த பைக் மீது மோதியது. இதில் கண்டியபெரியை சேர்ந்த மூதாட்டி செல்லம்மா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து சந்திப்பு போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும் இன்று (மார்ச்.30) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர்கள் நிக்சன் சரவணன் ஆகியோர் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை சன்னியாசி கிராமத்தில் கல்யாண சீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வெங்கடாஜலபதி திருப்பதியில் இருப்பதைப் போலவே காட்சியளிக்கிறார். வலது மார்பில் ஸ்ரீதேவியையும், இடது மார்பில் பூதேவியையும் தாங்கியபடி வீற்றிருக்கிறார். இந்த வெங்கடாஜலபதியை வேண்டினால் படிப்பு தடை விலகும், திருமண தடை நீங்கும், நல்ல வேலை கிடைக்கும் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *SHARE IT*

நெல்லை அருகே மருத்துவக்கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் குப்பைகளை கையாளும் தனியார் நிறுவனத்தினர் திறந்தவெளியில் தீயிட்டு எரித்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிஎன்எஸ் 329, 271, 272 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 12(1) உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கடந்த 18-ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளார். அவரது 2 மாத செல்போன் பதிவுகளை நேற்று போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் போலீஸ் அதிகாரி அடிக்கடி பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட கழக மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி இன்று (மார்ச்.29) வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஏப்ரல் மாத மின் நுகர்வோர் குறைதீர்க்க கூட்டம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல்1ஆம் தேதி, வள்ளியூர் மின்கோட்டத்தில் ஏப்ரல். 4ம் தேதி நடைபெற உள்ளது. மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

திருநெல்வேலி மாநகர எல்லை பகுதியில் இன்று (மார்ச்.29) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இரவு நேர காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.

நெல்லை எஸ்.பி சிலம்பரசன் இன்று (மார்ச்.29) வெளியிட்ட செய்தி குறிப்பில், இன்ஸ்டாகிராமில் பண மோசடி நடைபெறுகிறது.எனவே இன்ஸ்டாகிராமில் அறிமுகமில்லாத நபர்களிடம் ஆன்லைனில் மொபைல் துணி போன்றவற்றை ஆர்டர் செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.இது போன்ற மோசடி நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் www.cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் தெரிவிக்கவும் என கூறியுள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டப்படிப்புக்கான தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இன்று (மார்ச்.29) பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 1ம் தேதி விண்ணப்பம் திறக்கப்படும்.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.