India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாம் தமிழர் கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையில் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு நிர்வாகிகளோடு கலந்துரையாடினார். அப்போது நிர்வாகிகளுக்கும் சீமானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிர்வாகிகளை கடுமையான வார்த்தைகளால் சீமான் பேசியதால் 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது போல பல்வேறு பகுதியில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதன் காரணமாக மணிமுத்தாறு அணையில் 28 மில்லி மீட்டர், பாபநாசத்தில் 7 மில்லி மீட்டர், சேர்வலாறு அணை பகுதியில் 21 மில்லி மீட்டர், கொடுமுடியாறு அணையில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று(நவ.14) மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#இன்று(நவ.,14) காலை 9 மணிக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். #இன்று காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மழைக்கால காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்திப்பு நந்தூரி ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்.
மேலப்பாட்டம் விலக்கு பகுதியில் அக்.,16 ஆம் தேதி ஆயுதங்கள் இருந்ததாக கண்ணபிரான் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கடலூர் மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட கண்ணபிரான் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இம்மாதம் நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க கடந்த 2ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் வழியாக, ஆஸ்திரேலியா நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தமிழக சபாநாயகர் மு.அப்பாவு சென்றார். இந்நிலையில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, இம்மாதம் 18ஆம் தேதி அப்பாவு தாயகம் திரும்புவதாக நேற்று(நவ.,13) தெரிவிக்கப்பட்டுள்ளது.
நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று(நவ.,14) நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாளை., தனியார் மண்டபத்தில் நடைபெறும் கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். கட்சி உள் கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்வது, புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசிப்பதாக தகவல். தொடர்ந்து, மாலை மாஞ்சோலை மக்களை சந்திக்கிறார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி இரவு நேர பொதுமக்களின் உதவிக்காக ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் விபரம் அடங்கிய அட்டவணை தினம்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (நவம்பர் 13) காவலர்களின் பெயர், அவர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அட்டவணை வெளியிட்டு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.
நெல்லை மகாராஜா நகரில் வசித்து வந்த எழுத்தாளரும் தமிழ் பண்பாட்டு ஆய்வாளருமான ராஜ் கௌதமன் இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு எழுத்தாளர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜ் கௌதமன் உடலுக்கு திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது நெல்லை மகாராஜா நகரில் உள்ள இல்லத்தில் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து டாக்டர்கள் கூட்டமைப்பினர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நாளை காலை 9 மணிக்கு அவசர அறுவை சிகிச்சை தவிர அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மருத்துவ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாநகர காவல் துறையினர் பொதுமக்களுக்கு பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும், இணைய வழி மோசடிகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(நவ.13) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து புகார் அளிக்க 1930 என்ற எண்ணை 24 மணி நேரமும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.