India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாளை 28.10.2025 பாளை, சமாதானபுரம், வள்ளியூர், மேலக்கல்லூர், திருவேங்கடம், கலிங்கப்பட்டி, முத்தலான்பட்டி, மலையான்குளம், கங்கைகொண்டான், மானூர், ரஸ்தா, வன்னிக்கோனந்தல், மூலக்கரைப்படட்டி, மூன்றடைப்பு, கரந்தநேரி, பரப்பாடி, ஆகிய உப மின் நிலையங்களில் மேற்கொள்ளவிருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நிர்வாகம் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். *ஷேர் பண்ணுங்க

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக்.27) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் உள்ள 55 வார்டுகளிலும் வார்டு சிறப்பு கூட்டங்கள் நாளை (28-10-25) செவ்வாய் கிழமையன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் தலைமையில் ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர் மனுநாள் முகாம் நாளை ஒரு நாள் மட்டும் நடைபெறாது என மாநகராட்சி இன்று அறிவித்துள்ளது.

நெல்லை மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

கந்த சஷ்டி திருவிழா முன்னிட்டு இன்று மாலை முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் விழா நடைபெற இருக்கிறது. எனவே முருக பக்தர்கள் உற்சாகமுடன் முருகரை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கந்த சஷ்டியை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சமையல் கலைஞர் செல்வகுமார் தர்பூசணி பழத்தில் முருகரின் உருவத்தை வரைந்துள்ளார்.

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக பஸ்களில் செல்லும் பக்தர்களுக்கு உரிய பஸ்கள் திருச்செந்தூர்- நெல்லை சாலையில் உள்ள சபி டிரேடர்ஸ் எதிர்புறம் உள்ள தற்காலிக பஸ் நிலைய இடத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து இலவச சர்குலர் பஸ்கள் மூலம் நகருக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன சிறப்பு அனுமதி சீட்டு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.SHARE!

நெல்லை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு நில உடமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வேளாண்மை அடுக்ககம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தனி குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. பிஎம் கிஷான் திட்டத்தில் பயன் பெற்று வரும் அனைத்து விவசாயிகளும் தங்களது அடுத்த அடுத்த தவணைகளை பெற நில உடமை ஆவணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வலைதளத்தில் இதுவரை பதிவு செய்யாத 6868 விவசாயிகள் அருகில் உள்ள இ- சேவை மையத்தை அணுகலாம்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் திருட்டு வழக்கில் கைதான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஜாபர் சாதிக் (20), நெல்லை அருகன்குளத்தை சேர்ந்த கந்தசாமி என்ற கார்த்திக் (21) ஆகியோரை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் தற்போது ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளில் இன்று சுவாமி ஆறுமுகர் மற்றும் வள்ளி தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.