Tirunelveli

News November 19, 2024

காங்கிரஸ் தலைவரின் நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ நாளை இரவு 8 மணிக்கு நெல்லைக்கு வருகிறார். 20ஆம் தேதி காலை 9 மணிக்கு அரசு சுற்றுலா மாளிகையில் பொது கணக்கு குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். 9:30 மணிக்கு வளர்ச்சி திட்டங்களை பார்வையிடுகிறார். பிற்பகல் 2 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். மாலை 6:00 மணிக்கு கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

News November 19, 2024

நெல்லையில் முன்னெச்சரிக்கையாக 12 பேர் கைது!

image

நெல்லை மாவட்டம் கருங்குளம் பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தில் சாதிய மோதல் பதட்டத்தை தணிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மோதலை உருவாக்கும் விதமாக செயல்படக்கூடிய 30க்கும் மேற்பட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முக்கிய பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

News November 19, 2024

நெல்லை வருகிறார் தேமுதிக பொதுச்செயலாளர்!

image

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில், அரசியல் ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், தேமுதிக கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், கட்சியின் கூடுதல் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்த சுற்றுப்பயணத்தின்போது விவாதிக்க உள்ளதாக தகவல்..

News November 19, 2024

நிதிக்குழுவின் தலைவரை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ.

image

16வது நிதிக்குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் பணகாரியா நேற்று சென்னை வந்துள்ளார். அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நெல்லை மாவட்டம் ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் நிதி பகிர்வு குறித்த ஆலோசனைகள், கருத்துக்கள் அடங்கிய மனுவை நேரில் சந்தித்து அளித்தனர்.

News November 19, 2024

இரவு நேர ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் டிஎஸ்பி ரகு தலைமையில் திருநெல்வேலி ஊரகம், நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய உட்கோட்டங்களில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

News November 18, 2024

நெல்லை மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு

image

நெல்லை மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி – அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி – தென்காசி, சங்கரன்கோவில், மதுரை பழனி , வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் இந்த வாராந்திர இரயில் சேவை பிப்ரவரி 03/2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் பயணிகள் கோரிக்கை ஏற்று நீட்டிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2024

துணை முதலமைச்சரை சந்தித்த சபாநாயகர் மகன்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மகனுமான அலெக்ஸ் அப்பாவு மரியாதை நிமித்தமாக சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து கட்சி பணிகளை திறம்பட செய்யவும் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

News November 18, 2024

நெல்லை விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் தீர்ப்பதற்கு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

நெல்லை விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் திட்டம் வரும் 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அதில் அனைத்து துறை அதிகாரிகள் விவசாயிகள் கோரிக்கைகள் மீது எடுத்த நடவடிக்கைகளை குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

News November 18, 2024

விஜய் தர்மபுரியில் போட்டியா? மாஜி மத்திய அமைச்சர் பேட்டி

image

நெல்லையில் இன்று(நவ.18) முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், அரசியல் கட்சி என்று வந்துவிட்டால் அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தான் ஆக வேண்டும். நடிகர் விஜய் தர்மபுரியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கட்சி தலைமை வெளியிடவில்லை என்றார்.

error: Content is protected !!