Tirunelveli

News December 10, 2024

போக்ஸோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

image

நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(21), இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதி சுபத்ரா தேவி ஸ்டீபனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News December 10, 2024

நெல்லையப்பர் யானைக்கு இரத்த மாதிரி பரிசோதனை

image

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியின் உடல் நிலை நன்றாக உள்ளது. யானை குறித்து சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. யானைக்கு 10 நாட்கள் நடைபயிற்சி அளிக்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் காந்திமதிக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யானை உணவு எடுத்துக் கொள்ளும் நிலையில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 10, 2024

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரத்து

image

கிழக்கு கடற்கரை ரயில்வேயில் கருடா கோட்டத்தில் இம்மாதம் இன்டர் லாக்கிங் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், தென் மாவட்டத்தை பொருத்தவரையில் வரும் டிச.14ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக இன்று(டிச.10) ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News December 10, 2024

தாமிரபரணி குடிநீர் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

image

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி உருவாகும் பகுதியான அகஸ்தியர் அருவி பகுதியில் கழிவு நீர் கலப்பதால் தாமிரபரணி தண்ணீர் குடிநீருக்கு உகந்ததல்ல என்பது அதிர்ச்சி அளிப்பதாக நேற்று(டிச.10) மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது .தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

News December 10, 2024

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

பாளை பெருமாள் புரத்தைச்சேர்ந்தவர் ஓவலெஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது 16 வயது மகள் பாளையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று(டிச.9) மாலை பள்ளி முடிந்து திரும்பிய அவர் அங்குள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்தை சென்று உடலை மீட்டு வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

News December 10, 2024

திருநெல்வேலியில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

#காலை 10 மணிக்கு மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிந்துபூந்துறையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.#காலை 11 மணிக்கு மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.#மாலை 5 மணிக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பாளையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

News December 10, 2024

நெல்லையில் நாளை ஈ.எஸ்.ஐ குறைதீர் முகாம்

image

ஈ.எஸ்.ஐ. துணை இயக்குநர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் நெல்லை துணை மண்டலம் சார்பில் ஈ.எஸ்.ஐ. திட்ட பயனாளிகளுக்கு குறைதீர் முகாம் நாளை(டிச.,11) மாலை 4 மணிக்கு ஈ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மருத்துவ கண்காணிப்பாளர்கள், துணை மண்டல பொறுப்பு அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்கும் இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 9, 2024

நெல்லையில் 15 நாள் தடை உத்தரவு 

image

சென்னையில் சமீப காலமாக பிரிவு 41-ன் கீழ் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த போலீஸார் தடைவிதித்து வருகின்றனர். அவை தற்போது நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் டிச.9 முதல் டிச.23 வரை பொது இடங்களில் அனுமதியின்றி கூடுதல், கூட்டம் நடத்துதல், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

கடவுச்சொல்லை கடினமாக உருவாக்க அறிவுறுத்தல்

image

திருநெல்வேலி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் கடவுச்சொல் எளிதாக உருவாக்குவதின் மூலம் இணையதளங்களில் மோசடிகள் எளிதாக நடக்கின்றன. இதனால் வலுவான கடவுச்சொல் எப்பொழுதும் பெரிய சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு சிறப்பு எழுத்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

News December 9, 2024

வாட்ஸ் அப் லிங்க் மோசடி: போலீசார் எச்சரிக்கை

image

சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு வகையில் மோசடி செய்து பணத்தை திருடுகின்றனர். இந்த வரிசையில் வாட்ஸ் அப் லிங்கில் சென்று பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு ஏமாற்றப்பட்டது, அவர்களுக்கு பல மாதங்களுக்கு பின்னர் தான் தெரிய வருகிறது. ஏமாற்றப்பட்டவுடனேயே தெரிந்து கொண்டு சைபர் கிரைம் போலீசின் உதவியை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் மட்டுமே பணத்தை மீட்க அதிக வாய்ப்பு உள்ளது என சைபர் போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!