India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களில் இன்று(நவ.,21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதலால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. SHARE IT.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்பையில் 14.80 மில்லிமீட்டர், சேரன்மகாதேவியில் 12 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 11 மில்லி மீட்டர் பாளையங்கோட்டையில் 16 மில்லி மீட்டர் களக்காட்டில் 8.80 மில்லி மீட்டர், மூலக்கரைப்பட்டியில் 20 மி.மீட்டர் என கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் 214 மில்லிமீட்டர் மழை பதிவாக இருப்பதாக தகவல் இன்று தெரிவிக்கப்பட்டது.
நெல்லையில் நேற்று செய்தியாளர்களிடம் செல்வ பெருந்தகை கூறுகையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் உள்ளூர் போலீசார் விசாரணை முடிந்த நிலையில் குற்ற புலனாய்வுத் துறை விசாரணையை நடத்தி வருகிறது. தொழில் நுட்ப விசாரணையும், அறிவியல் பூர்வ விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 3 பேர் அடையாளம் காணப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
முதலமைச்சர் அறிவித்தபடி, ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வருகிற மார்ச் மாதத்திற்குள் பணி நிறைவு பெறும் என அதிகாரிகள் உறுதி அளித்து இருப்பதாக நேற்று நெல்லை வந்த பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்தார். நெல்லை – குமரி சாலையில் இது சுற்றுலா மையமாக மாறும்.
திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 முதல் 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்வது நல்லது. SHARE IT.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை நெல்லை திருவிழா 2025 நடைபெற உள்ளது. இதில் பேச்சுப்போட்டி, வினாடி வினா போட்டி ஆகியவற்றில் பங்கேற்க விரும்புவோர் நாளை முதல் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு https://tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் தமது பெயர் விவரத்தை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தொலைக்காட்சி ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி பொய்யான செய்தி வெளியிட்டு வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. விடுமுறை அளிக்கப்படும் பட்சத்தில் அது குறித்த அறிவிப்பு பேரிடர் மேலாண்மை பிரிவு மூலம் வெளியிடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்கள் தடுக்க நாள்தோறும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் காவல் உதவிக்கு இவர்களை அணுகலாம்.
நெல்லையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ளபெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் மழையின் அளவை பொறுத்து ஆற்றில் வரும் நீர் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆறில் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாலை 4 மணி வரை 95 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 20 மில்லி மீட்டரும் அதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் 16 மில்லி மீட்டரும் அம்பாசமுத்திரத்தில் 14 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 11 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.