Tirunelveli

News November 26, 2024

கேஸ் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து குறைகளைப் பதிவு செய்ய எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் 28.11.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.

News November 26, 2024

இணைய வழி மோசடி குறித்து விழிப்புணர்வு பதிவு

image

திருநெல்வேலி மாநகர போலீசார் இன்று இணையவழி குற்றங்கள் குறித்து வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், தற்போது நவீன காலத்தில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருகிறது. அனைத்து இணையவழி குற்றங்கள் மற்றும் பண மோசடி குறித்தும், சைபர் கிரைம் இலவச எண்:1930 அழைக்கவும் மேலும் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தவும் என தெரிவித்தனர்.

News November 26, 2024

நெல்லையில் அரசமைப்பு நாள் உறுதிமொழி

image

அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் அரசமைப்பு நாள் உறுதிமொழி இன்று(நவ.26) காலை 11 மணிக்கு மேற்கொள்ளப்படுகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 11 மணிக்கு அரசு அமைப்பு நாள் உறுதிமொழி மேற்கொள்ளப்படுகிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

News November 26, 2024

நெல்லை மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

#இன்று(நவ.,26) காலை 10,30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு விவசாயிகள் தொழிற்சங்க கூட இணைந்து வண்ணாரப்பேட்டையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். #காலை 7 மணி முதல் என்சிசி மாணவ மாணவிகளுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி முகாம் ஜான் பள்ளி மைதானத்தில்  நடைபெறுகிறது.

News November 26, 2024

நெல்லை பொறுப்பு அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

image

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கும் பகுதி அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிப்பட்டு, அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

News November 26, 2024

நெல்லை மாவட்டத்தில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று(நவ.,26) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHA

News November 26, 2024

நெல்லை அருகே இளைஞர் கொலை! 3 பேர் கைது

image

நெல்லை அடுத்த சுத்தமல்லியில் முத்து கிருஷ்ணன் என்பவர் நேற்று(நவ.,25) மாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுத்தமல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இக்கொலையில் தொடர்புடைய 3 பேர் அம்பாசமுத்திரம் பகுதியில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இக்கொலையில் தொடர்புடைய பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News November 25, 2024

சுரேஷ்கோபியுடன் நெல்லை காங்கிரஸ் எம்பி சந்திப்பு

image

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் போது அங்கு வந்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலா அமைச்சக இணை அமைச்சர் சுரேஸ் கோபியை, நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நேற்று இரவு மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தொடர்ந்து அவர்களை இருவரும் சிறிது நேரம் உரையாடினர். டெல்லிக்கு பின்னர் புறப்பட்டு சென்றனர்.

News November 25, 2024

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் தவிர்க்க வலியுறுத்தல்

image

திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் இருசக்கர வாகனம் மற்றும் வாகனங்கள் ஓட்டும்போது மொபைல் போன் யூஸ் பண்ணுவதால் கவனங்கள் சிதறப்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நீடிக்கின்றன. எனவே வாகனங்கள் ஓட்டும்போது மொபைல் போனை பயன்படுத்துவதை தவிர்த்து விபத்தை ஏற்படுத்தாத வண்ணம் செல்ல வலியுறுத்தினர் .

News November 25, 2024

நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

image

நெல்லை மாவட்ட மீனவர்கள் நாளை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக காற்று மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசுவதால், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என மீன் வளத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!