Tirunelveli

News November 28, 2024

நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று(நவ.,28) மாலை 4 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. #மாலை 4:30 மணிக்கு பாளையங்கோட்டை சிவன் கோயிலில் கிருத்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.#மாலை 5.30 மணிக்கு நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆறுமுக சனதியில் விசாக வழிபாடு பஜனை நடைபெறுகிறது.

News November 28, 2024

கொலையானவர் வீட்டிற்கு சென்ற பசுபதி பாண்டியன் சகோதரி!

image

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் கொலை செய்யப்பட்ட முத்துக்கிருஷ்ணன் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினரிடம் பசுபதி பாண்டியன் சகோதரி பார்வதி சண்முகம் நேற்று ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் & பார்வதி ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

News November 28, 2024

இளையோர் திருவிழா போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட அளவில் நேர யுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழா டிச.4-ம் தேதி பாளை சேவியர்ஸ் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 5 தலைப்புகளில் மாணவர்களுக்கு ஓவிய உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. பங்கேற்க விரும்புபவர்கள் டிச.2ம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் மேலும் தகவலுக்கு என் ஜி ஓ காலனியில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என அலுவலர் ஞானசந்திரன் தெரிவித்துள்ளார்

News November 28, 2024

மாநகரில் இரவு காவல் சேவை அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவுப்படி, நெல்லை மாநகர காவல் நிலைய பகுதிகளில் இன்று நவ.27 இரவு முதல் நாளை காலை வரை பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காவல் சேவை தேவைப்படும் பொதுமக்கள் அவர்களது சம்பந்தப்பட்ட கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.

News November 27, 2024

பெரியார் விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கானதந்தை பெரியார் விருது” 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 தொகையும் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. நெல்லையில் தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20.12.2024 அன்றுக்குள் கிடைக்குமாறு சமர்பிக்கலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News November 27, 2024

பெரியார் விருது: நெல்லை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கானதந்தை பெரியார் விருது” 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 தொகையும் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. நெல்லையில் தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20.12.2024 அன்றுக்குள் கிடைக்குமாறு சமர்பிக்கலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News November 27, 2024

அருந்து விழுந்த மின் கம்பிகளை தொடாதீர்

image

திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட கழகம் சார்பில் இன்று(நவ.27) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த காலகட்டத்தில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொட்டால் உயிரிழப்புகள் ஏற்படும். அதனை தவிர்ப்பதற்கு கீழே கிடக்கும் மின்கம்பிகளை தொட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

News November 27, 2024

நெல்லையில் இன்றைய நிகழ்ச்சிகள் விபரம்

image

நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்: இன்று(நவ.27) காலை 10 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. வடக்கன்குளம் பாலகிருஷ்ணா எஸ்ஏவி பள்ளி வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

News November 26, 2024

நெல்லையில் வருமான வரித்துறை சோதனை

image

நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் பிரபல சாலை ஒப்பந்ததாரர் ஆர்.எஸ் முருகன். இவர் தற்போது பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் வசித்து வருகிறார். இன்று இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நெல்லை வருமான வரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகர்பகுதியில் அவரது மகனுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .

News November 26, 2024

மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்

image

நெல்லையில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக , இன்று 26.11.2024 முதல் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன் துறை உதவி இயக்குனர் ராதாபுரம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!