Tirunelveli

News November 29, 2024

சபாநாயகர் அப்பாவு இன்று பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

image

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று(நவ.,29) காலை 9.30 மணிக்கு குட்டம் வெம்மக்குடியில் புதிய கலையரங்கை திறந்து வைக்கிறார். #காலை 10 மணிக்கு க.உவரியில் புதிய ஊராட்சி மன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். #காலை 10:30 மணிக்கு கூத்தன் குழியில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைக்கிறார். #மதியம் 12.15-க்கு பண்ணையார்குலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டுகிறார்.

News November 29, 2024

தாமிரபரணி நதியை பாதுகாக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை!

image

மாசுபட்டு வரும் தாமிரபரணி நதியை பாதுகாக்கும் திட்டம் ஏதும் உள்ளதா என நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, தாமிரபரணி நதியை பாதுகாக்கும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என கூறினார். நதிகளின் மாசுபாட்டை குறைக்கும் விதமாக நமாமி கங்கே என்ற திட்டம் செயல்படுகிறது என்று பதில் அளித்தார். SHARE IT.

News November 29, 2024

டாஸ்மாக் மதுபானங்களை தனியார் பாரில் விற்கக்கூடாது!

image

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மது பார் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகர போலீஸ் மேற்கு துணை கமிஷனர் கீதா தலைமை தாங்கி அறிவுரைகள் வழங்கி பேசினார். மது பார்களில் அரசு விதித்த கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். டாஸ்மாக் மதுபானங்களை தனியார் பார்களில் விற்பனை செய்யக்கூடாது. பார் உரிமங்களை சரியான காலங்களில் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

News November 28, 2024

வணிக கட்டிடத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் 

image

நெல்லை மாநகரில் மாநகராட்சியிடம் உரிய கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அதிகாரிகள் நேற்று அதிரடியாக சீல் வைத்தனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக நெல்லை மாநகரப் பகுதியில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட வருகிறது. அதன்படி நெல்லை சந்திப்பு பெருமாள் வீதியில் உள்ள வணிக கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

News November 28, 2024

நெல்லை: வாடகை வீடு தேடுவோர் கவனத்திற்கு..!

image

நெல்லை மாநகர காவல்துறை முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில், உங்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கும்போது அந்த வீட்டில் அந்த நபர்கள்தான் குடியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபர் அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். இது போன்று செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

News November 28, 2024

அப்பாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

image

தமிழக சட்டப்பேரவை தலைவரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்களை மீது அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

News November 28, 2024

மின் கம்பங்கள் & மின் மாற்றிகள் அருகே நிற்க வேண்டாம்!

image

நெல்லை மின் பகிர்மான வட்ட கழகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை காலங்களில் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றி அருகே பொதுமக்கள் நின்றால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்கம்பங்கள் & மின்மாற்றிகளின் அருகே பொதுமக்கள் நிற்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

News November 28, 2024

நெல்லை வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம்

image

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்ட வன அலுவலராக இருந்த முருகன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கலா இயக்குநராக இருந்த மாரிமுத்து வேலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News November 28, 2024

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் இரண்டு வருடம் சிறை

image

திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் நேற்று(நவ.27) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி, குழந்தைகளை எந்த ஒரு பணியிலும் அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது. மீறினால், வேலை அளிப்பதற்கு 50 ஆயிரம் அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

News November 28, 2024

சுத்தமல்லி இளைஞர் கொலை வழக்கில் கோர்ட்டில் ஒருவர் சரண்!

image

நெல்லை, சுத்தமல்லி கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் சேரன்மகாதேவி கோர்ட்டில் சரணடைந்துள்ளார். இளைஞர் முத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகன் நேற்று சேர்ன்மகாதேவி கோர்ட்டில் நேற்று(நவ.,27) சரணடைந்துள்ளார். முத்துகிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் 4-வது நாளாக இன்றும்(நவ.,28) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!