Tirunelveli

News December 20, 2024

நெல்லையை உலுக்கிய கொலை – 3 தனிப்படைகள் அமைப்பு

image

திருநெல்வேலி நீதிமன்றம் முன்பு இன்று (டிச.20) காலை மாயாண்டி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கொலை சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News December 20, 2024

நீதிமன்ற கொலையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்

image

நெல்லை நீதிமன்றம் முன்பு இன்று (டிச.20) காலை மாயாண்டி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நெல்லை நீதிமன்றத்தில் போலீசார் பாதுகாப்பு இருந்தும் கொலை நடந்தது எப்படி என வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதிலை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News December 20, 2024

டெல்லி போராட்டத்தில் நெல்லை எம்பி பங்கேற்பு

image

அண்ணல் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று(டிச.20) டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் கலந்து கொண்டார். இதில் பிரியங்கா காந்தி உட்பட முக்கிய எம்பிகள் பங்கேற்றனர்.

News December 20, 2024

நெல்லையில் மீண்டும் ஒரு கொலை 

image

பாளையங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை பட்ட பகலில் மாயாண்டி என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (டிச. 20) மாலை சேரன்மாதேவியில் சட்டக் கல்லூரி மாணவன் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் இரண்டு கொலைகள் நடைபெற்ற சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 20, 2024

நீதிமன்றம் முன்பு நடந்த  கொலைக்கு இபிஎஸ் கண்டனம்

image

நெல்லை நீதிமன்றம் முன்பு இன்று (டிச.20) காலை நடைபெற்ற கொலை சம்பவம் தமிழகத்தை உழுக்கியுள்ளது. இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் எங்கும் கொலை, எதிலும் கொலை என்ற இந்த திமுக ஆட்சியில் அவல நிலைக்கு இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல என தெரிவித்துள்ளார்.

News December 20, 2024

மையம் மறுத்ததை தொடர்ந்து அதிரடி ஆய்வு

image

திருநெல்வேலி மாநகர நடுக்கல்லூர், கோடகநல்லூரில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என திருவனந்தபுரம் மண்டல புற்று நோய் மையம் மறுத்துள்ளது. இந்த நிலையில் இன்று இதனை நிரூபிப்பதற்கு மருத்துவ கழிவு, ஊசி, மருந்து குப்பி, ஆவணங்களை நெல்லை அதிகாரிகள் சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News December 20, 2024

வெளியிடங்களில் WIFI வசதி பயன்படுத்தக் கூடாது

image

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சார்பில் நாள்தோறும் இணையவழி மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பண பரிவர்த்தனையின் போது பல்வேறு இடங்களில் உள்ள WIFI   பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் இணைய வழி மோசடி குற்றங்களை தடுக்கலாம் என்றனர்.

News December 20, 2024

பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க அழைப்பு

image

திருந்திய நெல் சாகுபடி முறையில் மாநில அளவில் அதிகமாக மகசூல் பெறும் விவசாயிக்கு ரொக்கப் பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் சிறப்பு பரிசாக ரூ.7000 மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும். அறுவடை செய்யும் தேதியை 15 நாட்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலேயே அல்லது தபாலையோ அனுப்பி அதற்கான ஒப்புதலை பெற வேண்டும் என நேற்று(டிச.19) நெல்லை மாவட்ட வேளாண்மை இயக்குனர் தெரிவித்தார்.

News December 20, 2024

மருத்துவக் கழிவு சிக்கிய இருவர்; திடுக்கிடும் தகவல்

image

நெல்லை அருகே சுத்தமல்லி, புத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்ததையடுத்து சுத்தமல்லியைச் சேர்ந்த மாயாண்டி(42) மனோகரன்(51) ஆகிய இருவரை போலீசார் நேற்று(டிச.19) கைது செய்தனர். மாயாண்டி 6 மாதமாக கேரளாவில் இருந்து லாரிகளை கொண்டு வந்த மருத்துவ கழிவுகளை கொட்ட ஏஜெண்டாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2024

நெல்லைக்கு இன்று பிரபல நடிகர், இயக்குனர் வருகை

image

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் இன்று (டிச.20) காலை 9 மணி முதல் “இண்டிகோ 2024” கலைத் திருவிழா நடைபெறுகிறது. இதில் கல்லூரி துறைகள் வாரியாக பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சிறப்பு விருந்தினராக பிரபல இயக்குனர் லிங்குசாமி மற்றும் பிரபல நடிகர் தர்ஷன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகிகள் செய்துள்ளனர்.

error: Content is protected !!