Tirunelveli

News November 30, 2024

கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது 

image

பேட்டை மலையாள மேடு பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவர் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேட்டை கொம்பையா என்ற கார்த்திக் (21), ஐயப்பன் என்ற சசி (19), பெருமாள் (68) ஆகியோரை துணை ஆணையர் விஜயகுமார் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவுபடி இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News November 30, 2024

நெல்லையில் 2 நீதிபதிகள் பணியிடமாற்றம்!

image

நெல்லை மாவட்ட பிரின்சிபல் நீதிபதி அமிர்த வேலு, நெல்லை தலைமை ஜுடுசியல் மாஜிஸ்திரேட் பணியிடத்திற்கு மாற்றப்பட்டார். இதுபோல், நெல்லை சிறப்பு நீதிபதி இசக்கியப்பன், நெல்லை மாவட்ட பிரின்சிபலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இவர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 32 நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 30, 2024

கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது 

image

பேட்டை மலையாள மேடு பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவர் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேட்டை கொம்பையா என்ற கார்த்திக் (21), ஐயப்பன் என்ற சசி (19), பெருமாள் (68) ஆகியோரை துணை ஆணையர் விஜயகுமார் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவுபடி இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News November 30, 2024

நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்

image

1.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் புறக்கணிப்பு செய்கின்றனர். 2. நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நாளை (நவ.30)காலை 11 மணியளவில் பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து செய்தியாளர்களை சந்திக்கிறார். 3. காலை 10:30 மணி அளவில் ராபர்ட் ப்ரூஸ் எம்பி தனியார் மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

News November 29, 2024

நெல்லை எம்பி ராபர்ட் ப்ரூஸ் நாளைய சுற்றுப்பயண விவரம்

image

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நாளைய(நவ.30) சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்  காலை 10:30 மணியளவில் பாளையில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பாளையில் உள்ள எம்பி அலுவலகத்தில் வைத்து 11 மணிக்கு கட்சியினர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.மாலை 3 மணி அளவில் தாமிரபரணி பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

News November 29, 2024

இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய 3 வாலிபர்கள் கைது

image

டவுன் பழனி தெருவில் நேற்று முன்தினம்(நவ.27) மது போதையில் நின்று கொண்டிருந்த கும்பல் அந்த வழியாக ரோந்து பணிக்கு சென்ற டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் அவர் சென்ற வாகனத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டவுன் போலீசார் நேற்று ஒரு நபரை பிடித்த நிலையில் மற்ற 3 பேரையும் நேற்று(நவ.28) இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 29, 2024

வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

image

சுத்தமல்லி இந்திரா காலனியைச் சேர்ந்த வாலிபர் முத்துகிருஷ்ணன் 25 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையான முத்துகிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இன்று முத்துக்கிருஷ்ணன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

News November 29, 2024

நெல்லையில் கருத்தரங்கு: ஐகோர்ட் நீதிபதி பங்கேற்பு

image

நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் ‘சட்டமும் சமுதாயமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நாளை(நவ.,30) காலை 10.30 மணிக்கு வக்கீல் சங்க கட்டடத்தில் நடைபெறுகிறது. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி சாய் சரவணன் தலைமை தாங்குகிறார். வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன் வரவேற்புரை ஆற்றுகிறார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் நீதிபதி சிவஞானம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

News November 29, 2024

தைப்பூசம்: நெல்லை ரயில்கள் மேல்மருவத்தூரில் நிற்கும்!

image

தைப்பூச பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக டிசம்பர் 14 முதல் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நிஜாமுதீன் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மேல்மருவத்தூரில் 2 நிமிடம் நிற்கும். நெல்லை வழியாக செல்லும் அந்தியோதயா ரயில் 14 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை 2 நிமிடம் நின்று செல்லும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. SHARE IT.

News November 29, 2024

வாழையில் இலை புள்ளி நோயை கட்டுப்படுத்த டிப்ஸ்!

image

களக்காடு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சண்முகநாதன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், களக்காடு வட்டாரத்தில் 3000 ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. ஈரப்பதம் அதிகரிக்கும்போது இலை புள்ளி நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பக்கக் கன்றுகளை அகற்றுதல், தோட்டத்தில் களை இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல், தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்துதல் ஈரப்பதத்தை குறைக்கும் என்றனர்.

error: Content is protected !!