India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரியை சேர்ந்த சிபு ஆண்டனிக்கு, நெல்லை ராதாபுரம் அருகே கைலாசபேரியில் 60 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலத்தை விற்பது தொடர்பான பிரச்னையில், டான்போஸ்கோ என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிபு ஆண்டனியை கடத்தி மிரட்டி 30 சென்ட் நிலத்தை எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிபு ஆண்டனி அளித்த புகாரின்பேரில், அதிமுக பிரமுகர் சுப்பிரமணி & டான் போஸ்கோ ஆகியோரை போலீசார் நேற்று(டிச.,1) கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் நேருவை ஆன்லைன் செயலி மூலமாக சில வாலிபர்கள் தொடர்பு கொண்டு நெல்லை வண்ணார்பேட்டைக்கு அழைத்து வந்து ஒரு அறையில் அடைத்து வைத்து ரூ.1 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர். இது குறித்து நேரு பாளை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பணம் பறித்த கும்பலில் 5 பேரை இன்று கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டாரம் பள்ளமடை, பள்ளிக்கோட்டை, பிள்ளையார் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூ விளைச்சல் மேற்கொள்கின்றனர். கடந்த வாரம் முகூர்த்தம் காரணமாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1500 வரை விலை போனது. இந்நிலையில் மொத்த விற்பனை சந்தைகளில் இன்று ஒரு கிலோ மல்லிகை ரூ.800 விற்பனையானது. இதுபோல் பிச்சிபூ விலை ஒரு கிலோ ரூ.500 க்கு விற்கப்பட்டது.
நெல்லையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாள்தோறும் மாவட்டம் முழுவதும் பதிவாகும் மழை அளவு விபரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களாக மழை குறைந்தாலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று(நவ.30) மாவட்ட முழுவதும் ஒரு இடத்தில் கூட மழை பெய்யாததால் இன்று(டிச.01) வெளியிடப்பட்ட மழை அளவு விபரத்தில் அனைத்து பகுதிகளிலும் பூஜ்ஜியம் காட்டப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(நவ.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-ஃபார்ம் டி-ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் உடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க நேற்று(நவ.30) கடைசி நாள் அறிவிக்கப்பட்ட நிலையில், டிச.05ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.
நெல்லை வழியாக இயக்கப்படும் தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (வண்டி எண்:06012/06013) மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு இதற்கான முன்பதிவு தொடங்குகிறது.வள்ளியூர், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக இந்த ரயில் செல்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ள நிலையில், இந்த ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக இன்று காலை 7 மணி நிலவரப்படி சேரன்மகாதேவியில் 1.20 மிமீ, நாங்குநேரியில் 3 மிமீ, களக்காடு பகுதியில் 2.20 மிமீ ஆக மொத்தம் நெல்லை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 6.40 மிமீ மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று(நவ.30) தகவல் வெளியிட்டுள்ளது.
நெல்லை மண்டல பொருநை புத்தக கண்காட்சி திருவிழாவின்போது கலை பண்பாட்டு துறை சார்பில் ஓவிய சிற்பக்கலை கண்காட்சி நடைபெற உள்ளது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்ட ஓவிய சிற்ப கலைஞர்கள் தங்கள் கலை படைப்புகளை காட்சியாக வைக்கலாம். சிறந்த கலை படைப்புகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு நெல்லை மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை டிசம்பர் 15க்குள் தொடர்பு கொள்ளலாம்.
திசையன்விளையில் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.44.76 லட்சத்தை நிறுவன ஊழியர்களே நூதனமாக மோசடி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் கடன் பிரிவு அலுவலர் மற்றும் கள அலுவலர் என இரண்டு பேர் மீது நேற்று(நவ.29) போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#நெல்லையில் இன்று(நவ.,30) காலை 11 மணிக்கு நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லை பிரஸ் கிளப்பில் நடைபெறுகிறது. #காலை 10.30 மணிக்கு பாளையங்கோட்டை சேவியர்ஸ் பள்ளி வளாகத்தில் உயர்கல்வி கருத்தரங்கு நடைபெறுகிறது.#பிற்பகல் 3 மணிக்கு தாமிரபரணி கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நெல்லை எம்பி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.