India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் மழை குறைவாக பெய்த நிலையிலும் மாவட்டம் முழுவதும் 11,827 ஹெக்டேர் பயிர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் விசார பருவத்தில் 94.10 ஹெக்டேர் பரப்பில் நெற் பயிருக்கும், 6,714 ஹெக்டேர் உளுந்து பயிருக்கும், 265 ஹெக்டேர் மக்காச்சோள பயிருக்கும் இதுவரை பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என நெல்லையில் நேற்று (டிச.20) வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் மணிகண்டன் என்ற சட்டக்கல்லூரி மாணவர் நேற்று(டிச.20) படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிவராமன் என்பவரது கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக 4 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகள் 4 பேரையும் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் இன்று(டிச.21) தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிரையோஜெனிக் இன்ஜினில் சோதனை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரோ மையத்தில் மனிதனை விண்ணிற்கு அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்திற்கான சிஇ 20 கிரையொஜெனிக் இன்ஜின் பரிசோதனை 200வினாடிகள் நேற்று(டிச.20) வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திருவனந்தபுரம் ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் காணொளி காட்சி மூலம் கண்டறிந்தார்.
நெல்லை மாவட்டத்தில் முக்கிய குளங்கள் தூர்வாரும் பட்டியலை என்னிடம் கொடுங்கள். அதற்கு உடனடியாக நிதி பெற்றுத் தர நான் தயாராக இருக்கிறேன். அவசரமாக உடனடியாக தூர் வாரும் குளங்களின் பட்டியலை அறிக்கையாக தருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என கலெக்டர் கார்த்திகேயன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்தார்.
பாளையங்கோட்டை நீதிமன்றம் முன்பு வாலிபர் ஒருவர் நேற்று(டிச.20) வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஷ்குமார் மீனா இந்த சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேடிக்கை பார்த்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா கூறுகையில், கொலை செய்யப்பட்ட மாயாண்டி கொலை வழக்கு உள்பட சிறு வழக்குகளில் தொடர்பு உடையவர். கொலை வழக்கு தொடர்பு உடைய நபர்களை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்வது வழக்கம். இதனால் பல குற்ற சம்பவங்களை போலீசார் தடுத்துள்ளனர். மாயாண்டி கொலை சம்பவத்தில் பாதுகாப்பு பணி போலீசார் வேடிக்கை பார்த்தனரா? என விசாரணை நடத்தப்படும் என்றார்.
வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நேரம் மாற்றப்படுகிறது. நெல்லையிலிருந்து இரவு 8.05 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்படும். இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணி போர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கலைஞர் கைவினை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.In/kkt என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.
நெல்லையில் கொட்டப்பட்டுள்ள கேரளா மருத்துவ கழிவுகள் அபாயகரமானது இல்லை என கேரளா அதிகாரிகள் குழுவினர் இன்று (டிச.20) தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அபாயகரமானதில்லை என்றால் இவ்வளவு செலவு செய்து கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டப்பட காரணம் என்ன? என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேரளா அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.
Sorry, no posts matched your criteria.