Tirunelveli

News December 3, 2024

நெல்லை அருகே வீட்டுத் தோட்டத்தில் அபூர்வ ஆமை!

image

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் ஜெயா(35). இவரது வீட்டு தோட்டத்திற்குள் அபூர்வ வகையை சேர்ந்த நட்சத்திர ஆமை ஒன்று நேற்று புகுந்துள்ளது. இதை பலரும் சென்று வேடிக்கை பார்த்தனர். தொடர்ந்து ஆமை இருப்பது குறித்து அவர் அளித்த தகவலின்பேரில் வனத்துறையினர் சென்று அந்த நட்சத்திர ஆமையை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.

News December 3, 2024

நெல்லையப்பர் கோயிலில் மகா வேள்வி!

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக ஜனவரி 5ஆம் தேதி மகா மிருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி நடைபெற உள்ளது. தொடர்ந்து 24வது ஆண்டாக இந்த வேள்வி நடைபெற உள்ளது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து இந்து ஆலய பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். SHARE IT.

News December 3, 2024

பாளையங்கோட்டையில் அரங்கேறியது ஆணவக் கொலை?

image

பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள வீட்டில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜயகுமார்(24) என்ற இளைஞர் நேற்று(டிச.,2) படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த சரோஜினி என்பவரை பார்க்க வந்தபோது அவரது சகோதரர் தனது நண்பருடன் சேர்ந்து வெட்டியது தெரியவந்தது. வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.

News December 3, 2024

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்!

image

நெல்லையில் இன்று(டிச.,3) காலை 10.30 மணிக்கு மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பிரதான கட்டடத்தில் நடைபெறுகிறது. #காலை 10:30 மணிக்கு ஐகிரவுண்ட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. #மாலை 6 மணிக்கு கேடிசி நகர் செந்தில் நாயகம் அரங்கில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை கூட்டம் சொற்பொழிவு நடக்கிறது.

News December 2, 2024

நெல்லை மாவட்டத்தில் இரவு காவல் அதிகாரிகள் விவரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் இன்று(டிச.02) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் விபரம் மற்றும் கைப்பேசி எண் விவரம் அறிவிக்கப்பட்டது. இரவு காவல்துறை சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

News December 2, 2024

பாதுகாப்பே முதன்மை – நெல்லை மாநகர காவல்துறை

image

நெல்லை மாநகர காவல்துறையினர் பொதுமக்களுக்கு பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும், சாலை விதிகளை மதிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(டிச.02) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், பாதுகாப்பே முதன்மை, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வருபவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

News December 2, 2024

கார்த்திகை தீப சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நெல்லை, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேவைக்கு ஏற்ப திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது. 12ம் தேதி மாலை சிறப்பு பஸ்கள் புறப்பட்டு 14ஆம் தேதி இரவு மீண்டும் திரும்ப வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

News December 2, 2024

935 மெட்ரிக் டன் உரமூட்டை இன்று நெல்லை வருகை

image

நெல்லை மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி தொடங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு மேலும் 935 மெட்ரிக் டன் உரமூட்டை இன்று(டிச.02) ரயில் மூலம் கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் நெல்லைக்கு வந்தது. அங்கிருந்து லாரிகளில் எடுத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்க கொண்டு செல்லப்பட்டது. உரங்கள் தட்டுப்பாடு என்று கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News December 2, 2024

இன்று முதல் குமரி வரை செல்லும் நெல்லை ரயில்

image

நெல்லை – நாகர்கோவில் பயணிகள் (பாசஞ்சர்) ரயில் இன்று(டிச.02) முதல் அடுத்த 6 மாதங்களுக்கு கன்னியாகுமரி வரை இயக்கப்படவுள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பல்வேறு விரிவாக்க பணிகள் இன்று தொடங்க உள்ளதால் அங்கு நிறுத்தப்படும் ரயில்களை குமரி வரை நீட்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் 6 மாதங்களுக்கு குமரிமுனை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 2, 2024

புயல் காரணமாக வந்தே பாரத் ரயில் இன்று ரத்து

image

பெஞ்சல் புயல் மழை எதிரொலியாக விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலம் எண் 452 ல் வெள்ளநீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுவதால் திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 20666 இன்று(டிச.02) காலை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் 20627, ரத்து செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!